Tuesday, February 12, 2013

நாட்ல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது சில கட்சிகள் தலைவர்கள் காதல் கவிதை பெருங்கதை சிருங்கதை சினிமா என்று பேசிக்கொண்டு இருக்கும் அரசியல் உலகில் வேறு எங்கும் இருக்காது. நாட்டின் பொருளாதாரம் ல்வி விவசாயம் தொழில் விஞ்ஞான நிலை, அதில் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் பங்கு,  நாட்டில் நடக்கும் மனித  உரிமை மீறல்கள் குற்றங்கள் தலித் சமூகத்துக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் மற்றும் முஸ்லீம்களின் நிலை? உன்ன உணவு இல்லை, வேலை வாப்பு இல்லை, தங்க வீடு இல்லை, நிலம் இல்லை இப்படி ஆயிரம் பிரச்சனைகள் விவாதிக்க ஆனால், நமது அரசியல் பேசும் கவிஞர்கள் இன்னும் தமிழ் தாயை காப்பது எப்படி காதலை வளர்ப்பது எப்படி என்று சிந்தித்துக்கொண்டு இருக்கின்றனர். உலகத்துல வேறு எங்கேயும் மொழியை வைத்தும் காதலை வைத்தும் அரசியல் வாதிகள் பிழைப்பு  நடத்தவில்லை. ஏதோ சினிமாக்கார்களும் இலக்கியவாதிகளும் காதல் பற்றி எழுதுகிறார்கள் பேசுகிறார்கள் எனில் அர்த்தம் உள்ளது. காதல் இருந்தால் தான் அவர்கள் உற்பத்தி நல்ல விலைக்கு விற்கும் விற்கும். ஆனால்  அரசியல் கட்சிகள்  தலைவர்கள் காதலர்தின வாழ்த்து சொல்லும் நாடு உலகதிலேயே இது மட்டும்தான். இந்த நாடு நல்லா உருப்படும். 

No comments:

Post a Comment