Tuesday, April 2, 2013

நலவர்களே தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் பேசும் வல்லோர்களே. ஈழத்தில் ஜாதியே இல்லை. ஈழம் இந்தியா போல இந்துத்துவ நாடு இல்லை. அது தமிழ் பாரம்பரியத்தை நிலை நிறுத்திய நமது புலி தேசிய தலைவர் மான்பு மிகு புலி புண்ணிய கோட்டி வாழ்ந்த பூமி என்று எக்கால மிடும் தலித் அடிமைகளே. ஜாதி தமிழர்களின் கைக்கூலிகளே. பாருங்கள் ஒரு பண்ணையார் ஜமிந்தார் வீட்டு சிங்கம் அன்றைய ராமசாமி போல பசும்பொன் முத்துராமலிங்கம் போல நமக்காக இரக்கப்பட்டு நமது முன்னேற்றத்திற்காக எவ்வளவு சிறப்பான வேலையை செய்து உள்ளார். நம்மை சிங்களவர்கள் தான் பீ வார வைக்கிறார்களாம். இந்த தமிழ் தேசிய சிகாமணிகள் நம் மீது கழிவிரக்கம் கொண்டு நமது முன்னேற்றத்திற்கு உதவி செய்வதை பருங்கள். நாம் இன்னமும் இவர்கள் கழிவிரக்கம் காட்டும் அளவிற்கு ஈழத்தில் கேவலமாகவும். நமக்கு கழிவிரக்கம் கட்டும் அளவுக்கு இவர்கள் வசதி படைத்தவர்களாகவும். உள்ளனர். ஈழத்தில் யார் செல்வ சீமான்களாக உள்ளனர். யாரை யார் சுரண்டுக்கிரர்கள். யார் இழிவான வேலை செய்கிறார்கள். யார் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட நிலையில் உள்ளனர் என்பதை இவர் காட்டும் கழிவிரக்கம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

#ஆனால், சமய மாற்றத்தைச் செய்யும் நோக்கில் செயற்பட்டவர்கள் தாம் மண்ணெய் தருவதாகவும், ஆனால் ஜெனரேட்டர், வயர்கள், பல்ப்புகளை நீங்கள் வாங்கவேண்டும் என்ற ஏமாற்று பேச்சுகளில் ஈடுபட்டிருந்தனர். நீர் குறிப்பிடும் ‘தலித்‘ ஐச் சேர்ந்த இருவர், தமது சட்டப் பிரச்சனைக்கு ஆலோசனை பெற வந்தபோது, தமது பிள்ளைகளின் பிரசசினையைக் கூறிய நிலையில், நானும், எனது குடும்பமும் 3 ஜெனரேற்றர்களையும், வயர்கள், பல்புகளையும் வாங்கிக்கொடுத்து, மூன்று முகாம்களில் இருந்தவர்களின் பிள்ளைகளைப் படிக்க உதவினோம்.மத மாற்றத்தினை மாத்திரம் நோக்கமாகக் கொண்டிருந்த கூட்டத்திற்கு, இவர்கள் யாரிடமிருந்து இவறறைப் பெற்றனர் என்பதுதான் பெரும் பிரச்சினை. அந்த மதமாற்றக் கும்பல் மண்ணெய்யைக் கொடுப்பதாயின் ‘நீங்கள் தேவனை வணங்கவேண்டும்‘ என்றனர்! இதை ‘தலித்‘ என நீங்கள் குறிப்பிட்டோர்கள் கூறியதைத்தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு பிள்ளைகள் படிக்க மண்ணெய்யும் எனது குடும்பம் வழங்கியது. அவர்கள் இரவில் லைற் போட்டு படிக்க ஆரம்பித்த பின்னர் ஓடிச் சென்ற மத மாற்றிகள், தாம் மண்ணெய் தருவதாக அவசர அவசரமாகக் கூறியிருந்தனர்! இன்றும் அவர்கள் லைட்டல் படிக்கின்றனர். இதை நான் என்னைப் பற்றியோ, அல்லது எனது குடும்பத்தைப் பற்றியோ புகழக் கூறவில்லை. எனது நாட்டிலேயே தொடர்ந்து வாழ்ந்துவரும் எனது குடும்பத்தினர், தாம் தமது நாட்டில் கடுமையாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு வருடாவருடம் பல லட்சங்கள் பணத்திற்கு பல்வேறு பொது உதவிகளைச் செய்துதான் வருகிறோம். செய்யவும் முடிகிறது! இங்கு ‘மனம்‘ என்பதுதான், விருப்புத்தான் முதல் முக்கியமானது!! ஆனால் வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு, பத்திரிகை, சஞ்சிகை, சிற்றிலக்கிய வெளியீடு, அரசியல் ஆய்வு வெளியீடு, இணையத்தளங்களை நடாத்திப் புரட்சி செய்து, ‘இலங்கையில் தலித் துக்களுக்கு உரிமைகள் பெறச் செயற்படுகிறோம்‘ எனக் கூறும் இந்தக் கைக்கூலிச் சுயநலக் கும்பல்களை நாம் நன்றாக அறிவோம். நீங்கள் ஏமாளிகளுக்கு ஏமாற்று எழுத்துக்களை மாத்திரம்தான் செய்வீர்கள். ஆனால், தலித்துக்கள் உண்மையில் முன்னேற அவர்களின் கல்வியை வளர்க்க மாட்டடீர்கள். பிதற்றுங்கள். பாவங்கள் கேட்டுப் பரவசப்படும்!!#

No comments:

Post a Comment