Sunday, February 17, 2013

"மார்க்சிய வாதிகளும்" "ராமசாமி வாதிகளும்"  அண்ணல் அம்பேத்கர் வாதிகளை பார்த்து கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். அம்பேத்கர் வாதிகள் படிக்காதவர்களாம். அவர்களுக்கு எந்த உலக தத்துவமும் தெரியாதாம். அவர்கள் அண்ணல் அம்பேத்கர் புத்தகத்தை கூட சரியாக வாசிக்கதவர்களாம். இப்படி சொல்லும் இந்த  "மார்க்சிய வாதிகளும்" "ராமசாமி வாதிகளும்"  எத்தகைய ஆதிக்க மனோ நிலையம் வன்மையும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்று சிந்தியுங்கள். கடந்த நூறு வருடங்களாக மார்க்சிய (ராமசாமிய) சிந்தனைகளை பரப்பும் இவர்களின் சமூக பொருளாதார நிலை என்ன? அம்பேத்கர் வாதிகளின் சமூக பொருளாதார நிலை என்ன? இந்தியா முழுக்க உள்ள படித்த உயர் பதவிகளில் உள்ள பார்ப்பன பனியா கூட்டம் தான் இன்று மார்க்சிய வாதிகளாக உள்ளனர். அவர்கள் கருத்துக்களை பல பெரிய கல்விக்கூடங்களிலும் பயிற்சி பட்டரைகளிலும் பறப்பட்டு வருகிறது. ராமசாமி காலத்திலேயே அவரால் ஆரம்பிக்கபட்ட பத்திரிக்கை  அவர் எழதிய நூல்கள் மக்களுக்கு கொண்டு செல்லும் அளவுக்கு செல்வாக்கு உள்ள வசதி படைத்தவர்கள் அவருடைய இயக்கத்தில் இருந்தனர். ஆனால், அம்பேத்கர் வாதிகளின் நிலை என்ன? இப்போதுதான் அவர் புத்தகம் தமிழில் மொழி பெயர்த்து வந்து உள்ளது. அவரது நூல்களை எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் அளவுக்கு பலம் வாய்ந்த ஊடகமோ அல்லது பலம் வாய்ந்த அமைப்போ அம்பேத்கர் வாதிகளிடம் இல்லை.  அண்ணல் அம்பேத்கர் வாங்கி தந்த உரிமைகளில் பயன் அடைந்த பெரும்பான்மையான கூட்டம் தன்னை மார்க்சிய வாதியாகவும் ராமசாமி வாதியாகவும் தமிழ் தேசிய வாதியாகவும் கட்டிக்கொண்டு தனது சமூக பொருளாதார வளர்ச்சியை வேறு எதற்கோ பயன்படுத்தி கொண்டு இருக்கிறதே ஒழிய அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல பயன்படுத்தவில்லை. பெரும்பான்மையான அம்பேத்கர் வாதிகள் கூட முழுமையாக அவரை பற்றி அறிய முடியாமல் இன்றும் கஷ்டப்படுக்கொண்டு இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் "மார்க்சிய வாதிகளும்" "ராமசாமி வாதிகளும்"  அவர்களை பார்த்து ஏளன சிரிப்பு சிரிக்கின்றனர். காலம் வரும்!!! அம்பேத்கர் வாதிகளும் சிரிக்கும் காலம் வரும். 

No comments:

Post a Comment