Tuesday, April 16, 2013


#பிராபாகரன் தீவிரவாதி என்று எதை வைத்து சொல்கிறீர்கள்#

ஆயுதம் எடுத்து வன்முறை மூலம் தனி மனிதர்களை, அரசை, மற்ற தீவிரவாதிகளை மிரட்டி தங்களது  விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்ள நினைக்கும் தீவிரவாத குழுவின் தலைவராக பிரபாகரன் இருந்தார். உலகில் உள்ள தீவிரவாத கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார். உலக வல்லரசு நாடுகள் எல்லாம் அவரையும் அவரது தீவிரவாதியும் பயன்படுத்தி இலங்கை அரசை மிரட்டி இந்திய பெருங்கடல் பகுதியை தங்கள் கட்டுக்கு கீழே கொண்டுவர முயன்றனர். இப்படி வல்லரசுகள் திட்டமிட்டு வளர்த்த கூட்டமே புலி தீவிரவாத கூட்டம். இலங்கை, இந்தியா, மற்றும் உலக நாடுகளின் சட்டங்களை எல்லாம் மீறி புலிகள்  ஆயுதங்களை கடத்தினர். உலக நாடுகள் பலவற்றில் உள்ள சிறைகளில்  இன்னும் புலிகள் கைதிகளாக உள்ளனர். பன்னாட்டு அரசும் உலகில் உள்ள பல நாட்டு அரசுகளும் புலிகள் மிகவும் பயங்கரமான தீவிரவாதிகள் அவர்களுக்கு அந்த நாட்டில் உள்ள பிரஜைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பண உதவி செய்க்கூடாது என்று சட்டம் இயற்றி உள்ளது. அதை மீறி பண உதவி செய்தவர்களை  மற்றும்  ஆயுதம் கடத்த உதவியவர்களை உலக நாடுகள் பல தண்டித்து உள்ளது. புலிகள் தங்கள் தீவிரவாதத்துக்கு குழந்தைகளை போராளிகளாக பயன்படுத்தி உள்ளனர். இதை உலக நாடுகள் பலவும் உலக நாடுகளில் உள்ள மனித உரிமை கழகங்கள் பலவும் கண்டித்து உள்ளன. புலிகள் தங்கள் இயக்கம் நடத்த உலக நாட்டில் உள்ள பல பண முதலாளிகளிடம் பணம் வசூலித்து உள்ளனர். அவர்கள் அப்படி பணம் வசூளித்தவர்களில் ஒருவர் தமிழ் நாட்டின் முன்னால் முதல்வர் எம் ஜி ஆர். அவர் கொடுத்த பணம் ஊழல் பணமா கருப்பு பணமா என்பது இதுவரை தெரியவில்லை. அவர் நேர்மையான முறையில் கொடுக்கவில்லை.மறைமுகமாக  கொடுத்தார் என்று புலிகளே சொல்கிறார்கள். அந்த பணத்தை லஞ்சமாக கொடுத்து இந்திய அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டு பல கோடி ரூபாய் பெருமானம் உள்ள ஆயுதங்களை இந்தியா வழியாக இலங்கைக்கு கடத்தி உள்ளனர். புலிகள் தங்கள் இயக்கம் நடத்த கஞ்சா தங்கம் மற்றும் ஆயுதங்களை கடத்தி உள்ளனர். புலிகள் பல தனி மனிதர்களை அரசு பிரதி நிதிகளை பிணைய கைதிகளாக பிடித்து வைத்ததும் அவர்கள் கொன்றதும். கொள்ளுவதற்கு பல தனி மனிதர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தியும் உள்ளனர். பிரபாகரன் தீவிரவாதி என்பதற்கு விளக்கம்  இது போதுமா இன்னும் வேணுமா? 

No comments:

Post a Comment