Tuesday, April 2, 2013

உங்க பிரச்சனை தெலுங்கும் கன்னடனும் மாறி மாறி நாட்டை ஆளுகிறார்கள் என்று. எங்க பிரச்சனை ஓவ்வொரு கிராமத்திலும் பண்ணைகளாக நிலச்சுவந்தார்களாக ஆண்டைகளாக ஆண்ட பரம்பரை தமிழர்கள் எங்களை ஆண்டு கொண்டு இருக்கிறாகள் என்றுதான். முதலில் விடுதலையை சமத்துவத்தை நீதியை கிராமதிற்கு கொண்டு வாருங்கள். நானும் நீயும் கிராமத்தில் ஒன்னாவோம். அப்புறமா சேர்ந்து போயி தெலுங்கனையும் கன்னடனையும் நாட்டை விட்டு விரட்டுவோம். வெள்ளைக்காரன் இருந்த பொது கிடச்ச நியாயம் இந்திய கொள்ளைகாரர்கள் வந்த போது கிடைக்கவில்லை. அது போல கன்னட தெலுங்கர் ஆளும்போது கிடைக்கும் நியாயம் தமிழ் கொள்ளையர்கள் தமிழ் கிரிமினல் பரம்பரை ஜாதிகள் ஆளும்போது நிச்சயம் கிடைக்காது. எங்களை பொறுத்தவரை ஒன்னு நாம ஒண்ணாகணும் இல்லை மீண்டும் வெள்ளையன் வரணும். நீங்க இப்ப கிராமத்தை ஆளும் அழகு எங்களுக்கு தெரியும் அதனாலே நிச்சயம் நாட்டையும் ஆளும் நிலைக்கு வந்துட கூடாது. முப்பது வருஷம் வன்னி காட்டை ஆயுதம் தங்கி ஆண்ட லட்சணம் தெரியும். இப்போ இருக்கும் அடிப்படை ஜன நாயகம் கூட இருக்காது. உங்கள் ஜாதி நாயகம் தான் இருக்கும்.

No comments:

Post a Comment