Tuesday, April 16, 2013


சேரி மக்களுக்கு பிரபாகரன் தேவை இல்லை. ஈழ மக்களுக்கு போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் தேவை. புலிகளின் வழியில் நாம் விடுதலை அடைய முடியாது நமது போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழியிலேயே ஈழ மக்கள் விடுதலை அடைய முடியும். நாம் ஆயிரம் ஆண்டுகாலம் பட்ட துன்பங்களை நூறு வருடத்தில் மாற்றி காட்டியவர் போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர். சேரிக்கு பிரபாகரணை கொண்டு வந்து எங்களை பின்னோக்கி அழைத்து செல்வதை விட்டு விட்டு போதிசத்துவர் அண்ணலை ஈழத்துக்கு கொண்டு போய் அவர்களை முன்னோக்கி அழைத்து செல்லுங்கள். இன்று நாங்கள் கோடிக்கனக்காக புலம்பெயர்ந்து உள்ளோம். நாங்கள் அகதிகளாக போக வில்லை எங்கள் திறமையால் தான் போகிறோம். ஆயிரம் வருடம் அடிமை பட்டு கிடந்த இந்த சமூகம் இன்று உலகின் எல்லா மூலையிலும் பரவி பெருகி கிடக்கிறது.  மில்லியனியர் பில்லியனியர் என்று முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். இன்று எங்கள் சமூகம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்றால் அதற்க்கு காரணம் புலிகளின் புலி விஷமோ அவர்கள் வழியில் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இருக்கும் திருமா  கூட்டமோ இல்ல. இது போதிசத்துவர் அண்ணல் காட்டிய பாதை. அவர் வழியில் நாங்கள் போராடி பெற்ற உரிமைகள். அவர் வழியில் வாழ்வியலை அமைத்ததால் கிடைத்த வெற்றிகள். தீவிரவாதம் தேவை இல்லை என்றால் என்ன வழி என்று கேட்கிறார்கள் தமிழ் தேசிய வாதிகள். அவர்களுக்கு சொல்லுங்கள் விடுதலைக்கு ஒரே வழி போதிசத்துவர் அண்ணல் காட்டிய வழி என்று. 

No comments:

Post a Comment