Tuesday, February 26, 2013

கஞ்சா கடத்தினவனை  ஆயுதம் கடத்தினவனை  எல்லாம் சேரியில வரஞ்சு வச்சா நம்மள அவன் பொரிக்கின்னுதான் சொல்லுவான். முதல்ல போயி அதையெல்லாம் அழிச்சிட்டு புத்தர், வள்ளுவர், நந்தனார், பண்டிதர், தாத்தா, அண்ணல் அம்பேத்கர், அன்னை மீனாம்பாள் இவுங்க படத்த வரையுங்கள். பிரபாகரனின் கஞ்சா பணத்தில் தமிழ் தேசியம் பேசுபவர்களை தூக்கி எரிந்து விட்டு அன்னை சிவகாமி போன்ற நேர்மையான தலைவர்களை முன்னிறுத்துங்கள். நாளைய சமூகம் கையில் கஞ்சா சாராயம் துப்பாக்கி தூக்க வேண்டாம். அண்ணல் அம்பேத்கர் போல படித்து பட்டம் பெற்று உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்று யோசியுங்கள். நாம சட்டம் எழுதுற கூட்டம் சட்டத்தை மீறும் கொலைகார கொள்ளைகார கஞ்சா விற்கும்  கூட்டம் அல்ல.  நாம் முன்நிறுத்தும்  நமது சமூக தலைவர் நமது சமூகத்தின் ஒட்டு மொத்த அடையாளம். அடியாட்களாக காலத்தை கழிப்பவர்கள் நமக்கு  உதவ மாட்டார்கள். சுய கவுரவத்தோடு நல்ல ஒழுக்கத்தோடு வாழும் தலைவர்கள் நமக்கு தேவை. 

No comments:

Post a Comment