Saturday, February 16, 2013

இந்திய இலங்கை புத்த சகோதரத்துவ நல்லிணக்க சங்கம்



இந்திய இலங்கை புத்த குடிகளின் உறவு என்பது ஆயிரம் ஆயிரம் காலமாக இருக்கும் ஒரு உறவு. தற்காலம் சிங்களர் - தமிழர் எனும் இனபேதம் காட்டி அந்த உறவு சீரழிக்கப்பட்டு வருகிறது. இலங்கை சிங்கள மக்கள் எல்லோரும் நல்லவர்கள் அவர்களிடம்  இன வெறி உள்ளவர்கள் இல்லை என்பது நமது வாதம் அல்ல. தமிழ் பேசும் மக்களிடையே மத ஜாதி மொழி இன வெறியர்கள் இருப்பது போல சிங்களம் பேசும் மக்களிடையிலும் மத ஜாதி மொழி இன வெறியர்கள் இருப்பது உண்மைதான். ஆனால் அதை காரணம் காட்டி எல்லா இலங்கை புத்த தம்ம குடிகளும் மத ஜாதி மொழி இன வெறியர்கள் போல ஆதிக்க சமூக ஊடகங்கள் பரப்பி வருகின்றன. அது உண்மை இல்லை இலங்கை மண்ணிலும் அன்பும் கருணையும் நிறைந்த புத்த குடிகள் உள்ளனர். அவர்களின் அன்பும் கருணையும்தான் ஆயிரம் ஆண்டுகள் புத்த தம்ம  சாசனத்தையும் புத்த தம்மை கலாச்சாரத்தையும் காத்து வந்து உள்ளது. அண்ணல் அம்பேத்கர் இலங்கை சென்று இருந்த போது சாக்கிய மக்கள் நடத்திய பொது கூட்டதில் பேசும்போது, இலங்கை புத்த குடிகளோடு சேர்ந்து கொள்ளுங்கள் என்று நமக்கு அன்பு கட்டளையிட்டார். அண்ணலின் வழியில் அவரது அன்பு வேண்டுகோளை ஏற்று இந்திய-இலங்கை புத்த குடிகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தம்ம பனியாற்ற வேண்டியுள்ளது நமது கடமை.  இலங்கை புத்த குடிகள் மீது தொடர்ந்து பரப்பப்பட்டுவரும் பொய் வதந்திகளை ஏற்காமல் அதை முறியடிக்கும் எதிர் பிரச்சாரத்தை நாம் செய்ய வேண்டியுள்ளது. மேலும், இலங்கை புத்த குடிகளிடம் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஒவ்வொரு சாக்கிய குடிக்கும் உள்ளது. புத்த தம்மத்தை பின்பற்றும் நம்மிடையே சகோதரத்துவம் நல்லிணக்கம் இல்லை எனில் நாம் எப்படி உலக உயிர்கள் இடத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த முடியும். வாருங்கள் அன்பும் கருணையும் நிறைந்த மனத்துடன் இலங்கை புத்த குடிகளுடன் ஒருங்கிணைவோம். 

No comments:

Post a Comment