Wednesday, February 20, 2013


((((உங்களை வேறாக பார்க்காமல் மஹ்ராஷ்ட்ராவில் உள்ள தலீத வசிக்கும் இடத்தில் தங்கி வாழ அனுமதிப்பார்களா?)))) முதலில் ஊரையும் சேரியையும் ஒன்றாக்கிட்டு இதை கேட்கவும்.

((((தமிழ்நாட்டு தலீத் மகக்ளுடன் ,மராட்டிய தலீத்கள் பெண் கொடுத்து,பெண் எடுப்பார்களா?))))) தமிழர்களுக்கு உள்ளே இருக்கும் ஜாதிகளுக்குள் திருமணம் செய்து விட்டு இதை கேட்கவும்.

(((அவர் சொன்னதில் காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யும் துணிவு வேண்டும்,))) அதனால்தான் சேரும் சகதியும் நிறைந்து நாற்றம் அடிக்கும் தமிழ் கலாச்சார சாக்கடையை தூக்கி எரிந்து விட்டு அண்ணல் சொன்ன கருத்தை ஆராய்ந்து புரிந்து அதுவே சரியான பாதை என்று உணர்ந்து அவர் வழியில் போய்க்கொண்டு இருக்கிறோம்.

சிந்திக்க தெரியாத முட்டாள்கள் தான் நான் பிறந்த மதம் என்மதம் நான் பிறந்த ஜாதி என் ஜாதி நான் பிறந்த இனம் என் இனம் நான் பிறந்த மொழி என் மொழி என்று கட்டிப்பிடித்து அழுது கொண்டு இருப்பார்கள் . எங்களுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்.  எது எங்களுக்கு நன்மை செய்கிறது அதை கையில் எடுப்போம். ஆங்கிலம் இன்று நாங்கள் உலகை ஆள பயன்படும் எனில் ஆங்கிலத்தை எடுப்போம்.  இந்தி இந்தியாவை ஆள பயன்படுகிறது எனில் இந்தியை படிப்போம். 

No comments:

Post a Comment