திருவள்ளுவர் மாவட்ட சாக்கியர்கள் செய்த சாதனை. இது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சாக்கிய இல்லம். அங்கு குழந்தைகளுக்கு படிப்புடன் பீமாயான, புத்தாயானா, தம்மாயானா, தியானம், தற்க்காப்பு கலை, அறவழி, மானுட நேயம், சமூக ஒழுக்கம், தனி மனித ஒழுக்கம், விடுதலை உணர்வை ஊட்டும் கருத்துக்கள் என்று சொல்லி தருவோம். ஆயிரம் பேரை துப்பாக்கி முனையில் அடக்குவது பெரிய சாதனை இல்லை. ஒருவன் தன மனதை அடக்குவதே பெரிய சாதனை என்கிறார் புத்தர். அந்த மனதை அடக்கும் மன பயிற்ச்சியை நாம் நம் பிள்ளைகளுக்கு கற்று தருவோம்.
No comments:
Post a Comment