Wednesday, April 17, 2013

#அண்ணன் திருமாவின் வளர்ச்சியை பார்த்து நீங்கள் வயிறு எறிகிறீர்கள்.#

அவர் வளர்ச்சியை பார்த்து வயிறு எரியல. புத்தர், வள்ளுவர், பண்டிதர், தாத்தா, போதிசத்துவர் என்று மானுடம் காத்த பண்பாட்டு நாயகர்கள் பிறந்த குடியில் பிறந்து விட்டு தமிழ் தேசிய தீவிரவாத கும்பலுக்கு ஜால்ராவா இருக்கிறாரே என்று பரிதாபப்படுகிறேன். அவர் ஜால்ராவா இருப்பது மட்டும் இல்லாமல். நமது சொந்தங்களை  எல்லாம் புலி தேசிய  சாக்கடையில் கொண்டுபோய் தள்ளுகிறாரே என்று வயிறு எரிகிறேன். அடுத்த தலைமுறை எப்படி இருக்குமோ என்று உள்ளம் குமுறிக்கொண்டு இருக்கிறேன். போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் நம்மை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறார். நல்வழி படுத்திக்கொண்டு இருக்கிறார். ஒழுக்கம் பண்பாடு அறிவு திறமை கல்வி பெயர் புகழ் பதவி மன நிம்மதி மன அமைதி சந்தோசம் என்று நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அதை நம் சொந்தங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று நான் ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன். அதற்க்கு பாதகம் வைக்கும் ஒரு நிலைப்பாடுதான் புலி பெருமை. துப்பாக்கி தூக்கியவனை கஞ்சா கடத்தியவனை கொண்டு வந்து நமது பிள்ளைகளின் கையில் கொடுத்தால் நாளைய நம் சமூகம் என்னவாகும் என்று மனம் பதறுகிறது. இந்த 30 ஆண்டுகள் அவர் ஒரு கூட்டத்தை உருவாக்கியுள்ளார். ஒழுக்கம் அற்ற ஒரு கூட்டம் தண்ணி அடித்து விட்டு பேரணிக்கு வரும் கூட்டம்.  போதையில் தலைகால் தெரியாமல் பிரபாகரன் படத்தை தலை கீழாக மார்பில் குத்திக்கொண்டு விசில் அடிக்கும் கூட்டம். போதிசத்துவர் பிறந்தநாள் அன்று மணிமண்டபத்துக்கு பேரணி  வந்த மக்களுடைய வீடியோ படத்தையும் மயிலாப்ப்பூர் போன விசிலடிச்சான் குஞ்சிகளின் பேரணி பற்றிய வீடியோவையும் போட்டு பாருங்கள். உங்களுக்கு வித்தியாசம் தெரியும். தலைவன் என்பவன் கூட்டம் எதுக்கு விசிலடிக்கும் என்று யோசித்து பேசக்கூடாது. கூட்டம் எதை பேசினால் சிந்திக்கும் என்று யோசித்து பேச வேண்டும். இந்த 20 ஆண்டுகள் அவர் தனது தொண்டர்களை ஒழுங்கு படுத்த கண்ணியமாக பண்புள்ளவர்களாக மாற்ற  என்ன செய்தார். போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கரின் பாதையில் பண்பானவர்களாக போய்க்கொண்டு இருந்தவர்களை புலி அரசியல் பேசி ஒழுக்கம் அற்றவர்களாக வன்முறை தீவிரவாதம் கொலை கொள்ளை கஞ்சாகடத்தல் எல்லாவற்றையும் சரி என்று நியாயப்படுத்தும் அயோக்கியர்களாக மாற்றி வைத்துள்ளார். சீமானோ நெடுமாறனோ வைக்கோவோ, பிரபாகரனோ நேரடியாக சேரிக்கு வந்து செய்ய முடியாததை இவர் செய்து கொண்டு இருக்கிறார். சமூக அக்கறை கொண்ட சான்றோர்கள் அறிவுவழி பாதையில் போகும் பெரியோர்கள் எல்லோரும் இந்த கொடிய செயலை கண்டித்து மக்களை திருமாவின் புலி அரசியலில் இருந்து காக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைக்கிறேன். 

No comments:

Post a Comment