Thursday, February 28, 2013

என்பது தொன்னூருகளில் நாயக்கனுக்கும் வெள்ளலனுக்கும்  சேரிகளில் சாராயம் காச்சுவான் இவனை காப்பாத்திக்க இவனுக்கு திராவிட அரசியல் தேவை பட்டது. அப்போது அண்ணல் அம்பேத்கர் பெயரில் இயக்கம் கட்டியவர்கள் சாரைய கேன்களை எல்லாம் அடித்து ஒடித்து சாராயம் விக்கறையா தூக்கிட்டு போய் ஊர் தெருவில் வில்லுடா எவனாச்சும் சாராயம் கொடுக்க சேரிக்குள் வந்தால் உதய் படுவீர்கள் என்று புரட்சி செய்தனர் அம்பேத்கர் வாதிகள். அன்று மட்டு அவர்கள் அப்படி தடுக்காமல் இருந்து இருந்தால் திராவிட சாராய அரசியல் போய் தமிழ் தேசிய கஞ்சா அரசியல் அன்றே வந்து இருக்கும். அன்று முதல் இன்றுவரை அம்பேத்கர் வாதிகள்தான் சேதிகளை காவல் தெய்வங்களாக காத்துக்கொண்டு இருக்கிறாகள். அன்றைய திராவிட சாராய வியாபாரிகளின் பிள்ளைகளும் பேரன்களும்தான் இன்னும் சேரிக்கு சாராய திராவிடத்தையும் தமிழ் தேசிய கஞ்சாவையும் கொண்டு வர முயர்ச்சித்துக்கொண்டு இருக்கிறார்கள். தம்மம் உள்ளே வந்தால் மக்கள் பஞ்ச சீலம  பேச ஆரம்பித்து விடுவார்கள் 
அப்புறம் நாம சாராயம் கஞ்சா வியாபாரம் செய்ய முடியாது என்பதில் இவர்கள் தெளிவா இருக்கிறார்கள். 

Wednesday, February 27, 2013

இந்த இந்திய "திரு" நாட்டு தமிழர்கள் உண்மையான தமிழ் இன பற்றாளர்கள் உண்மையிலே தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்று நினைக்கிறார்கள் எனில் ஒன்று பட்ட தனி தமிழ் தேசியம் தானே கேக்கணும். அதை விட்டுட்டு இவுங்க ஜன நாயக வாதிகளா இந்திய தேச தமிழர்களா இருப்பாங்களாம். இலங்கையில் தீவிரவாதம் பண்ணி ஈழம் உருவாக்குவாங்கலாம். ஈழத்த எத்திர்ப்பவர்கள் சிங்கள கைக்கூலிகள் என்றால் ஈழத்தை ஆதரிக்கும் இவர்கள் இந்திய கை கூலிகளா? இந்து கை கூலிகளா?  
பேசாம தமிழ் நாட்ட ரெண்டு மூணு மாநிலமா பிரிச்சிட்டா நிம்மதியா இருக்கும். நார்த் தமிழ் தேசிய வாதிகளையாவது தாக்கு புடிச்சுடலாம் இந்த சவுத்து தமிழ் தேசியம் பேசுறவங்க தொல்ல தங்கலாடா சாமி? அவுங்க பாண்டிய நாட்ல பேன்ட பரம்பரைகளாம் சங்கம் எல்லாம் அவுங்க தான் வளர்த்தாங்களாம். அதனால தமிழின் அருமையும் தமிழ் இன உணர்வும் அவுங்களுக்குத்தான் அதிகமாம். பேசாம ராமதாஸ்  கிட்ட போய் வன்னியர் மக்கள் உள்ள மாவட்டங்களை எல்லாம் இணைச்சு ஒரு வன்னியர் மாநிலம் உருவாக்கினா என்னன்னு கேக்கலாம்னு இருக்கேன். பாவம் நிறைய பாமாகா கட்சியினர் தெலுகு நாயக்கர்களாம். அவுங்களுக்கு இந்த டுமில் தேசியத்துல ஈடுபாடு இல்லையாம். தமிழ் நாடா மொத்தமா இருக்கிறவரை வடக்கே அதிகமா உள்ள வன்னியனோ  தெற்கே அதிகமா உள்ள தேவனோ அதிகாரத்துக்கு வர முடியாது இவுங்க இரண்டு பேரையும் எமாத்திட்டு திராவிட தமிழ் தேசியவாதிகளே அதிகாரம் பண்ணிட்டு இருப்பார்கள் அப்படின்னு ராமதாசு ஏற்கனவே வருத்தப்பட்டுட்டு இருக்குறதா கேள்வி பட்டேன். 

Tuesday, February 26, 2013

கடவுள் இருக்கா இல்லை என்பது முக்கியம் அல்ல சமூகத்துல ஒழுக்கம் இருக்கா இல்லையா என்பது தான் முக்கியம். சாமி கும்புட்டுனே அயோக்கிய தனம் பண்றவனும் இருக்கான். சாமி இல்லைன்னு சொல்லிட்டு திரியரவனும் அயோக்கியத்தனம் பண்றான். சாமி உண்டுன்னு சொல்றவனும் ஜாதி வெறியனா இருக்கான் ஜாதி இல்லைன்றவனும் ஜாதி வெறியனா இருக்கான். சாமி உண்டு. சாமி இல்லை என்று போதிப்பதை விட்டு விட்டு பஞ்ச சீலத்தை மக்களுக்கு போதியுங்கள்.
கஞ்சா கடத்தினவனை  ஆயுதம் கடத்தினவனை  எல்லாம் சேரியில வரஞ்சு வச்சா நம்மள அவன் பொரிக்கின்னுதான் சொல்லுவான். முதல்ல போயி அதையெல்லாம் அழிச்சிட்டு புத்தர், வள்ளுவர், நந்தனார், பண்டிதர், தாத்தா, அண்ணல் அம்பேத்கர், அன்னை மீனாம்பாள் இவுங்க படத்த வரையுங்கள். பிரபாகரனின் கஞ்சா பணத்தில் தமிழ் தேசியம் பேசுபவர்களை தூக்கி எரிந்து விட்டு அன்னை சிவகாமி போன்ற நேர்மையான தலைவர்களை முன்னிறுத்துங்கள். நாளைய சமூகம் கையில் கஞ்சா சாராயம் துப்பாக்கி தூக்க வேண்டாம். அண்ணல் அம்பேத்கர் போல படித்து பட்டம் பெற்று உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்று யோசியுங்கள். நாம சட்டம் எழுதுற கூட்டம் சட்டத்தை மீறும் கொலைகார கொள்ளைகார கஞ்சா விற்கும்  கூட்டம் அல்ல.  நாம் முன்நிறுத்தும்  நமது சமூக தலைவர் நமது சமூகத்தின் ஒட்டு மொத்த அடையாளம். அடியாட்களாக காலத்தை கழிப்பவர்கள் நமக்கு  உதவ மாட்டார்கள். சுய கவுரவத்தோடு நல்ல ஒழுக்கத்தோடு வாழும் தலைவர்கள் நமக்கு தேவை. 

 புலிகளின் கஞ்சா பணத்தில் தமிழ் தேசியம் பேசுபவர்கள் என்னை சிங்களவனின் கைகூளியாகவே பார்க்கிறார்கள். 
நீங்க தமிழர்களுக்கு அறிவுரை சொல்லுவதில் எனக்கு பிரச்சனை இல்லை. தமிழர் அல்லாத எங்களை வாழ விடுங்கள். என்கிறேன். "தமிழ்" நாடு எனும் இந்த நிலம் எங்களுக்கும் சொந்தம் நாங்கள் எங்கள் மொழியில் பேச எங்கள் மொழியில் எங்கள் மத சம்பிரதாயங்கள்  செய்ய எங்களுக்கும் உரிமை உண்டு என்கிறேன். 
"ஆதியில் கடவுள் வனத்தை படைத்தார் வனத்துக்கு கீழ பூமியை படைத்தார் பூமியில் மனிதனை படைத்தார் அவனுக்கு தமிழை சொல்லி கொடுத்தார் அந்த நிலப்பரப்புதான் லெமூரியா கண்டம். அதில் இருந்து வந்ததுதான் மற்ற இனங்கள் மற்ற மொழிகள்". ஒஹ்  நாத்திக தமிழர்களா? முதல் இரண்டு வாக்கியத்தை எடுத்துடுங்க "உலகில் முதலில் தோன்றியது லெமூரியா கண்டம், முதலில் தோன்றிய இனம் தமிழர், முதலில் பேசிய மொழி தமிழ். அதில் இருந்து வந்ததுதான் மற்ற இனங்கள் மற்ற மொழிகள்.  இரண்டு கூ  முட்டைகளும்  சொல்றது "அதில் இருந்து வந்ததுதான் மற்ற இனங்கள் மற்ற மொழிகள்". 
பூலான் தேவின்னு ஒரு அம்மா. அவுங்க ஜாதிய கொடுமைகளை நேரில் அனுபவிச்சாங்க. அந்த கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி இல்லாமல் குற்றவாளியா மாறினாங்க. பல கொலை கொள்ளை என்று வாழ்ந்தார்கள். அரசு தண்டிக்காத ஜாதி குற்றவாளிகளுக்கு அவுங்களே தண்டனை கொடுத்தாங்க. அவுங்களை கடைசி வரை கொள்ளைகாரி என்றே  சொன்னார்கள். அவுங்களை பிடிக்க முடியாமல் அரசு தவித்தது. கடைசியில் அந்த அம்மாவே தான் பின்பற்றும் செயல் சரி இல்லை என்று வந்து சரண்டர் ஆனாங்க. அவுங்க பட்ட கஷ்டத்தையும் அவுங்க குற்றவாளியா ஆன காரணத்தையும் அலசி ஆராய அரசு 11 வருசம் எடுத்துக்கொண்டது. கடைசியில் அவர்களை விடுதலை செய்தது. விடுதலை ஆன பிறகு தான் போனது சரியான வழி இல்லை என் நோக்கம் பழி வாங்கும் நோக்கம் அல்ல என்னை  காத்துக்கொள்ள வேறு வழி இல்லை என்று பிரச்சாரம் செய்தார்கள். இப்படி தன் சொந்த வாழ்வில் கொடுமைகளை அனுபவித்தவர் தன்னுடைய சூழ்நிலையால் குற்றவாளியாக மாறியவர். அவரையே நாம் மகான் மேதகு என்று சொல்வதில்லை. அவர் போன்ற நிலை நமது பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்று தான் நினைக்கிறோம். அவர் பட்ட கஷ்டம் ஏதாவது பிரபாகரன் பட்டு இருப்பாரா? அந்த அம்மாவை விடுங்கள். சாதரணமா நம்ம சேரியில் இருக்கும் எவராவது ஒரு தலித் பட்ட கஷ்டத்தில் எதையாவது பிரபாகரன் பட்டு இருப்பாரா? பின் எது அவரை பயங்கர வாதியாக ஆக்கியது. காட்ல சாதரணமா சில்லி குற்றங்கள் செய்து பூலான் தேவி கொள்ளைக்காரி? உலக மகா கடத்தல்கரன் மேதகுவா? 

Monday, February 25, 2013


((((((((இந்து என்று குறிப்பிடப்படும் எஸ்சி.எஸ்ட்டி. மக்கள் இந்து மதம் அல்ல? அவர்கள் இந்துக்களாக கணக்கிடப் பட்டுள்ளார்கள். அவர்கள் பவுத்தம் மாற வேண்டியதில்லை.. பவுத்தமே அவர்களின் பூர்வீகம் என்பதை திருத்தம் செய்து இந்துமத பட்டியலில் இருந்து பிரித்தெடுக்க முயல்வோமாக.))))  பவுத்தம் மாற வேண்டியதில்லை. இப்படியே சொல்லிட்டு இந்துக்களாகவே இருங்கள். தமிழ் நாட்டில் வெறும் 5393 (2001 மக்கள் தொகை) பேர் மட்டும் உண்மையான அம்பேத்கர்வாதிகள். அவுங்க மட்டுமே தங்களை பவுத்தர்கள் என்று பதிந்து உள்ளனர். மற்றவர் எல்லாம் பொங்கலுக்கு கரும்பு சாப்பிட்டு தமிழர் ஒற்றுமை பேசும் அம்பேத்கர்வாதிகள். மாரியாத்தாவுக்கு  கூழு ஊத்தும் அய்யனாருக்கு கடாவெட்டும் அம்பேத்கர்வாதிகள். ஏசுவுக்கு சிலுவையும், அல்லாவுக்கு குல்லாவும் போடும் அம்பேத்கர்வாதிகள். ராமசாமிக்கு தாடி முடி புடுங்கும் அம்பேத்கர்வாதிகள், பிரபாகரன் ஆயுதம் கடத்த வீட்டு வசதி செய்து கொடுத்த அம்பேத்கர் வாதிகள். நாத்தீகம பொது உடமை பேசிக்கொண்டே இந்துவாக இருக்கும் அம்பேத்கர்வாதிகள். 


இந்துவாக இருந்து கொண்டே மத எதிர்ப்பு பேசுவது. பவுத்த எதிர்ப்பு பேசிக்கொண்டே பவுத்த மாநாட்டில் கலந்து கொள்வது. கடவுள் இல்லை என்று நம்பிக்கொண்டே இசுலாத்துக்கு மதம் மாறுங்கள் என்று சொல்லுவது. இந்து கலாச்சரத்தையும் இந்து பண்பாட்டையும் காக்க சேவ் தமிழர்கள் இயக்கம் நடத்துவது. உண்மையில் உலகத்தில் ஒரு பெரிய காமெடி அரசியல் "தமிழ்" நாட்லதான் நடக்குது. இவனுங்க லாஜிக் என்ன "பகுத்து" அறியும் அந்த அறிவு என்ன? ஒண்ணுமே நம்ம சின்ன அறிவுக்கு எட்ட மாட்டேங்குது.
Like ·  ·  ·  · Promote
  • Arul Marutha Rajan and Stalin Thi like this.
  • Birlathangadurai Birlathangaduraikuppusami இந்து என்று குறிப்பிடப்படும் எஸ்சி.எஸ்ட்டி. மக்கள் இந்து மதம் அல்ல? அவர்கள் இந்துக்களாக கணக்கிடப் பட்டுள்ளார்கள். அவர்கள் பவுத்தம் மாற வேண்டியதில்லை.. பவுத்தமே அவர்களின் பூர்வீகம் என்பதை திருத்தம் செய்து இந்துமத பட்டியலில் இருந்து பிரித்தெடுக்க முயல்வோமாக..
  • சாக்கிய பறையனார் பவுத்தம் மாற வேண்டியதில்லை. இப்படியே சொல்லிட்டு இந்துக்களாகவே இருங்கள்.
  • Birlathangadurai Birlathangaduraikuppusami மாற்றப்பட்டதை மாற்றிட முயலுங்கள் என்றால் இவர் மாறிட்டாராம் மற்றதெல்லாம் தானா மாறிடுமாம்..,
  • சாக்கிய பறையனார் தானா மாறும் என்று சொல்லவில்லை. தள்ளி போடாதீர்கள் என்று சொல்கிறேன். இப்படியே வியக்கானம் பேசாமல் மதம் மாறுங்கள். முதலில் உங்கள் சான்றிதழை மாற்றுங்கள். நீங்கள் ஒரு ஆள் மாறுவது கூட இந்து மதத்துக்கு அழுவுதான். ஒட்டு மொத்த சமூகமும் மாறும் வரை நீங்கள் தூங்க வேண்டாம் என்கிறேன்.
  • Birlathangadurai Birlathangaduraikuppusami மரம் வெட்ட கோடறி மட்டும் போதாது.. கோடாறிக்கும் மரத்தின் கிளை பிடிகம்பாக இருக்க வேண்டும்.., வரலாற்று ரீதியாக ஒவ்வொன்றும் நம்மிட மிருந்து பிடுங்கப்பட்டு அவைகள் இந்து கோட்பாட்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளது... கௌதமர் தமிழகத்தில் ஐயனாராகவும், முனியாகவும், மாற்றப்பட்டதை கண்டறிந்து மாற்றிட வில்லையெனில் பவுத்தம் புதிய ஒரு மதமாகத்தான் அடிப்படை அறியா எம்மக்களுக்கு தெரியும்
  • சாக்கிய பறையனார் ((((((((இந்து என்று குறிப்பிடப்படும் எஸ்சி.எஸ்ட்டி. மக்கள் இந்து மதம் அல்ல? அவர்கள் இந்துக்களாக கணக்கிடப் பட்டுள்ளார்கள். அவர்கள் பவுத்தம் மாற வேண்டியதில்லை.. பவுத்தமே அவர்களின் பூர்வீகம் என்பதை திருத்தம் செய்து இந்துமத பட்டியலில் இருந்து பிரித்தெடுக்க...See More
    7 minutes ago · Like · 1
  • சாக்கிய பறையனார் இப்படி வியாக்காணம் பேசிட்டு செத்து போயிடுவோம். நாங்கள் மதம் மாறும்/ மாற்றும் வேளையில் தீவிரமாக உள்ளோம். புத்தம் எங்களுக்கு புது மதமாக வந்தாலும் பரவாயில்லை மாறுவோம்.
  • சாக்கிய பறையனார் 2011 இல் எவ்வளவு பேர் மாறி உள்ளனர். 2021 இல் எவ்வளவு பேர் மாறபோகிறார்கள், என்று திட்டமிட்டு செயல்படுவதே நமது வேலை.
  • Birlathangadurai Birlathangaduraikuppusami நல்ல விடயம் ட்ரை பன்னுங்க... வாழ்த்துக்கள்.
    தம்மம் தழைத்தோங்குக.. ஜெய்பீம்.
  • சாக்கிய பறையனார் மதம் மாறும்/ மாற்றும் பணியில் ஈடுபட தொடர்பு கொள்ளவும். The Sakya Group is organizing a Sakya Dhamma Yatra meeting on 
    Sunday, 3rd March, 2013 in connection with the Sakya Dhamma Yatra – 1 
    (dated Wednesday, 6th February t
    ...See More

தாய் மொழியில பேசு தாய் மொழியில பேசுன்ரானுங்க்க  நம்ம தாய் மொழியில பேசுனா நாம அவுங்க தாய் மொழிய கொலறதா நினைத்து செம காண்டு ஆவுராணுங்க நாம இன்னாதான் செயுருது.  (((((((((இந்த கொய்ந்தய்ங்ளுக்கு  இந்நேத்திக்கி  ஹிந்தியோ, தமிளோ, மராட்டியோ கத்து குத்து  இர்ந்தா இந்நேர்திக்கி அந்த அம்மா கிட்ட நாலு வாத்தை பேசி நாலு நல்ல (சாக்கிய புத்த தம்மம்) விஷயங்களை கத்துக்கினு கெடப்பாங்க. ஊகிட்டதான் வர்ஷம் புல்லா "தாய்" பாஷைல  பேசிக்கினு கீறாங்களே அப்புறம் இண்ணாத்த  "தாய்" பாஷைல புச்சா கத்துக்கினு கீக்க போறாங்க. "தாய்" பாஷன்றது ஊட்ல பேசுறது அதுக்கு இன்னாத்துக்கு  ஸ்பெஷல் கிளாஸ் எத்துகினு  கீர. மத்த பாஷைய கத்துக்கத்தான்  ஸ்பெஷல் கிளாஸ் தேவை கீது பாஸு. குண்டு சட்டியில குதுர ஒட்டாம ஒய்ங்கா  புள்ள குட்டிகள  அவுட்ல  அனுப்பு. "சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்று ஊட்லியே குந்திக்குனு கப்சா உட கூடாது. அவுட்ல போய் கத்துக்கணும். அவுட்ல  எங்கியும் போனம்னா அதுக்கு ஜாஸ்தியா பாஷை தெரினும்.  பக்கத்துல குந்திக்கினு  இருக்குற பிக்குணி அம்மாக்கு  இங்கிலீசு, ஹிந்தி, மராட்டின்னு மூணு பாஷை தெரியும். அவுங்க.  இண்டியாவுல கீற சந்து பொந்து  எல்லாத்துக்கும்  போயி தம்மம் பேசிட்டு கீறாங்க. "தாய்" பாஷைய ஒன்னும் பெர்டிளைசர் எல்லாம் போட்டு டெவலெப்  பண்ண தேவை இல்லை அது தானா வளரும். ஊ பண்ணை பாஷைய "பிள்ளை" தமிழை  பல்கலைகழக புக்கீஷ் பாஷைய எங்க மேல வச்சு அமுக்காம இருந்தா நல்லா இருக்கும். நாங்க இன்னும் நூறு வருஷத்துக்கு  நேச்சுரளா மெட்ராஸ் பாஷைல பேசி என்ஜாய் பண்ணிக்கினு கெடப்போம்.  அது பல நியுவ் டைமென்ஷன் எடுக்கும். நான் இங்க  எய்துன ரொம்ப  வார்ட்ஸ் உநக்கு  புரியாம கூட இருக்கலாம். நிறைய வார்ட்ஸ் தமிழ் வார்ட்சா  கூட இருக்கலாம். ஆனா இதான் நம்ம  "தாய்" பாஷ. நேச்சுரலா மனம் விட்டு பேசி என்ஜாய் பண்ற  பாஷைதான் தாய் பாஷை. டிக்ஷனரி வச்சு தேடி தேடி எழுதுவது பண்டிதர்களின் பாட சாலை "மொழி".  நீ வா போன்னு  சொல்றது மரியாதை குறைவு இல்லை நாங்க  நேச்சுரளா அப்புடித்தான் பேசுவோம். அம்மா அப்பாவ கூட நீ வா போன்னுதான் பேசுவோம். வெளியே வந்து உங்க "பொது"  தமிழ் கத்துக்கிட்டு "வாங்க" "போங்க" ன்னு சொல்லிட்டு கொடுமைடா சாமி. )))))))))))

ஹிந்து என்றால் திருடர்கள் என்று தமிழ் இன தலைவரே ஒரு முறை சொன்னார். ஏன்  அப்படி சொன்னீர்கள் என்று கேட்ட்டக்கு நானும் திருடன்தான் சாரி ஹிந்துதான் அப்படின்னு சொன்னாரு. ஆண்ட பரம்பரை தமிழர்கள் என்று பெருமை  பட்டுக்கொள்ளும் எல்லோரும் குற்ற பரம்பரைதானே. வீடு கொளுத்திகள் மரம் வெட்டிகள் என்று எல்லோரும் குற்றபரம்பரை வம்சா வழியினர்தானே. இவர்களை சீர்திருத்த நிறைய புத்த பள்ளிகள் தேவை. 
சிங்களவன் உனக்கு எதிரியா தெரியலாம். உன் இன எதிரியா தெரியலாம். உன் மதத்தை எதிர்க்கும் எதிரியா தெரியலாம். எனக்கு  எப்படி அவன் எதிரியா தெரிவான். ஆயிரம் ஆண்டுகள் புத்த தம்மத்தை அடைகாத்து வந்த சமூகம். எங்கள்  கலாச்சார, பண்பாட்டை தம்மத்தை பூர்வீக குடிகளின் மொழிகளை இழந்து திரிந்த எங்களுக்கு 



இந்திய துணை கண்டத்தில் எப்போதும்  இன சண்டை நடக்கவில்லை மத சண்டைதான் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். இந்திய வரலாறு என்பதே பார்பணியதுக்கும் பவுத்தத்துக்கும் இடையே நடந்த சண்டை என்கிறார். அதன் தொடர்ச்சிதான் இலங்கையில் நடப்பது என்பது எங்கள் கருத்து. 
((((((((((((மேற்குலகம் குறிப்பாக அமெரிக்கா இந்தியாவின் துணையுடன் எம்மை அழித்ததுதான் வரலாறு. அதற்கு கருவியாக சிங்களம் இருந்ததே உண்மை.)))))))) எதுக்கு மேற்கு உலகம் குறிப்பா அமெரிக்கா  உங்களை அழிக்கனும். இதுல இருந்து என்ன தெரிகிறது. நீங்க இலங்கை இறையாண்மைக்கு இலங்கை நாட்டு மக்களுக்கு மட்டும் அல்ல மேற்கு உலகம் குறிப்பா அமெர்க்க நாட்டின்  இறையாண்மைக்கும்  மக்களுக்கும் கூட ஆபத்தானவர்கள். உலக நாடுகள் எல்லாம் அந்த நாட்டின் பாதுகாப்பை காக்க அந்த நாட்டின் பயங்கரவாதிகளை அழிக்க முற்ப்பட்டபோது உலக பயங்கரவாதிகள் எல்லாம் உலக நாடுகளை பொதுவாக தாக்கி தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முயன்றன. உலக நாடுகளில் உள்ள தீவிரவாதிகள் ஆயுதம் கஞ்சா கடத்தல்காரர்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் தொடர்புகளை ஏற்ப்படுத்திக்கொண்டனர். அந்த வளையத்தில் புலிகளும் இருந்தனர் இன்னும் விடுபட்ட புலிகள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. உலகம் முழுக்க உள்ள பயங்கரவாதத்தை அழிக்க மேற்க்கத்திய  அமெரிக்கா நடத்திய வலையில் சிக்கியவர்கள்தான் இந்த புலிகள். அமெர்க்கா அழித்தது அமெர்க்கா அழித்தது  என்று அழுகுறீர்களே அமெரிக்கா எதுக்கு உங்களை அழிக்கனும்.  நீங்க ஈழ போராளிகள் நீங்க உங்க விடுதளைக்காக  இலங்கை அரசை  எதிர்த்து போராடும்போது அங்கு அமெரிக்காவுக்கு என்ன வேலை. நீங்கள் உங்கள் ஆயுதத்தை பெருக்க பன்னாட்டு பயங்கரவாதிகளுடன் கொண்ட தொடர்பு அமெர்க்காவின் எதிரிகளுடன் நீங்கள் கொண்ட தொடர்பு உங்களை அழித்தது. 
ஈழமும் வராது ஒரு வெங்காயமும் வராது. ஈழம் எனும் பிரபாகனின் ஹிந்து சாம்ராஜ்யக்கனவு 2009 லேயே மண்ணோடு மண்ணாகி விட்டது. இந்து மதம் துணிய காணோம் துப்பட்டாவ காணோம்னு ஓடிட்டு இருக்கு. புத்தம் மக்களிடம் வேகமாக  பரவிக்கொண்டு இருக்கிறது. சிங்களமும் தமிழும் வேகமா கலந்து இலங்கையர் எனும் ஒன்றுபட்ட சமூகம் உருவாகிக்கொண்டு இருக்கிறது. இலங்கையில் வேகமா இன ஒற்றுமை நடந்து கொண்டு இருக்கிறது. நாத்திக போர்வையில் உள்ள இந்து வெறியர்களும் பவுத்த எதிரிகளும் இலங்கை மகாபோதியில்  உள்ள ஒரு அரச இலையையும் புடுங்க முடியாது. 
இலங்கையில் நடப்பது மத பிரச்சனை இல்லையாம்  இனப்பிரச்சனையாம். அப்புறம் எதுக்கு புத்தர் கழுத்தில் எலும்பு கூடுகளை போட்டு சிங்களவர் அடையாளமா கட்டுறீங்க? அப்புறம் எதுக்கு சிங்கள பேரினவாதம் என்று சொல்லாமல் பவுத்த பேரினவாதம் என்று சொல்றீங்க. அப்புறம் எதுக்கு பவுத்தம் பேசினா, இலங்கையை காரணம் காட்டி பவுத்தத்துக்கு எதிர்ப்பா பிரச்சாரம் பண்றீங்க.?தமிழர்கள் என்பது இனம் என்றால் அவர்கள் வழிபாட்டு தளங்கள் என்று எதுக்கு இந்து கோயில்களை காட்டுகிறீர்கள்? இந்து கோயில்களை எல்லாம் இடிச்சிட்டு தமிழர் வாழும் பகுதிகளில் புத்த கோயிலை கட்டுகிறார்கள் என்று எதுக்கு காத்துகிறீர்கள். தமிழர்களின் பண்பாடும் கலாச்சாரமும் அழிகிறது தமிழர்களின் மீது புத்த மத கலாச்சாரம் திணிக்கப்படுகிறது என்று எதுக்கு பிராச்சாரம் செய்கிறீர்கள்? சிறுபான்மை தமிழர் மீது பெரும்பான்மையினர் மதமான பவுத்தம் திணிக்கப்டுகிறது என்று எதுக்கு மத எதிர்ப்பு பேசுகிறீர்கள்? சிங்களவர், தமிழர் மற்றும் இசுலாமியர் என்கிறீர்கள். முஸ்லீம்கள்  என்ன தனி இனமா? சிங்களவர் என்றால் பவுத்தர்கள், தமிழர்கள் என்றால் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் என்று தானே அர்த்தம். தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றம். முஸ்லீங்கள் தமிழ்  இனம் என்றால் எதுக்கு முஸ்லீம்கள் வெளியேற்றம்? தமிழ் பேசும் முஸ்லீம்கள் எல்லாம் தமிழர் இனம் இல்லையா? முஸ்லீம்கள் அப்படி தங்களை தமிழ் இனமாக நினைப்பது இல்லை என்கிரீர்கள். அப்படின்னா ஹிந்துக்கள் மட்டுமே தங்களை தமிழர் இனம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்களா? அப்படி எனில் ஹிந்துக்கள் மட்டும்தானே தமிழர்கள் (கொஞ்சம் இந்துவான கிறிஸ்துவர்கள்). உண்மையில் இலங்கையில் நடப்பது இன சண்டையா? மத சண்டையா? 
முஸ்லீம்களையும் பவுத்தர்களையும் சகட்டு  மேனிக்கு தாக்கும் உங்களால் பிரபாகரன் கொலையாளி பயங்கரவாதி தீவிரவாதி என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிங்களவன் எல்லோரும் அயோக்கியர்கள் இன வெறியர்கள் முஸ்லீம்கள எல்லோரும் மத வெறியர்கள் தீவிரவாதிகள் சகிப்பு தன்மை அற்றவர்கள் என்று நீங்கள் சொல்வதுபோல, இந்துக்கள் எல்லோரும் அயோக்கியர்கள் தமிழர்கள் எல்லோரும் இனவெறியர்கள் என்று நாங்கள் சொல்லவில்லையே. LTTE தீவிரவாதி அமைப்பு பிரபாகரன் பயங்கரவாதி. புலிகளுக்கு கொடி பிடிப்பவர்கள் அடிப்படை சமூக ஒழுக்கம் அற்ற அயோக்கியர்கள். இதுதான் எங்கள் வாதம். 

Sunday, February 24, 2013


புலிகள் எப்படி தீவிரவாதியாக ஆனாங்க?  அதுக்கு கரணம் என்ன என்று நீங்கள் சொல்லும் எல்லாமே உண்மையாக இருக்கலாம். பிரபாகரன் பயங்கரவாதியா?  இல்லையா? உலகத்துல இருக்கும் முப்பது முக்கிய பயங்கரவாத அமைப்புகள் லிஸ்டில் LTTE  இருக்கா? இல்லையா?  பிரபாகரன் ஆயுதம் கடத்தினாரா இல்லையா? உலகில் உள்ள கருப்பு பணம் ஊழல் பணம் எல்லாம் அவருடைய இயக்கத்துக்கு வாங்கினாரா இல்லையா?  


எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகள் தான் மண்ணில் பிறக்கையில். அவர்கள் நல்லவர்ஆவதும் தீயவர் சமூக கட்டமைப்பால் தான் என்று குற்றவாளிகள் பற்றிய சமூக ஆய்வு சொல்லுது. 

இரண்டு மாதத்துக்கு முன்னர் அமெரிக்காவில் உளவு துறை விசாரணையில் இராண்டு தமிழர்கள் LTTE க்கு ஆயுதம் கடத்த சதி திட்டம் தீட்டியதாக செய்தி வந்தது அவர்க 1 மில்லியன் அமெரிக்கன்  டாலர்  மதிப்புள்ள ஆயுதங்களை LTTE க்கு கடத்த திட்டமிட்ட செய்திகள் வெளிவந்தது. அவர்கள் இலங்கைக்கு படிக்க வந்த  தமிழ் மாணவர்களை பயன்படுத்திக் கொண்டதாகவும் செய்தி வந்தது. இந்த செய்திகள் எல்லாம் பொய்யா? அமெரிக்காவின் அபிசியல் வளைதளத்தில் செய்தி உள்ளது. 

ஒபிசியல் லிங்க் வேணும்னா சொல்லுங்க அனுப்பறேன். அமெரிக்காவை பொறுத்தவரை 
உலகத்துல இருக்கும் முப்பது முக்கிய பயங்கரவாத அமைப்புகள் லிஸ்டில் LTTE  யும் இருக்கு. ஐக்கிய நாடு சபையும் LTTE அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பதிவு செய்து உள்ளது.  

((((((((பிரபாகரன் பிறப்பில் தீவிரவாதி இல்லை அவர் தீவிரவாதி ஆக்கப்பட்டார்.))))) ஒசாமா பிறப்பிலேயே தீவிரவாதியா? அல்லது அவரும் தீவிரவாதியாக ஆக்கப்பட்டாரா?  

Saturday, February 23, 2013

யாரு வெறி பிடிச்சு அலையராங்கன்னு அவுங்க நிதானம் ஆற்ற வார்த்தைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அம்பது வருஷ ஈழ பிரச்சனைக்கே இப்படி பொங்குரீங்களே ஆயிரம் வருஷ தீண்டாமை ஒடுக்குமுறைக்கு எதிரா நாங்க எப்படி பொங்கணும். ஆனாலும் வெறி அற்று நிதானாமா இருக்கோம். எதிர் கருத்து இருந்தா விவாதம் பண்ணுங்க. "___________" ன்னு உங்க பெயர்களை எல்லாம் எங்களுக்கு சூட்டாதீர்கள். 

Friday, February 22, 2013

விஸ்வரூபம் படத்துக்கு உருவி உருவி அழுதவர்கள் முஸ்லீம் தீவிரவாதத்தை ஆப்கானிஸ்தான் போய் எதிர்த்தவர்கள் அமெரிக்கா வோடு கூட்டு சேர்ந்தவர்கள். உண்மைய சொன்னா முஸ்லீம்களுக்கு அதை பொறுக்க சகிப்புத்தன்மை இல்லை என்று இந்து சகிப்பு தன்மைக்கு வக்காலத்து வாங்கியவர்கள் எல்லாம் ஏன் புலிகளின் இந்து தீவிரவாதத்தை ஏற்க மறுக்கிறார்கள். ஒரு சிலர் தீவிரவாதம் செய்வதற்க்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் தீவிரவாதியாக காட்டாதீர்கள் அந்த அமைப்பை அல்லது அந்த அமைப்பில் உள்ளவர்களை பற்றி சொல்லுங்கள் என்றுதான் முஸ்லீம் அமைப்புகள் கேட்டுக்கொண்டன. ஆனால் அப்படி கேட்ட முஸலீம் அமைப்புகளை எல்லாம் மதவாத முஸ்லிம்  அமைப்புகள் என்று ராமசாமிக்கு ஜால்ரா தட்டும்  நாத்திக இந்து கூட்டம் மத சாயம் பூசியது. நாம் இவர்களை கேட்பது உலகில் உள்ள தீவிரவாதம் படுகொலை இவற்றை எல்லாம் சொல்லி அரசியல் பிழைப்பு நடத்தும் திராவிட தமிழ் தேசியா ஜால்ராக்களே  உங்கள் கண்ணுக்கு  புலிகள் தீவிரவாதம் ஏன் தீவிரவாதமாக தெரியவில்லை. 



ராஜபக்ஷேவை எதிர்க்கும்  ஒழுக்க சீலர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் நடுநிலையாளர்கள் ஜனநாயகவாதிகள் நேர்மையாளர்கள் நீதியாளர்கள் கடவுள் பக்தி கொண்டவர்கள் கடவுள் இல்லை என்று நம்பினாலும் பகுத்து அறிந்து நல்லது கேட்டது என்பதை தெளிவா சொல்றவங்க எல்லோருக்கும் நான் கேட்கும் கேள்வி. கடந்த முப்பது வருடங்களா  ஒரு நாட்டை எதிர்த்து ஆயுத போர். அந்த நாட்டில் இல்லாத பல போர் தந்திரங்கள் உக்திகள். பலம் வாய்ந்த விமானகள். கப்பல்கள். பீரங்கிகள். ஆயிரக்கணக்கான போர் வீரர்கள். இவர்களை வழி நடத்த அமைப்புகள் துறைகள் என்று ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கு சமமான அணைத்து சாரம்சங்கள் கொண்ட அரசு வன்னிக்காட்டில். முப்பது ஆண்டுகள் ஒரு நாட்டின் ராணுவத்தால் அடக்க முடியாத அளவுக்கு ஆளுமை. கடைசியில் உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து ஒடுக்க வேண்டிய நிலை. அப்படி உலக நாடுகள் எல்லாம் சேரவில்லை எனில் கடைசி காலத்தில் வெற்றியை எட்டும் நிலை என்று எல்லோராலும் பேசப்படும் அளவுக்கு பலம் வாய்ந்த ஒரு அரசியல் அமைப்பு. இந்த புகழ் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. நிச்சயம் இது சாதாரண விஷயம் இல்லை. சொல்லும்போதே பிரம்மிக்க வைக்கிறது. இது என்ன சினிமாவா? நாவலா? கதையா? இல்லை நிஜமா? ஆனால் பதில் கிடைக்காத ஒரு விஷயம். இவளவையும் செய்ய பொருளாதாரம் தேவை மெத்த படித்த அறிவாளிகள் தேவை. அது இவர்களுக்கு எங்கே இருந்து வந்தது. முப்பது ஆண்டுகள் இவ்வளவு பேருக்கு வெறும் சோறு போடணும்னா கூட முடியாது இவர்கள் சோறு துணி மணி ஆயுதம் என்று அனைத்தையும் சப்ளை பண்ணி இருக்கிறார்கள். முஸ்லீம் தீவிரவாதம் என்று உலகம் முழுக்க தீவிரவாதம் பேசப்படுகிறது. அங்க பாம் வச்சான் இங்க பாம் வச்சான்னு  மத்தவங்கள பாத்து பொங்கி எழும் ஹிந்துக்கள் பொங்கி எழும் தமிழர்கள் ராஜபக்ஷேவின் ராணுவம் மனித மாண்பே இல்லாமல் பொதுமக்களை கொன்று விட்டது எனவே ராஜபக்ஷேவை உலக நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் உலக நாடுகள் எல்லாம் அவரை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்கும் மனித மாண்பு மிக்கவர்களிடம் கேட்கிறேன். புலிகளுக்கு யார் பணம் கொடுத்தது? நூறு  கோடி இரு நூறு கூடி இல்லை ஆயிரம் ஆயிரம் கோடிகள். கொட்டி கொட்டி கொடுத்தது யார்? எப்படி இந்த பணம் இலங்கைக்குள் வந்தது? ஆயுதங்கள் எப்படி இலங்கைக்குள் வந்தது? தனி மனித ஒழுக்கம்! சமூக ஒழுக்கம்! பன்னாட்டு சட்டம்! பன்னாட்டு நீதி மன்றம்! என்று பேசும் ஜனநாயக வாதிகளை கேட்கிறோம். இவர்கள் எங்கு கொள்ளை அடித்தார்கள்? யார் கொள்ளை அடித்த பணத்தை இவர்கள் பயன் படுத்தினார்கள்? நூரு ரூபாய் திருடினாலே வாய் பிளக்கிறோம். ஆனால் இவ்வளவு பணம் இவர்களுக்கு எங்கே இருந்து வந்தது. இந்த மாதிரி கொள்ளையர்கள் கடத்தல்காரர்கள்தான் இன்று உலகத்தை நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எங்கியோ ஒரு மூலையில் சின்ன சின்ன தவறு செய்யும் ஒடுக்கப்பட்ட மக்களை எளிதில் பிடித்து தண்டிக்கிறோம் அவர்களின் இழி செயலை போஸ்டர் போட்டு விக்கிறோம். இந்த மாதிரி உலகமாகா கேடிகளை கடவுளாக்கி மேதகு உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் யாரோடும் ஒப்பிட்டு பேச முடியாத மாண்பாளர் என்று போற்றி பாடிக்கொண்டு இருக்கிறோம். இதுதான் இன்று இந்த சமூகதின் ஒழுக்க நிலை.