Wednesday, February 20, 2013

தமிழ் நாட்டில் ரம்சாமியிசம் தோத்து போயிடுச்சின்னு யாரு சொன்னது. அது இங்க செழிப்ப வளர்ந்து இருக்கறதுனாலதான் தர்மபுரிகள் தொடர்ந்து நடக்குது ராமதாஸ் போன்ற ஜாதி வெறியர்கள் வெளிப்படையா ஜாதியம் பேசிட்டு சுதந்திரமா திரிகிறார்கள். பேருக்கு பாப்பாத்தி முதலமிச்சர் ஆனால் உண்மையில் ஆளுவது யார்? பார்ப்பனர்களை ஒதுக்கிவிட்டு இங்கு சூத்திர ஜாதிகள்  அதிகம் செல்துவது அந்த ராமசாமியின் உழைப்பின் பலன் தானே. ஒரு கைர்லாஞ்சி உலகமே அதை செவி மடுத்து கேட்டது. அண்ணல் நேரடியாக விதைத்த விதை இன்று மகாராஷ்ட்ராவில் ஆலமரம் போல் நிற்கிறது. உலகத்தின் எந்த மூலைக்கு போனாலும் மாஹார்  சாக்கியனாக  இருக்கிறான். இன்னிக்கு உலகில் உள்ள அணைத்து தலித் / அம்பேத்கர் / இந்திய பவுத்த சங்கங்களும் மஹார்களால் முன்னெடுத்து நடத்தப்படும் அமைப்புகளாக உள்ளது. தமிழ் நாட்டில் ராமசாமியிசம் ஜெயிதுக்கொண்டு இருப்பதனால்தான் இன்னமும் தலித் அரசியல் பவுத்த பண்பாடு இந்த மண்ணில் வர முடியாமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறது. கவ் பெல்ட் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட உபி யில் 15 வருடம் தலித் ஆட்சி. அடுத்த பிரதமர் தயாராகிக்கொண்டு இருக்கிறார். நல்லவேளை அங்கு ரமசாமியிசம் இல்லை. இருந்து இருந்தால் தலித்துக்கள் எல்லாம் தருமபுரி எரியும்போது  டுமில் தேசியமும் திராவிடமும் பேசிக்கொண்டு இருப்பார்கள். இந்தியாவின் டாப் தலித் லீடர்கள் இந்தியாவின் டாப் பவிடத்  பண்பாட்டு ஒருங்கிணைப்பு எல்லாம் மகாராஸ்ட்ராவிலும் உபி யிலும்தான் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தி அதாவது அண்ணல் அம்பேத்கர் இயக்கத்துக்கு வரும் முன்னரும் அவர் காலத்திலும் அவர் இறந்த பிறகும் தலித் இயக்கத்தின் முன்னோடியாக இருந்த தமிழகம் இன்று தமிழ் தேசியம் திராவிடம் எனும் மாயைகளால் பின்னுக்கு போய்க்கொண்டு இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் இயக்கத்துக்கு வரும் முன்னரே எம் சி ராஜா அகில இந்திய ஒடுக்கப்பட்ட இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்தார். அவர் பற்றிய செய்திகள் வங்காள இதழ்களிலும் இந்தி இதழ்களிலும் இருப்பதை இன்றும் காணலாம். தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களை இரட்டை மேஜை மாநாட்டுக்கு அண்ணல் அம்பேத்கர் அழைத்து செல்லவில்லை. அண்ணலையும் தாத்தாவையும் அகில இந்திய ஒடுக்கபட்ட சம்மேளனம் ஒரு மனதாக  தேர்ந்தெடுத்து அனுப்பியது. அண்ணல் காலத்திலும் அதற்க்கு பிறகும் தந்தை சிவராஜ் அகில இந்திய ஷெட்யுட் ஜாதிய சம்மேளனத்துக்கு தலைவராக இருந்தார். அண்ணல் அம்பேத்கருக்கே தலைவராக இருந்தவர் தந்தை சிவராஜ். இன்னைக்கும் பெரும்பாலான மஹார் மக்கள் தந்தை சிவராஜை ஒரு மஹார் என்றும் அவர் அண்ணலின் சகோதரியின் கணவர் என்று நினைத்துக்கொண்டு இருப்பதை அவர்கோடு பழகியவர்களுக்கு தெரியும். நாக்பூரில் பல தெருக்கள் நகர்கள் தந்தை என் சிவராஜின் பெயரில் உள்ளது. அன்னை மீனாம்பாள் அண்ணலின் சொந்த சகோதரி என்று நம்பிக்கொண்டு இருப்பவர்களும் உண்டு. அண்ணல் வாழ்ந்த காலத்தில் அகில இந்திய அளவில் தலித் பெண்களை ஒருங்கிணைத்த பெருமை அன்னை மீனாம்பாளையும் அன்னை சத்தியவாணி முத்துவையும் சேரும். இப்படி ஒரு காலத்தில் அகில இந்திய அளவில் தலித் இயக்கத்துக்கு தலைமை ஏற்று நாடத்திய தமிழக தலித் இயக்கம் இன்று தமிழ் தேசியம் திராவிடம் எனும் ராமசாமியின் ஆதிக்கத்தால் நொந்து கொண்டு இருக்கிறது. நூறு ஆண்டுக்கு முன்னர் நாம் எதிர்த்து ஆன்மீக இந்து ஆதிக்கத்தை என்றால் இப்போது நாம் எதிர்க்க வேண்டி இருப்பது திராவிட தமிழ் தேசியம் எனும் பெயரில் உள்ள சூத்திர இந்துக்களின் ஆதிக்கத்தை. எதிர்க்க தவறினால் தமிழக தலித் இயக்கம் இன்னும் பின்னுக்கு தள்ளப்படும். ஆந்திரா கர்நாடகா மாநிலங்கள் கூட தலித் இயக்கம் மிகவும் வீரியத்துடன் செயல் பத்திக்கொண்டு இருக்கிறது. புத்தம் மிகவும் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் தலித் இயக்கம் தமிழ் தேசியம் திராவிடம் எனும் நச்சுக்கற்றால் நசுகப்படுக்கொண்டு இருக்கிறது. அண்மையில் ஆஷிஸ் நந்தி எனும் ஒருவர் தலித் மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தை சொன்னார். அவர் பொது இடத்தில் மன்னிப்பு கேட்கும் வரை அவரை விரட்டியது தலித் இயக்கம். இங்கே ஒருத்தர் தினமும் நமக்கு எதிராக பேசுக்கொண்டு திறக்கிறார். நம்ம டுமில் டேசிய பிலிகள்  இரண்டு  கையையும் மேலே தூக்கி டுமிளர் ஒற்றுமைக்கு வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள். கைர்லாஞ்சிக்கு அப்புறம் என்ன நடந்தது என்று பாக்கணுமா. சும்மா யுடூப்ல   கைர்லாஞ்சி அப்படின்னு போட்டு பாருங்க தெரியும். அதுக்கு அப்புறம் பத்து கைர்லாஞ்சிகள்  தமிழ் நாட்டில் நடந்து விட்டன. நீங்க நல்லா ராமசாமியிசதுக்கு கூஜா தூக்குங்க நாங்க எங்க இயக்கத்த பாத்துக்கறோம். 

No comments:

Post a Comment