Wednesday, April 17, 2013


#நீங்கள் என்ன தேசியவாதி?அண்ணல் அம்பேதகர் என்ன தேசியவாதி?#

ஊரான் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் எங்களுக்கு அனுபவிக்கும் உரிமை உண்டு என்பதே எங்கள் தேசியம். அதுக்கு பேரு சேரி தேசியம்னு கூட சொல்லலாம். 

#அண்ணல் அம்பேத்கரின் பெயரை சொல்லி தமிழ் மக்களை இல்லாத சாக்கிய அடையாளத்தை சொல்லி பிரிக்க பார்க்கிறீர்கள்.#

எப்படி இருக்குது பாருங்க தமாசு. ஊருக்கும் சேரிக்கும் இடையில் சீன பெருஞ்சுவரை விட பெரிய சுவர். இராணுவமே இல்லைன்னாலும் ஊருக்கு உள்ளே கால் எடுத்து வைக்க முடியாத அளவுக்கு முள்வெளிகள். பாகிஸ்தானி இந்தியனுக்கு இடையில் கூட ஒரு பரஸ்பர உறவு இருக்கும் ஒரே கிராமத்துல இருக்குற ஜாதி தமிழனுக்கும் நமக்கும் எதிரி என்கிற உறவு கூட இல்லை. கிராமத்தை விட்டு வெளியே போனா  பக்கத்து கிராமத்து ஜாதி இந்து கூட நல்லா பேசுவான் ஆனா சொந்த கிராமத்து ஊரான் மருந்துக்கு கூட நம்மை பார்த்து சிரிக்க மாட்டுறான் அப்படி வாழ்ந்துட்டு இருக்கோம். இந்த விளக்கென்னைகளை நாம எதோ பாம் போட்டு பிரிக்கிரோமாம். முதல்ல எவனடா தூ மில்லன். தூ தூ தூ நீங்களும் உங்க தமிழ் இனமும்.    


#பிரபகரன் தன் சொந்த மண்ணில் சாதியை ஒழித்து காட்டியிருக்கிறார்.சாதி கடந்த திருமணங்களை நடத்தி காட்டியிருக்கிறார்.தமிழன் என்ற ஒற்றை உணர்வில் சாதியத்தை நொறுக்கியிருக்கிறார்.ஆனால் உங்களில் குடியரசு கட்சியையோ இல்லை BSP கட்சியையோ சேர்ந்த எவனாவது தலித் ஜாதிகளுக்கிடையேயே கலப்பு திருமணம் செய்து தலித்துகளை(உங்கள் சாக்கியர்களை) எல்லாம் ஒரே அடையாளத்தின் கீழ் கொண்டு வந்தானா?#

ஆட்ரா ராமா ஆட்ரா ராமா அப்படின்னு குரங்காட்டி குச்சிய ஆதனா அட நாங்க என்ன்ன திருமா கூட்டமா? பிரபாகரன் ஜாதிய ஒழிச்சாராம். எப்பாப்பா ஒழிச்சாரு. எங்க ஜனரேஷனாதான் ஒழிச்சாரு. எங்க குழந்தைகள் கையில் துப்பாக்கியும் கழுத்தில் குப்பியும் கொடுத்து எங்கள் இனத்தை அழித்தவர்தான் உங்கள் பிரபாகரன். அடையாளம் தெரியாமல் எங்களோடு சேர முடியாமல். ஜாதி இந்துக்களுடன் சேர முடியாமல் அங்க ஒரு முட்டு இங்க ஒரு முட்டு வாங்கிக்கொண்டு இருக்கும் என் மக்களை நினைத்தாலே வேதனையா இருக்கு. அண்ணல் ஒருவர்தான் எங்கள் வழி காட்டி இதை உணர்ந்தவர்கள்தான் இந்த சமூகத்தின் வழி காட்டிகள். 

#தேசம், தேசியம், தேசிய இனம், இவற்றுக்கான வரையறைகளை தெரிந்த பின்பு விவாதிக்காவும்.நினச்ச மாதிரியெல்லாம் உங்க இஷ்ட்டத்துக்கு ஒரு தேசியம் வைச்சிக்க முடியாது.
கருத்தைப் பதிய இயலவில்லை. மீண்டும் முயற்சி செய்க.#

எவனோ வரையறை வைப்பான் நாங்க அவனுக்கு கூத்தாடுவோமா. தேசியத்தின் வரையற நாங்க வைக்கிறோம். இந்தியாவில் சேரி தேசியம் ஊர் தேசியம் என்று இரண்டு தேசியங்கள்தான். உங்களுக்கு நாங்கள் தீண்டா மக்கள். எங்களுக்கு நீகள் தீண்டா மக்கள். இந்த மண்ணின் உரிமைகள் சரி பாதியாக் பிரித்து கொடுக்கப்பட வேண்டும். சும்மா திராவிடன் தமிழன் எனும் ஜுஜுபி எல்லாம் எங்க கிட்ட வேகாது. 


#தமிழனை பௌத்தத்திற்கெதிரானதாகவும்,பௌத்தத்தை தமிழனுக்கு எதிரானதாகவும் சித்தரிக்கும் சிங்கள கைகூலியே.#

எப்புடி கதை சொல்றாங்க பாருங்க. தமிழா நாடு முழுக்க புத்தர் சிலைகள். புத்த விகார்கள். தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான புத்த பிட்சுக்கள். அவுக்களுக்கு எல்லாம் இந்த தமிழ் தேசிய புலிகள்தான் கடந்த ஆயிரம் வருஷமா ஆதரவு கொடுத்து தமிழ் நாட்டில் புத்தம் செழிக்க உதவி செய்து வருகின்றனர். இப்ப நாம வந்து இவுங்களை புத்த குடிகளிடம் இருந்து பிரித்து அரசியல் செய்கிறோம். அட வெண்ணைகளா ஆயிரம் வருடம் உங்கள் மத வெறிக்கும் ஜாதி வெறிக்கும் எதிராக போராடிக்கொண்டு இருக்கிறோம் மள்ளு கட்டிக்கொண்டு இருக்கிறோம். இப்பதான் குறிஞ்சி பூ பூக்கிரமாதிரி அங்க ஒன்னு இங்க ஒண்ணுன்னு வருது. அதையும் திராவிடம், தமிழ் தேசியம், நாத்தீகம் வெங்காயம் விளக்கெண்ணை, ராமசாமி வழி, சிங்கள எதிர்ப்பு தேரவாத எதிர்ப்பு என்று சொல்லி முளையிலேயே கிள்ளி எறிந்து கொண்டு இருக்கிறீர்கள். சுற்றுலாக்கு அப்பாவி பிக்கு  வந்தா அவரை  உடைய கூட போட்டு சுதந்திரமா நடமாட விடாம பேன்டு சட்டைக்கு மாத்தி அனுப்பி வைக்குறீங்க. நீங்க பவுத்தத்துக்கு ஆதரவா இருந்தீங்க நாங்க வந்து உங்களை பிரிக்கிரோமா? 

No comments:

Post a Comment