Sunday, April 21, 2013

#பிராமின்- பிராமின் அல்லாதோர் என்கிற வாதம் முடிந்து போய்விட்டது.தலித் - தலித் அல்லாதோர் என்கிற வாதம் கூர்மை பட்டு வருகிறது!#

இப்படி ஒரு வாதம் வரலாற்றில் இருந்ததே இல்லை. இந்தியாவில் உண்மையான வாதம் ஜாதி இந்து வாதமும் தீண்டத்தகாதவர்கள் வாதமே. ஊர் வாதமும் சேரி வாதமுமே. இங்கு நடக்கும் சண்டை என்பது உயர்ந்த சாதிக்கும் (பார்ப்பனர்) தாழ்ந்த ஜாதிக்கும் (சூத்திரர்) இடையே நடக்கும் சண்டை இல்லை. ஜாதி உள்ளவர்களுக்கும் (இந்துக்கள்) ஜாதி அற்றவர்களுக்கும் (சாக்கியர்கள்) நடக்கும் சண்டையே. திராவிட தமிழ் மாயையில் இருந்து பார்த்தால் இந்த உண்மை தெரியாது போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் பார்வையில் பார்த்தால்தான் தெரியும். 


சேரியில் வாழும் சாக்கிய-தலித் மக்கள் கீழ் ஜாதி இல்லை. அவர்கள் ஜாதிக்கு வெளியானவர்கள். அவர்கள் வருணம் இல்லாத அவர்ணர்கள். ஜாதியற்ற சாக்கிய மக்களை  சூத்திர கீழ்ஜாதியினருடன் இணைத்து பேச வேண்டாம். 


தர்மபுரியில் வீடுகளை எரித்தவர்கள் மேல்ஜாதியினரோ உயர் ஜாதியினரோ இல்லை. வீடுகளை எரித்த வன்னியர்கள் கீழ் ஜாதி சூத்திரர்கள். வீட்டை இழந்தவர்கள் ஜாதியாற்ற சாக்கிய பறையர்கள். 

No comments:

Post a Comment