Wednesday, February 6, 2013

ஆண்டன் பாலசிங்கம் சொல்கிறார் எம் ஜி ஆர் ஆறுகோடி கொடுத்தாராம். எம் ஜி ஆருக்கு பிரபாகரன் எ கே 47 அன்பளிப்பா கொடுத்தாராம். இந்த ஆறு கோடியும்  எம் ஜி ஆரின் "சொந்தப்பணம்" கருப்பு பணம் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து ஊழல் செய்து சம்பாதித்த பணம் எந்த கணக்கும் வழக்கும் இந்த பணத்துக்கு கிடையாது. எம் ஜி ஆர் வீட்டு பாதாள அறையில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பணத்தை சூட்கேசுகளில் அடுக்கி வைத்து கொண்டு சென்றதாக சொல்கிறார்கள். இப்படித்தான் கோடி கோடியாக கொள்ளை அடித்த பணம் கருப்பு பணம் ஊழல் செய்த பணம் புலிகளின் ஆயுத கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்டது. இது எம் ஜி ஆர் நடித்த சினிமா இல்லை நிஜம். வாயை பிளந்தது கொண்டு இருட்டு அறையில் சினிமா பார்ப்பவர்களுக்கு புலிகள் செய்தது பிரபாகரன் செய்தது எல்லாம் எம் ஜி ஆர் சிவாஜி கமல் ரஜினி எல்லாம் சினிமாவில் செய்தது போல பிரமிப்பா இருக்கும். ஆனால் சமூக அக்கறை கொண்டவர்கள் எப்படி புலிகளை பிரபாகரனை போற்ற முடியும். ஊழல் கடத்தல் வன்முறை தீவிரவாதம் கொலை என்பதை ஏற்பவர்களும் ஒழுக்கம் அறம் பண்பு என்பவற்றை பற்றி யோசிக்காத கயவர்கள் மட்டுமே பிரபாகரன் போன்ற பன்னாட்டு குற்றவாளிகளை போற்ற முடியும். கொஞ்சமாவது யோசிக்க தெரிந்தவர்கள் நிச்சயம் யோசிப்பார்கள். வருங்கால சமூகம்   ஊழல் கடத்தல் வன்முறை தீவிரவாதம் கொலை பாலியல்வன்கொடுமையற்ற சமூகமாக அமைய யோசிப்போம். 

No comments:

Post a Comment