Tuesday, April 16, 2013




நீ கெட்ட வார்த்தைல திட்டி எனக்கு என்ன ஆக போகுது. நல்லா திட்டு. என்ன பொருத்தவரைக்கும். நீ திற்ற எல்லா வார்த்தையும் உனக்குத்தான். அது எதுவும் என் கிட்ட வரவே வராது. மன நோயாளிகள் பேசுறதுக்கு எல்லாம் நான் ரியாக்ட் பண்றது கிடையாது. 

#சாக்கிய பறையனார்@சாக்கியன்குறது உங்க பேரு பறையனார் என்ன நீங்க படிச்சி வாங்குன பட்டமா.#

அதைதான் நானும் கேக்குறேன். முத்து குமார் என்பது உங்க பேரு நான் தமிழன் நான் திராவிடன் என்பது எல்லாம் நீங்க வாங்கின பட்டமா? அமா சாக்கியான்றது என் பெயரா இல்லை பறையனார் என்பது என் பெயரான்னு நான் சொன்னேனா? சிலர் அழகிய தமிழன் அசிங்கமான தமிழச்சி அப்படின்னு எல்லாம் பேரு வச்சுக்கிட்டு திரியராங்களே அவுங்கள எல்லாம் கேள்வி கேட்டுட்டு அப்புறம் கேளுங்க. எது என் பேருன்னு சொல்றேன். 


#சிலை வைப்பதைவிட சிறந்த மரியாதை, அவரது சிந்தனை வளம் மிகு நூல்களை பெரும்பாலானவர்கள் படித்து விழிப்புணர்வு பெறச் செய்வதுதான்....#

சின்னங்கள் சிம்பல்கள் அவசியம். கருத்துக்கள்  சிம்பல் மூலம்தான் பரிமாறப்படுகிறது. சிலை என்பது ஊடகம். அது மிகவும் அவசியம். 

நான் சொன்னதையே நீங்க கொஞ்சம் மாத்தி சொல்றீங்க. அதுல கொஞ்சம் மாற்றம். இசுலாமிய பயங்கரவாதம் தலைதூக்கிய பின்பு முழுவதுமாக விடுதலை இந்து புலிகளின் தீவிரவாதத்துக்கும் எதிரான நிலையை எடுத்து அவர்களையும் எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். பயங்கரவாதங்கள் எதிர்ப்பு உலகம் முழுக்க பேச ஆரம்பித்ததன் விளைவு. முக்கியமா அமெரிக்கா உருவாக்கிய தீவிரவாத சக்திகள் எல்லாம் அமெர்க்காவுக்கு எதிராகவும். இந்தியா உருவாக்கிய புலி தீவிரவாதம் இந்தியாவுக்கு எதிராகவும் மாறியது. 

#தீவிரவாதத்திற்கும் போராளி குழுக்களுக்கும் பகுத்து பார்க்க தெரியவில்லையே.#

உலகத்துல இருக்கும் எல்லா தீவிரவாதிகளும் அவர்களுக்குன்னு ஒரு நியாயம் வைத்து உள்ளனர். புலிகள் தீவிரவாதிகள் இல்லை எனில் உலகத்தில் தீவிரவாதமே இல்லை என்று வாதாடலாம். 


#உலகில் பரவி இருக்கும் ஈழத்தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பணத்தை அனுப்பியதே அவர்கள் இவ்வளவு ஆண்டுகாலம் தாக்கு பிடித்ததற்கு காரணம்...#

உலகில் பரவி இருக்கும் ஈழ தமிழர்கள் எல்லாம் சிங்கிள் டீக்கு எப்படி டிங்கி அடிக்கிறார்கள் என்று போய் பாருங்கள் தெரியும். தமிழ் நாட்டில் இருந்து போன சாப்ட்வார் இஞ்சினியர்கள் சம்பதிக்கிரதுக்கும் அகதிகளாக போய் சம்பாதிக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. 


அகதிகளுக்கு எப்படி ஆடம்பரம் பண பலம். சும்மா ஒரு நாலு பேர் கிட்ட பணம் இருந்தா அகதிகள் எல்லாம் மில்லியனரா? அமெரிக்கவுல கனடாவுல ஒருத்தன் வாழனும்னா எவ்வளவு சம்பாதிக்கணும் தெரியுமா? அதையும் மீறி அவுங்க புலிகளுக்கு பணம் அனுப்பணும்னா நல்ல யோசிச்சு சொல்லுங்க. இங்க சிங்கள் டீ ன்றதும் அங்க சிங்கள் டீன்ரதும் நிறைய வித்தியாசம். நிறைய அகதிகள் அமெரிக்க பிச்சைக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள். 

அதுக்கும் மேல கணடா அமெரிக்கா நாட்ல இருந்து புலிகளுக்கு பண உதவி செய்யக்கூடாதுன்னு சட்டம் வேறு இருக்கு. அப்புறம் எப்படி பண உதவி செய்தார்கள். வெளி நாட்டு சட்டதை எல்லாம் மீறியா? 

No comments:

Post a Comment