Friday, April 19, 2013

"கலப்பு திருமணம் சமபந்தி போஜனம் என்று கிளர்ச்சி செய்வது செயற்க்கைத்தனமாக உணவை திணிப்பது போல." போதிசத்துவர் அம்பேத்கர். சமூக விடுதலைக்கு உண்மையான  வழி புத்ததம்மத்தை ஏற்ப்பது ஒன்றே எகிறார் போதிசத்துவர்.   

Criticising and ridiculing people for not inter-dining or inter-marrying or occasionally holding inter-caste dinners and celebrating inter-caste marriages, is a futile method of achieving the desired end. - Bothisatta Dr. B.R. Ambedkar

கலப்பு திருமணங்களை செய்து கொள்ளாதவர்களை சமபந்தி போஜனங்களில் கலந்து கொள்ளாதவர்களை விமர்சிப்பது கிண்டல் அடிப்பது எப்போதாவது சமபந்தி போஜன்கள் ஏற்ப்பாடு செய்வது கலப்பு திருமணங்களை கொண்டாடுவது என்பதெல்லாம் நமது குறிக்கோளை அடைய எடுக்கும் வீண் முயற்சிகளே. போதிசத்துவர் அம்பேத்கர்.

புராணங்கள் எல்லாம் பொய்யாம். திராவிட இன வரலாறு எங்கடா இருக்குன்னு கேட்டா புராணத்துல இருக்காம். பகுத்தறிவு பொக்கிஷங்கள் சொல்லுது. 

## விடுதலைபுலிகளை ஆதரிக்கும் விஷயத்தில் வைகோவை நான் சந்தேகபடமாட்டேன் ...ஜெயலலிதாவைத் தவிர அனைத்து தமிழக கட்சிகளும் விடுதலைபுலிகளுக்கு ஆதரித்தன என்பது வரலாறு ..!#

அப்படியா அப்போ அகதிகள் முகமுடி போட்டுட்டு இருக்கும் ஒரு பத்து புலிகளை தைரியமா மேடை ஏத்தி பேச வைக்க சொல்லுங்கல். அவர்கள் கையில் ஆயுதம் கொடுத்து இவர்கள் கட்சி ஆபிசில்  தங்க வைக்க சொல்லுங்கள். 

ராஜீவ் கொலைக்கு முன்னரா பின்னரா? 

நான் வைகோவை மட்டும் சொல்லவில்லை. புலி வேஷம் போடும் அனைவரையும்தான் சொல்கிறேன். புலிகள் தீவிரவாதிகள் இல்லை. அவர்கள் போராளிகள் நான் அவர்களுக்கு அடைக்களம் தருகிறேன். நான் அவர்களுக்கு பண உதவி செய்கிறேன். இதோ என்னோடு புலிகள் எப்போது உள்ளனர் என்று வெளிப்படையாக சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். புலிகளுக்கு ஆதரவு தருகிறேன் என்று சும்மா பாராளுமன்றத்தில் பேசுவதற்கும். உண்மையில் புலிகளுக்கு ஆயுதம் பண உதவி செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவ்வளவு எதுக்கு நீங்க துபாயில் இருந்து புலிகளுக்கு பணம் அனுப்புநீங்கனா கூட உங்க விசாவை கேன்சல் பண்ணி வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. 


நீ பணம் வாங்கிட்டு பேசுற பணம் வாங்கிட்டு பேசுற என்கிறார்களே. அப்படியே பணம் வாங்கிட்டு பேசுனா என்ன தப்பு. 

கொடி பிடிக்கிறது கோஷம் போடுறது எல்லாம் சட்ட விரோதம் கிடையாது. அது ஜன நாயக நாட்டில் அதன் பிரஜைகளுக்கு உள்ள உரிமை. ஆனால் ஜனநாயக நாட்டில் தீவிரவாத சக்திகளுக்கு அவர்கள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு உடந்தையாக இருக்க கூடாது என்று சட்டம் சொல்கிறது. அவர்களுக்கு பண உதவியோ ஆயுத உதவியோ மற்றும் அவர்கள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு உதவுவதோ தவறு என்பதுதான் சட்டம். இவர்கள் கொடி பிடிப்பது கோஷம் போடுவது எல்லாம் இந்திய நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டதே. 

No comments:

Post a Comment