Friday, April 12, 2013


#சாக்கிய பறையனார் உங்களின் சில பதிவுகளும் அண்ணலை களங்கப்படுத்துவது போல் தான் இருக்கிறது... நீங்கள் அண்ணலின் பௌத்தத்தையும், இந்துக்கள் என்பதால் அப்பாவிகளை கொன்று குவித்த ராஜபக்சேவின் பௌத்தத்தையும் ஒன்று என்பது போல் பதிவிடுகிறீர்கள்.... நீங்களும் உங்கள் வழக்கத்தை மாற்றலாமே அன்பு அண்ணா.....#

பவுத்தம் பவுத்தமே அதில் அண்ணலின் பவுத்தம் ஆட்டுக்குட்டி பவுத்தம் என்றெல்லாம் இல்லை. மனிதத்தை நேசிப்பவர்கள் உண்மையான பவுத்தர்கள். அதற்க்கு எதிராக உள்ளவர்கள் பவுத்தர்கள் இல்லை. ராஜபக்ஷே கெட்டவரா? இல்லை இந்த இந்து ஊடகங்கள் அவரை கெட்டவராக காட்டுகின்றனவா? என்பதே நமது வாதம். ராஜபக்ஷே கெட்டவர் என்றால் அவர் மனித சமூகத்துக்கு எதிராக அல்லது தமிழ் மக்களுக்கு எதிராக சொன்ன ஏதாவது ஒரு வாசகத்தை இங்கு பதிவிட்டு சொல்லுங்கள் ராஜபக்ஷே உண்மையான பவுத்தர் இல்லை அவர் மனித உருவில் உள்ள மிருகம் என்று. எனக்கு ராஜபக்ஷே முக்கியம் இல்லை எனது சமூகம்தான் முக்கியம். ஆனால் என் சமூகத்தை  தம்மத்தை நோக்கி போக விடாமல் இந்த தமிழ் தேசிய திராவிட நாத்தீக இந்து கூட்டம் இங்கு நடத்தும் பவுத்த எதிர்ப்பு பிரச்சாரத்தை அம்பலப்படுத்துவது எனது கடமை. ராஜபக்ஷேவை சிங்களவன் என்று மட்டும் திட்டினால் எனக்கு சம்பந்தம் இல்லாத ஒரு விஷயம் அதில் நான் தலையை நுழைக்க மாட்டேன். அவரை பவுத்த பேரினவாதி என்று சொல்லி புத்தத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யும்போது அதற்க்கு எதிர் பிரச்சாரம் செய்ய வேண்டியது எனது கடமை. 



என்னுடைய கேள்வி எப்போ புது வருட பிறப்பை இவர்கள் கொண்டாடினார்கள் என்பதே. வருடத்தில் முதல்நாள் கடைசி நாள் என்பதெல்லாம் சரி. புத்தாண்டு எனும் கான்செப்ட் இவர்களுக்கு எப்போது வந்தது. 

No comments:

Post a Comment