Tuesday, April 2, 2013

#தமிழ்தேசியம் பேசும்தகுதி தலித்துகளுக்கே உள்ளது. தமிழர் என்ற வார்த்தையே, திரமிளர் என்று மாறி, திராவிடராக மாறியது. இது தமிழ் பேசாத அம்பேத்கர் சொன்னது. சாக்கிய பறையானார், தமிழ்தேசியத்தை எதிர்க்க வேறு காரணமுள்ளது. அவர், பௌத்தத்தையும், சிங்களத்தையும் ஒரே வரையறைக்குள் வைத்து பார்ப்பவர். பாவம் புத்தன். அவனுக்கு இப்படி ஓர் சோதனை.#

அதே அண்ணல் அம்பேத்கர்தான் சொன்னார் தீண்டத்தகாதவர்கள் திராவிடர்கள்  (தமிழர்கள்) என்றால் பார்பனர்களும் திராவிடர்கள்  (தமிழர்கள்),  பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டத்தகதவர்களும் ஆரியர்கள் என்று. இங்கு நடக்கும் யுத்தம் என்பது ஆரியருக்கும் திராவிடருக்கும் இடையில் நடக்கும் யுத்தம் இல்லை புத்ததுக்கும் இந்துதுவதுக்கும் இடையில் நடக்கும் யுத்தம். இன்று உலகம் முழுக்க முப்பது கோடி சாக்கிய (தலித்) மக்கள் உள்ளனர் அவர்களை தமிழர் சிங்களர் தெலுங்க கண்ணடகர் ஆரியர் திராவிடர் என்று கூறு போடவேண்டாம். தமிழ் பேசும் ராமதாசுக்களை விட சிங்களம் பேசும் தீண்டப்படாத மக்கள் என் உறவுகள். அண்ணல் அம்பேத்கரை பொறுத்தவரை மொழி பேசும் மாநிலங்கள் (தேசங்கள்) அந்த மொழி பேசும் சிறுபான்மை மக்களான சாக்கிய (தலித்) மக்களுக்கு எதிரானது. அன்றைய காலகட்டத்தில் ராமசாமியும் ராஜகோபாலும் மொழி வாரி மாநில அடிப்படையில் உடன்பட்டபோது, அண்ணல் அம்பேத்கர் ராஜகோபாலின் மொழி வழி / தென்னாட்டு சித்தாந்தத்தை எதிர்த்தார்.  அண்ணல் அம்பேட்கரை உங்கள் மொழி தேசிய ஆதிக்க ஜாதி அரசியல் சித்தாந்தத்துக்கு விலை பேச வேண்டாம். தலித் விடுதலை என்பது சாக்கிய (தலித்) மக்களின் ஒற்றுமையில் உள்ளது. சாக்கிய (தலித்) சித்தாந்தம் என்பது திராவிட தமிழ் தேசிய சித்தாந்தங்களுக்கு  எதிரானது. திருமாவின் தமிழ் தேசிய திராவிட அரசியல் எமது மக்களை தமிழ் திராவிட ஆண்டைகளுக்கு வியாபார பொருள் ஆக்குகிறது. தமிழ் தேசியம் என்பது மொழி அடிப்படையில் உலகம் முழுக்க சிதறி உள்ள எமது தலித் குடிகளை மேலும் சிதறடிக்கும் சூட்சுமம். கடந்த முப்பது வருடம் புலிகள் ஆண்ட ஈழம் திருமா சொல்வது போல ஜாதியை ஒழிக்க வில்லை நமது மக்களை விடுவிக்கவில்லை முன்னேற்றவில்லை. அவர்கள் இந்தியாவில் தமிழ் நாட்டில் உள்ள தலித் மக்களை விட பின்தங்கி உள்ளனர். இந்தியாவில் நூற்றுக்கணக்கான மில்லியனர்களையும் பில்லியனர்களை நாம் உருவாக்கியுள்ளோம். ஆயிரக்கணக்கான டாக்டர்கள், இஞ்சினியர்கள், ஐ எ எஸ் அதிகாரிகள், எம் பிக்கள் எம்எல் ஏக்கள் என்று சமூகம் முன்னேறி போய்க்கொண்டு இருக்கிறது. சென்னையில் பல கம்பெனி முதலாளிகள் சாக்கிய (தலித்) மக்கள். தமிழ் சினிமா உலகில் 45 இசையமைப்பளர்கள் தலித் மக்கள். ஈழம் அங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறது. இங்கு இருப்பது போல ஜாதி கொடுமை அங்கு இல்லையாம். ஆனால் இன்னும் யாழப்பானத்தில் 100% மலம் அள்ளும் வேலை செய்பவர்கள் பறையர்களாம். சரி இந்தியாவிலும் தலித் மக்கள் தானே அள்ளுகிறார்கள் என்று கேட்பீர்கள். என் கேள்வி எந்த விதத்தில் புலிகளின் ஈழம் இந்துத்துவ இந்தியாவை விட பெட்டெர். உங்களால் அங்கு உள்ள தலித் மில்லியனர் பில்லியனரை காட்ட முடியுமா? இங்கு உள்ளது போல சக்தி வாய்ந்த தலித் அமைப்புகளை அங்கு கட்ட முடியுமா? இங்கு உள்ளது போல பெரிய கம்பெனிகளின் முதலாளிகளை அங்கு காட்ட முடியுமா? அங்குள்ள பாடசாலை அதிபர்களாக எத்தனை தலித் மக்கள் உள்ளனர் என்று சொல்ல முடியுமா? எத்தனை சதவிகிதம் தலித் மக்கள் நில உடமையாளர்கள் என்று சொல்ல முடியுமா? மலையகத்தில் வாழும் நமது சொந்தங்கள் அடிப்படை அரசியல் உரிமை கூட இல்லாமல் அல்லல் படுகின்றனர். அதையெல்லாம் உங்கள் திருமா அறியாமல் உள்ளாரா? இல்லை தெரிந்தும் புலிகள் ஜாதியை ஒழித்து விட்டார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்கிறாரா? கடந்த முப்பது வருடம் எம் மக்கள் புலிகளின் ஆயுத தீவிரவாதத்தால்  எழுத்துரிமை பேச்சுரிமை இல்லாமல் இருந்தனர். அதற்க்கு சாட்சி போர் முடிந்ததும் புலிகள் வீழ்ந்ததும் ராஜபக்சேக்கு நன்றி சொல்லி தலித் முன்னேற்ற முன்னணி நோட்டீஸ் போட்டு சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டது. ஒரு தமிழனாக இருந்து பார்த்தால் இலங்கை தலித் மக்களின் வலி தெரியாது பறையனாக இருந்து பார்த்தால் தெரியும்.  

No comments:

Post a Comment