Monday, April 8, 2013


#"சித்தார்த்த கவுதம" என்பது கவுதம புத்தரின் மகன். அதைத் தெரிந்து கொண்டால் நல்லது.#

கவுதம புத்தர் துறவி அவருக்கு மனைவி குடும்பம் குழந்தைகள் எல்லாம் கிடையாது. சித்தார்த்தர் துறவறம் புகும் முன்னர் அவருக்கு மனைவியும் மகனும் இருந்தனர். அவர் மகன் பெயர் ராகுலன். 

#ஆங்கிலேயனின் கால்களைப் பிடித்து வாழ்ந்த இந்திய, இலங்கைக் கற்றோர்கள்தான் தொடர்ந்தும் ‘இந்து‘ என்ற சமயம் பற்றிப் பேசினர், எழுதினர்! அனி பெஸன்ற் போன்றவர்கள்தான், புத்தர் இந்துவாக இருந்தார் எனத் தமது நூல்களில் எழுதியிருந்தனர்.# 

அண்ணிபெசன்ட் போன்றவர்கள் இந்துத்துவத்தை தூக்கி பிடித்தது உண்மைதான். ஆனால் காலனியல் ஒல்காத் ரிஸ்டேவிஸ் போன்றவர்கள் புத்தம் மீண்டும் வருவதர்க்கு செய்த பணிகளை நீங்கள் மறைக்கிறீர்களா? இல்லை அறியவில்லையா?  




#ஆங்கிலேயனின் கால்களைப் பிடித்து வாழ்ந்த இந்திய, இலங்கைக் கற்றோர்கள்தான் தொடர்ந்தும் ‘இந்து‘ என்ற சமயம் பற்றிப் பேசினர், எழுதினர்! அனி பெஸன்ற் போன்றவர்கள்தான், புத்தர் இந்துவாக இருந்தார் எனத் தமது நூல்களில் எழுதியிருந்தனர்.# 

அண்ணிபெசன்ட் போன்றவர்கள் இந்துத்துவத்தை தூக்கி பிடித்தது உண்மைதான். ஆனால் காலனியல் ஒல்காத் ரிஸ்டேவிஸ் போன்றவர்கள் புத்தம் மீண்டும் வருவதர்க்கு செய்த பணிகளை நீங்கள் மறைக்கிறீர்களா? இல்லை அறியவில்லையா? 


#அம்பேத்கரை விட நீங்க எல்லாம் பெரிய அறிவாளியா ?? சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சேரியில் பிறந்தவனை நீதிபதியாக பாடுபட்டது அந்த ஈரோட்டு கிழவன் தான் . வெண்மணி வழக்கில் வெளியே வந்த சாதி வெறியனை , வெட்டி சாய்த்தது தி .க . காரங்க தான் அதுவும் சேரியில் பிறக்காதவர்கள் தான் . சும்மா ஒருவரின் உழைப்பை கொச்சைப்படுத்தி பேசிட்டு திரியாதிங்க .#

ஜாதி இந்துக்கள் எங்களுக்காக எந்த மரத்தை  வெட்டி சாய்த்தார்கள் எந்த இலையை புடுங்கினார்கள். என்பது இங்கு வாதம் அல்ல. எங்கள் வரலாறு மறுக்கப்பட்டு, அவர்கள் போட்ட பிச்சயில்தான் நாங்கள் வாழ்வது  போல பிரச்சாரம் செய்யப்படுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். 

#நம் தேவையை கருத்தில் கொண்டு யோசித்து முடிவு எடுக்க வேண்டும் . # 

என்ன திராவிடத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் ஜால்ரா அடிக்க வேணுமா? பிரபாகரனை புரபைலில் போட்டு புரட்சி பண்ணனுமா? 

பறையர் எனும் அடையாள மீட்சி இல்லாமல் பறையர் விடுதலை வாறது. தமிழன் திராவிடன் என்று அடையாளத்தை மறைத்து பதுங்கும் பச்சோந்திகளை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. பறையன் எனும் அடையாளத்தோடு வரும் பத்து பேர் போதும். பறையர்களின் வேலூர் புரட்சி போல மீண்டும்ம் ஒரு புரட்சி தமிழகத்தில் வரும். 


 #ஹ்ம்ம் அருமையான் புரிதல் , திராவிடம் தமிழ் தேசியம் , பிரபாகரன் என்று உங்களை யார் போக சொன்னா ? தமிழகம் முழுக்க போய் பேசுங்க பறையர் ! பறையர் ! என்று வீர வரலாறு பேசுங்க . மக்களை திரட்டுங்க !!#

பறையர்கள் திரண்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இடையில் திராவிட தமிழ் தேசிய ஜலராக்கள் தான் எமது மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள். 

No comments:

Post a Comment