Monday, February 25, 2013

இலங்கையில் நடப்பது மத பிரச்சனை இல்லையாம்  இனப்பிரச்சனையாம். அப்புறம் எதுக்கு புத்தர் கழுத்தில் எலும்பு கூடுகளை போட்டு சிங்களவர் அடையாளமா கட்டுறீங்க? அப்புறம் எதுக்கு சிங்கள பேரினவாதம் என்று சொல்லாமல் பவுத்த பேரினவாதம் என்று சொல்றீங்க. அப்புறம் எதுக்கு பவுத்தம் பேசினா, இலங்கையை காரணம் காட்டி பவுத்தத்துக்கு எதிர்ப்பா பிரச்சாரம் பண்றீங்க.?தமிழர்கள் என்பது இனம் என்றால் அவர்கள் வழிபாட்டு தளங்கள் என்று எதுக்கு இந்து கோயில்களை காட்டுகிறீர்கள்? இந்து கோயில்களை எல்லாம் இடிச்சிட்டு தமிழர் வாழும் பகுதிகளில் புத்த கோயிலை கட்டுகிறார்கள் என்று எதுக்கு காத்துகிறீர்கள். தமிழர்களின் பண்பாடும் கலாச்சாரமும் அழிகிறது தமிழர்களின் மீது புத்த மத கலாச்சாரம் திணிக்கப்படுகிறது என்று எதுக்கு பிராச்சாரம் செய்கிறீர்கள்? சிறுபான்மை தமிழர் மீது பெரும்பான்மையினர் மதமான பவுத்தம் திணிக்கப்டுகிறது என்று எதுக்கு மத எதிர்ப்பு பேசுகிறீர்கள்? சிங்களவர், தமிழர் மற்றும் இசுலாமியர் என்கிறீர்கள். முஸ்லீம்கள்  என்ன தனி இனமா? சிங்களவர் என்றால் பவுத்தர்கள், தமிழர்கள் என்றால் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் என்று தானே அர்த்தம். தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றம். முஸ்லீங்கள் தமிழ்  இனம் என்றால் எதுக்கு முஸ்லீம்கள் வெளியேற்றம்? தமிழ் பேசும் முஸ்லீம்கள் எல்லாம் தமிழர் இனம் இல்லையா? முஸ்லீம்கள் அப்படி தங்களை தமிழ் இனமாக நினைப்பது இல்லை என்கிரீர்கள். அப்படின்னா ஹிந்துக்கள் மட்டுமே தங்களை தமிழர் இனம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்களா? அப்படி எனில் ஹிந்துக்கள் மட்டும்தானே தமிழர்கள் (கொஞ்சம் இந்துவான கிறிஸ்துவர்கள்). உண்மையில் இலங்கையில் நடப்பது இன சண்டையா? மத சண்டையா? 

No comments:

Post a Comment