Friday, February 15, 2013


((((((எந்த நோக்கத்திற்காக வி.சி.க. தோன்றியதோ அந்தப் பாதையில் இருந்து தடம் புரண்டு எங்கோ சென்று கொண்டிருக்கிறது கட்சி...!))))) 
நான் முதல் முறை 1991 இல் திருமாவை சந்தித்தேன். காலையில் பறையர் சங்க கூட்டம். மதியம் தமிழ் தேசிய கூட்டம். அன்றைக்கு அவர் எப்படி டபுள் ஆக்ஷன் கொடுத்தாரோ, அதைத்தான் இன்று வரை செய்து கொண்டு இருக்கிறார். அவர் மாறவில்லை அவர் சரியாகத்தான் அவர் வேலையை செய்து கொண்டு இருக்கிறார். 80 களில் தலித் இயக்கம் சுயமாக இருந்ததை கெடுக்க உள்புகுந்த திராவிட தமிழ் தேசிய கூட்டங்களில் இவரும் ஒருவர். அதிகாரம் ஆளுமையின் ஆதரவும் அரவணைப்பும் அவருக்கு இருப்பதால் அவர் பிரபலப்படுதப்படுக்கிறார். உண்மையான மக்கள் விளம்பரம் இல்லாமல் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள். திருமா தலித் தலைவரோ தலித் மக்களின் விடிவெள்ளியோ அல்ல. திராவிட தமிழ்  தேசிய விஷத்தை தலித் இயக்கத்தில் கலக்க வந்தவர். அவர் தனது வேலையை அன்று முதல் இன்று வரை சரியாக செய்து வருகிறார். 80 / 90 களுக்கு முன்னால்  தலித் அமைப்பு கூட்டங்களில் ராமசாமி பிரபாகரன் படங்கள் இருந்தது கிடையாது. தலித் அமைப்புகள் நடத்து கூட்டங்களில் மன்றங்களில் அண்ணல் அம்பேத்கர், தாத்தா இரட்டை மலை சீனிவாசன் 
போன்றவர்கள் புகைப்படங்கள் தான்இருக்கும். 80 களில் பெரிய பெரிய அண்ணல்  அம்பேத்கரின் போஸ்டர்கள்  பேணர்கள் சுவர் விளம்பரங்கள் எல்லாம் மாறி, இப்போது பெரிய பெரிய பிரபாகரன் ராமசாமி படங்கள். இதுதான் திருமா செய்த சாதனை. ராமசாமிக்கும் பிரபாகரனுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு நம்மையே எதிர்க்கும் ரசிக சிகாமணிகளை உருவாக்கியதுதான் இவர் சாதனை. எண்பதுகளில் திரவிடம் தமிழ்  தேசியம் பேசுபவர்கள் செய்ததை. தற்போது தலித் இயக்கம் எனும்  பெயரில் செய்து  கொண்டு இருக்கிறார்கள். நாம தமிழ் தேசியத்தையும் திராவிடத்தையும் எதிர்த்தால் இவுங்க முன்னால வந்து நின்று கொண்டு இவர்களை எதிர்க்கிறோம். நமது இயக்கத்தை 
நாமே கொச்சை படுத்துகிறோம் என்கிறார்கள். நாம் எதிர்க்க வேண்டியவர்களுக்கு இவர்களே அரணாக இருந்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் பல இளைஞர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழ் தேசியமும் தலித் விடுதலையும் ஒன்றுக்கொண்று முரணானது. தமிழ் தேசியம் தலித் மக்கள் ஒற்றுமையை குளைக்கும். தலித் விடுதலை என்பது தமிழ் தேசியத்தை வீழ்த்தும். தமிழ் தேசியம் பேசுபவர்கள் தலித்தியத்தை ஏற்பதில்லை. தலித்தியம் பேசுபவர்கள் தமிழ் தேசியத்தை ஏற்பதில்லை. நடுவில் குழம்பி போயுள்ள இந்த  இளைஞர்கள் அல்லல் படுகின்றனர். இதுதான் திருமாவின் சாதனை. 

No comments:

Post a Comment