Thursday, April 4, 2013


~ வந்தேறிகள் ~

இந்திய தேசிய ஆரிய இந்து கூ முட்டைகள் ஆரம்பித்த "வந்தேறி" பாடம், ஆரியர்களை எதிர்க்க திராவிட கூ முட்டைகளால் மெருகூட்டப்பட்டு இப்போது தமிழ் தேசிய கூ முட்டைகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது

~ வந்தேறிகள் ~

இந்திய தேசிய ஆரிய இந்து கூ முட்டைகள் ஆரம்பித்த "வந்தேறி" பாடம், ஆரியர்களை எதிர்க்க திராவிட கூ முட்டைகளால் மெருகூட்டப்பட்டு இப்போது தமிழ் தேசிய கூ முட்டைகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. \


ஜாதி இந்துக்களுக்கு ஜி போடும் இந்திய தேசிய கூட்டமும், கலைஞர், அம்மா, பெரியார், அண்ணா (பிரதர்) என்று அழைக்கும் திராவிட கோட்டமும் அவர்களுக்கு ஜால்ரா போடும் சிறுத்தைகள் கூட்டமும் அண்ணல் அம்பேத்கரை  அம்பேத்கர் என்று ஒருமையில்தானே அழைகின்றனர். 

#தமிழகத்தில் உண்ணாவிரதம் ஒரு மோஸ்த்தராக மாறிக் கொண்டிருக்கிறது. கடவுளுக்கு காணிக்கை செலுத்த ஏதாவது ஒரு நாளில் உண்ணாவிரதம் இருந்து பழக்கப்பட்டவர்கள் இப்படித்தான் இருப்பார்களோ? 2009 ஆம் ஆண்டு முள்ளி வாய்க்கால் போரின்போது பசியடங்கி இருந்தவர்கள் இப்போது பசியடக்க முயற்சிப்பது ஏனோ? கொஞ்சம் காத்திருந்தால் சூன் மாதம் வந்துவிடும் அப்போது தொடங்கலாம். தலித்துகளின் பிரச்சினையையும் ஐநா மனித உரிமைகள் அவை பேச இருக்கிறது. அப்போது எப்படி தமிழகம் நடந்துக் கொள்கிறது என்பதைப் பார்க்கலாம்..#


என்ன சன்னா? மாணவர் எழுச்சிக்கு குரல் கொடுத்துக்கொண்டு இருந்தீர்கள். நான் கூட முழுக்க தமிழ் தேசியா வியாதியில் பாதிக்கப்பட்டு விட்டீர்களோ என்று நினைத்தேன். என்ன தலைமை மாத்தி யோசிக்க ஆணை பிறப்பித்து விட்டதா? 

" ஆண்டைகளுக்கு கிடைத்த திறமையான அடிமைகள்"

என்னுடைய வேண்டுகோள் 

மாணவர்களோடு இருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த மாணவர்களிடம் சொல்லி ஒரே ஒரு கோரிக்கையை இணைக்க சொல்லுங்கள். ஐநா சபையில் உள்ள தலித்துக்களுக்கான தீர்மானம். சாதிய கொடுமையும் இனக் கொடுமையே என்று ஐ நா அங்கிகரிக்க வேண்டும் என்பதுதான் அது. இந்த தீர்மானத்தை மாணவர்கள் ஏற்பார்களா?


என்னை பொறுத்தவரை கருணாநிதியும் ஜெயாவும் ஒண்ணுதான். சிறுத்தைகள் எனும் பலம் பொருந்திய அடிமை கூட்டம் கருணாவின் பின்னால் இருக்கிறது. அதனால் சம படுத்த சில நேரம் ஜெயா பக்கம் உள்ள அடிமைகளை ஆதரிக்க வேண்டியுள்ளது. 


சிறுத்தைகள் தான் நாங்கள் பறையர்கள் அல்ல தமிழர்கள் நாங்கள் பொது நீரோட்டத்தில் கலந்து விட்டோம். எங்கள வேலை பாறையர் விடுதலை அல்ல தமிழர் விடுதலை எங்கள் வேலை சேரியை மீட்டெடுப்பது இல்லை ஈழத்தை மீட்டெடுப்பது என்று கிளம்பிவிட்றார்களே. அப்புறம் எதுக்கு உங்களுக்கு பறையர் அடையாளம். 


சிறுத்தைகள் பலம் பொருந்திய திறமையான அடிமைகள். உண்மையில் கருணாநிதி திறமைசாலிதான் ஒரு சீட்டு கொடுத்துட்டு அவர் இதயத்தில் மிகப்பெரிய இடம் கொடுத்து இந்த அடிமைகளை வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறார். 


#முதலில் உங்கள் பெயரை மாற்றுங்கள்#

தமிழ்  பறையன்னு போட்டுக்கொண்டு தமிழ் தேசிய ஆண்டைகளுக்கு அடிமை வேலை செய்யவா? திராவிட பறையன்னு போட்டுக்கொண்டு திராவிட பன்னையார்களுக்கு அடிமை வேலை செய்யவா? 

#உங்கள் பெயரை மாற்றுங்கள்#

தமிழ் பெயர் வச்சுக்கணுமா? திராவிட பெயர் வச்சுக்கணுமா? யார் அதிக ரேட்டு கொடுப்பாங்கனு  கேட்டு சொல்லுங்க. தமிழ் பெயர்னா கஞ்சா பணம். திராவிட பெயர்னா ஊழல் பணம் எங்க அதிகம் கொடுக்கிறாங்கன்னு கேட்டு சொல்லுங்க. 



# தமிழீழம் சார்வதேச அரசியலாக,பிரச்சனையாக மாறவேண்டும்-தலைவர் தொல்.திருமா #

 முப்பது லட்சம் பேர் கூட இல்லாத தமிழ் ஈழ பிரச்சனை சர்வதேசிய பிரச்சனை எனில் முப்பது கோடியுள்ள சாக்கிய (தலித்) மக்களின் பிரச்சனை என்ன பிரச்சனை ?  


முப்பது கோடி சாக்கிய (தலித்) மக்களிடம் இருந்து  நம்மை பிரித்து தமிழ் பேசுகிறோம் என்று கரணம் காட்டி 5 கோடி  ஜாதி தமிழர்களுடன்  நம்மை ஜாதி சாக்கடையில்  இணைப்பது  தமிழ்  தேசியம். 

#திட்டம் போட்டுத் தருபவர்களும் உயர்ஜாதி பிராமணர்கள்தாம்.#

#ஈ.வெ.ரா. பெரியார் அய்யா மட்டும் இல்லாமல் போய் இருந்தால் தமிழகத்தில் பல பேர் கடைகளில் மட்டுமே வேலைப்பார்த்துக்கொண்டு இருந்திருப்பார்கள் அப்படி இல்லாவிட்டால் அவர்களுடைய குலத்தொழிலை மட்டுமே கவனித்துக் கொண்டு இருந்திருப்பார்கள். #

எப்புடி கீது பாருங்கள். இவுங்க போட்ட பிச்சையில்தான் நாம் வாழ்கிரோமாம். அட வெண்ணைகளா உங்க அட்களை ஒழுக்கமா இருக்க வைக்க நாங்க போராடிய போராட்டத்தில் முளைத்த செடிதான் இந்த ராமசாமியும் திராவிட பகுத்தறி இயக்கமும். நாங்க போராடாமல் தூங்கிட்டு இருந்து இருந்தா இருந்த கோமணத்தை கூட உங்க ஆட்கள் உரிவிட்டு போயிருப்பார்கள். 

#மாணவ கண்மணிகளே! ஈழத்தில் குடிசைகள் எறிந்தால் மட்டும்தான் குரல் கொடுப்பீர்களா? தர்மபுரியில் எறிந்தால் குரல் கொடுக்க மாட்டிர்களா?#

ஈழத்தில் குடிசைகள் மட்டும் எரிந்து இருந்தால் நாங்கள் குரல் கொடுத்து இருக்க மாட்டோம். ஆனால், அங்கு எரிந்தது நாங்கள் நடத்திய தங்க நகை கடைகள். அம்பது ரூபா குடிசைக்கும் அம்பது ரூபா பெறுமானம் இல்லாத தலித் எரிஞ்சா குரல் கொடுக்க நாங்கள் என்ன முட்டாளா? ஈழத்தில் கோடிக்கணக்கான பெருமானம் உள்ள தங்க கட்டிகள் எரிந்தன. அதான் எங்களுக்கு முக்கியம். 


# முக நூலில் கே சாமி போன்றவர்களுக்கு அதிகம் லயிக் விழுகிறதே. #

அதிக லைக் விழ ஆரம்பிக்குதுன்னாலே நாம சமூகத்தில் தீர்மானிக்கப்பட்ட ஆளுமையான பொது கருத்துக்களோடு ஒத்து போகிறோம்னு அர்த்தம். அதை எதிர்த்து வித்தியாசமா சொன்னா லைக் விழாது. 



திருமா அளவுக்கு நம்மால் ஆள் சேக்க முடியாமல் பொறாமையில் பேசுகிறோமாம்.  அதைதான் சீமான் ஆட்களும் சொல்கிறார்கள். சீமானுக்கு அதிகம் ஆள் சேருகிறது என்கிற பொறாமையில் நீங்கள் அவர்களை தாக்குகிறீர்களாம். 

No comments:

Post a Comment