Monday, April 8, 2013


#அம்பேத்கரைப் பின்பற்றிவிட்டோம். நாங்களும் பவுத்தத்தைப் பின்பற்றி விட்டோம் என்று சொல்லிவிட்டு, எல்லா இந்துக் கடவுளின் படங்களையும் ஒன்று விடாமல் டஜன் கணக்கில் மாட்டி வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். # 

யாரு அப்படி செய்யுறதுன்னு சொல்லுங்க அவுங்களை பவுத்த மதத்தில் இருந்து நீக்க ஒரு சட்டம் கொண்டு வந்துடலாம். ஆனா பவுத்ததில் ஒரு பிரச்சனை அது போல சட்டம் கொண்டு வர முடியாது. அவன் சொன்னான் இவன் சொன்னான்னு எதையும் நம்பாதே செய்யாதே உனக்கு எது சரின்னு படுதோ அதை செய். புத்தரே சொல்லி இருந்தால் கூட நீ யோசித்து செய் என்கிறது பவுத்தம். அதனாலதான் பவுத்தத்தில் பல பிரிவுகள் பவுத்தம் என்பது ஆன்மீக வாதிக்கும் பொருந்துது நாத்திக வாதிக்கும் பொருந்துது. அதனாலதான் பவுத்தில் ஹீனயானம் மகாயானம்  தேரவாதம் என்று பல பிரிவுகள். உண்மையான பாவத்தான் என்பவன் கடவுளை வணங்குபவனோ கடவுளை மறுப்பவனோ இல்லை. ஐந்து ஒழுக்கங்களை கடை பிடிக்கிறனா, என் மார்க்கங்களை கடை பிடிக்கிறனா, புத்தரின் பத்து குண்ங்களை அவனுள் வளர்த்து வருகிறானா என்பதே பவுத்தம். இந்து கடவுள்களை வணங்குவதை நிறுத்திவிட்டேன் வீட்டில் பெரிய பெரிய புத்தர் அம்பேத்கர் படங்கள்  ஆனால் ராத்திரியானா ஒரு குவாட்டர் அடிச்சாதான் தூக்கம் வருது வாரத்துக்கு ஒரு முறை சூலூருக்கு போயிட்டு வந்தாதான் ஹப்பியா இருக்குன்னு சொல்றது பவுத்தம் இல்லை. 

No comments:

Post a Comment