Tuesday, April 2, 2013

இப்படி வீரமும் விவேகமும் நிறைந்தவர்கள் யாருக்கும் தலைவனங்காத அஞ்சாத சிங்கங்கள் கட்டி காத்த இயக்கம் தலித் இயக்கம். இன்னைக்கு தமிழ் தேசியத்துக்கும் திராவிடத்துக்கும் ஜால்ரா அடிக்கும் கூட்டம் நாங்கதான் சேரிகளில் இயக்கம் கட்டினோம் நாங்க இல்லைன்னா ஒன்னும் இல்லைன்னு கஞ்சா பணத்தில் போஸ்டர் போட்டு புலி தேசிய பிரச்சாரம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். 

#முதன் முதலில் அகில இந்திய அளவில் " தலித் அரசியல் "இயக்கத்தை தோற்றுவித்தவர். 'தலித்கள் தங்களுக்கென ஓர் அரசியல் அமைப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்" என்ற கருத்தை முதலில் விதைத்தவர். "சென்னை ஆதி திராவிட மகா ஜன சபையின் செயலாளராக (1892) இருந்தார். இந்திய முழுவதும் 537- பொது கூடங்கள் 106 - மாநாடுகள் நடத்தி தலித்களை விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலித்களை இழிவான பெயரில் அழைப்பதை எதிர்த்து "ஆதி திராவிடர்" என அழைக்க வேண்டுமென (1922) கேட்டுக்கொண்டார். நீதி கட்சி தலைவர்களில் ஒருவராக செயல் பட்டார் இந்திய அளவில் தலித் ஒருவர் (1919) சென்னை மாகான சட்ட மேலவை உறுபினராக, இந்திய பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார் *#

No comments:

Post a Comment