Monday, April 15, 2013

#எந்த சாதியில் இருந்தாலும் சாதிவெறி சாதிவெறிதான். அம்பேத்கர் பெயரை சொல்லிக்கிட்டு பெரியாரை திட்டுவதை மட்டுமே முழு நேர தொழிலாக வைத்திருக்கும் ஒரு சாக்கிய சாதிவெறியை அன்ஃப்ரெண்ட் செய்யப் போறேன்.#

எங்களுக்கு ஜாதியே இல்லைன்னு சொல்லித்தான் ஊருக்கு வெளியே, வெளி ஜாதியனரா ஜாதி அற்றவர்களா இவ்வளவு காலம் வச்சு இருந்தீங்க. இப்ப எப்படி நாங்க பேசுறது ஜாதி வெறியாச்சு. பார்பனியத்த எதிர்த்தா அவன் எங்களை ஜாதி வெறியர்கள் என்கிறான், ஜாதிய மறந்து இந்தியனா இந்துவா ஒருங்கினை என்கிறான் சூத்திர பன்னைத்தனத்தை எதிர்த்தா இவன் எங்களை ஜாதி வெறியன், ஜாதியை மறந்து திராவிடனா தமிழனா இணை என்கிறான். இருவருக்கும் ஜாலரா தட்டும் தலித்துக்கள் நல்லவர்கள். சில ஜால்ராக்கள் இந்தியதேசியம் பேசிட்டு பார்ப்பன இந்து கும்பலுக்கு அடிவருடிக்கொண்டு இருக்கு. இன்னும் ஒரு கும்பல் சூத்திரனுக்கு திராவிடம் தமிழ் தேசியம் பேசிட்டு சூத்திர இந்து கும்பலுக்கு அடிவருடிக்கொண்டு இருக்கு. சாக்கியர்கள் ஜாதி இந்துக்களுக்கு ஒரு போதும் ஜாலரா தட்ட மாட்டார்கள். அவர்களுக்கு பார்பானும் சூத்திரனும் ஒன்றே. பார்பனியமும் சூத்திர-தரகு-பார்பனியமும் ஒன்றே. ஆத்திக இந்து மதமும் நாத்திக இந்து மதமும் ஒன்றே. பார்ப்பான் பாம்பின் மூளை என்றால் சூத்திரன் பாம்பின் பல். மூளை வேலை செய்வதை நிறுத்தினால் கூட பல்லில் விஷம் இருந்து கொண்டே இருக்கும். பார்பனிய இந்துதுவ மூளையை மட்டும் அல்ல சூத்திர இந்துத்துவ பால்லையும் புடுங்குவோம், பார்பனிய ஆத்தீகத்தை மட்டும் அல்ல சூத்திர நாதீகத்தையும், பார்பனிய முதலாளித்துவத்தை மட்டும் அல்ல சூத்திர பண்ணையார் தனத்தையும், பார்பனிய இந்து இந்திய தேசத்தை மட்டும் அல்ல சூத்திர திராவிட நாட்டையும், சூத்திர தமிழ் தேசியத்தையும் சாகும் வரை எதிர்ப்போம். அதுக்கு பெயர் உங்கள் ஜாதி இந்து அகராதியில் சாக்கிய வெறி என்றால் இருந்துட்டு போகட்டும். பார்ப்பன கூட்டம் சூத்திர கூட்டம் மற்றும் இவர்களின் ஜால்ராக்கள் யாராக இருந்தாலும் என்னுடைய நட்பு வட்டத்தில் இருந்து விவாதம் செய்ய விரும்பினால் தொடர்ந்து இருக்கலாம் இல்லையெனில் விலகி கொள்ளலாம். நீங்கள் எல்லோரும் எனது நடப்பு வட்டத்தில் இருப்பதால் யாரும் எனக்கு சம்பளம் போட்டு தர போவதில்லை. எனக்கு சாக்கிய முனி புத்தரையும் பண்டிதர் அயோத்திதாசரையும் தாத்தா இரட்டைமலை சீனிவசனாரையும் போதிசத்துவர் அண்ணலையும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை எங்களுக்கு யாரும் அடிமை இல்லை நங்கள் பறையர்கள் என்று மார்தட்டி சொல்லும் நாலு பறையர் எனது நட்பு வட்டத்தில் இருந்தால் போதும்.

No comments:

Post a Comment