Saturday, June 1, 2013

நம்ம மக்களுக்கு  ஆயிரம் துன்பம் இருந்தாலும். அவர்கள் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லை. படிக்க படிக்க சிரிப்பு தாங்கள. அந்த செத்த மனுசன வச்சு இந்த டுமில் தேசியம் பண்ணும் காமெடி இருக்கே. அவர் வருவார். அவர் வருவார்ன்னு..  அயையோ இந்த கொசு தொல்லை தாங்கலடா சாமி. இன்னும் எவ்வளவு காலத்துக்கு மக்களை இப்படியே குண்டு சட்டியில குதிரை ஓட்ட வைக்க ஆசை. 

அண்ணல் அம்பேத்கர் மார்க்ஸ் கிட்டேயும் பிரஞ்சி புரட்சி மூலமும் அறிவு  பெற்றார் என்று சொல்வது மாகா சமுத்திரம் சேற்றிலும் சகதியிலும் இருந்து வரும் கழிவுகள் மூலம் தெளிவு பெற்றது என்று அர்த்தம். 

என்னுடைய அரசியல் ததுவமான சமத்துவம் சுதந்திரம் சகோதரத்துவம் என்பதை நான் பிரஞ்சி புரட்சியில் இருந்து கடன் வாங்கியதாக யாரும் நினைத்து விடக்கூடாது அவற்றை நான் எனது குருநாதர்  புத்தரிடம் இருந்தே பெற்றேன் என்கிறார். தான் மார்க்சிடம் இருந்து பிரஞ்ச் புரட்சிக்கரர்களிடம் இருந்து அவற்றை பெற்றேன் என்று எவராவது இப்படி கதை கட்டுவார்கள் என்று அவருக்கு தெரியும்.  மார்க்ஸ் அல்லது புத்தா என்று அவர் எழுதிய தலைப்பை மட்டும் பார்த்து விட்டு / படித்துவிட்டு அவர் மார்க்சிய பொதுவுடைமை தத்துவத்தை ஆதரித்தார் என்று சொல்லுவது அவரை முழுமையாக படிக்கவில்லை அல்லது படித்து புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்லலாம். அண்ணல் அம்பேத்கர் பொதுவுடைமை வாதி அல்ல. பொதுவுடைமை தத்துவத்தில் சமத்துவம் மட்டுமே பேசப்படுகிறது அங்கு சுதந்திரம் இல்லை என்கிறார். சமத்துவமும் சுதந்திரமும் பேசப்படும் புத்தரின் சகோதரத்துவ தத்துவமே என் அரசியல் தத்துவம் என்கிறார். 



மகாசமுத்திரத்தில்தான் கழிவுகள் கலக்கின்ற சுத்தப்படுத்தப்படுகின்றன. மகா சமுத்திரத்தை கழிவுகள் தூய்மை படுத்துவதில்லை. 


அண்ணலின் கருத்துக்கள் மர்க்சிடமும் பிரஞ்சி புரட்சிக்காரர்களிடமும் இருக்கிறது என்றால் அவற்றை அண்ணல் அவர்களிடம் இருந்து கடன் வாங்க வில்லை. மார்க்சும் பிரஞ்சி புரட்சி கார்களும் அந்த அறிவை புத்த ததுவதிடம் இருந்து பெற்றனர் என்பது உலக வரலாற்றை படித்தவர்களுக்கு தெரியும். ஐரோப்பிய புரட்சிக்கு ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கத்துக்கு மிக முக்கிய காரணம் கடல் வழி மார்க்கமும் ஐரோப்பியர்களுக்கு ஆசியாவுடன் கொண்ட தொடர்பும். நவீன காலத்தில் ஏற்ப்பட்ட இந்த தொடர்பால் புத்த இலக்கியங்கள் எல்லாம் ஆங்கில ஜெர்மனிய பிரஞ்சு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இப்படி புத்தனின் தத்துவமே மார்க்சுக்கும் பிரான்ச்சு புரட்சியாளர்களுக்கும் புதிய சிந்தனை உருவாக அடிப்படையாக இருந்தது. 


#அழகான தாமரை , தனது நறுமணத்தையும் , அழகையும் , சேற்றிலிருந்து தான் பெருகிறது ....#

அழகான தாமரை தனது அழகையும் நறுமணத்தையும் சேற்றில் இருந்து பெறுவது இல்லை. அது சேற்றில் முளைத்தலும் சேறு தன் மீது ஒட்டாமல் அழகையும் நறுமணத்தையும் கொண்டு உள்ள்ளது. 



அண்ணலுக்கு அறிவை பிரஞ்சு புரட்சியாளர்களும் மார்க்சும் கொடுத்தார்களாம். எப்படி இருக்கு பாருங்க. நம்ம தலை மீது உக்கார அவுங்களுக்கு அப்படி ஒரு ஆசை.  பிரஞ்சு புரட்சியாளர்களுக்கும் மார்க்சுக்கும் அறிவு எங்க இருந்து வந்தது. 


இப்படித்தான் சூத்திர கூட்டம் அண்ணல் ரமசாமியிடம் இருந்து கற்றார் ராமசாமி அண்ணலிடம் இருந்து கற்றார் என்று சொல்லிக்கொண்டு திரிகிறது. ராமசாமி அண்ணலிடம் கற்றார் பண்டிதரிடம் கற்றார் சாக்கிய பவுத்த சங்கத்திடம்  இருந்து கற்றார். மொத்தத்தில் நிறைய புத்ததத்துவத்தை திருடி நாத்தீக வடிவில் திராவிடம் பேசினார். ஆனால் அண்ணல் எப்பது ராமசாமியிடம் கற்றார். அப்படி ராமசாமி என்ன புதுசா கரடி விட்டார் கற்க. அப்படி என்னதான் புதிய சிந்தனை புதிய தத்துவம் ராமசாமியிடம் இருந்தது கற்க. இந்த மூட்டை பூச்சிகளின் அலப்பரை தாங்கலடா சாமி. 

#சாதீயாலும் மதங்களாலும் பிரிந்துள்ள தமிழன் பிரபாகரன் எனும்போது ஒன்றாக ஆகிறானே அந்த நன்மை போதாதா?# 

இந்த கருமத்துக்குத்தான் நான் தமிழனே இல்லை என்கிறேன். அயோக்கியன் மொல்லை மாறி கேப்மாரி கடத்தல் பேர்வழி தீவிரவாதி எல்லாம் தமிழ் இனத்தின் தலைவன் என்றால்.  அப்புறம் எப்படி பெருமையா நாம தமிழன் என்று சொல்லிக்கொண்டு வெளியில நடமாடுவது. 


முன்ன எல்லாம் தமிழன் அடையாளம் வள்ளுவர் என்று சொல்லி சேரியை ஏமாற்றிக்கொண்டு இருந்தனர். இப்ப தமிழன் அடையாளம் பிரபாகரனாம். ரொம்ப நல்லது சாக்கிய வள்ளுவ பறையனாரை எங்க கிட்ட திருப்பி கொடுத்ததுக்கு. வள்ளுவம் சொல்லுவது எதை நீங்க கேட்டீங்க. உங்க கொள்கை கொலை தற்கொலை  பாலியல் பலாத்காரம் கஞ்சா அபின் தங்க நகை கடத்தல் வாள்  வேல் கம்பு துப்பாக்கி தோட்டா இவைகள் தானே. இதற்க்கு அடையாளம் எமது வள்ளுவர் இல்லை உமது பிரபாகரனே. ராஜ ராஜ சோழன் எனும் கப்பல் கொளையனுக்கு பின்னால் உமது இனத்தில் தோன்றிய கொள்ளையன் பிரபாகரனே. வாழ்க உங்கள் கொள்ளை கூட்ட புலி தேசியம். வள்ளுவனை மீட்டெடுத்து வள்ளுவத்தால் வெல்லும் எமது சாக்கிய சேனை. 

#அண்ணன் திருமாவும் அப்படித்தான் (சேறு படாத தாமரை போல்)#

அண்ணன் திருமாவின் உடல் மனம் முழுக்க திராவிட தமிழ் தேசிய சேறு அந்த சேற்றை புளிதேசியம் பேசி சேரியில் கொண்டு வந்து கொட்டியுள்ளார். அதை சுத்தப்படுத்த எத்தனை ஜெநேரேஷேன் ஆகுமோ. 


தேவா இது திராவிட எனும் அடையாளத்துக்கும் பொருந்தும். 





மனிதனாக வேண்டுமா மதத்தை விட்டு விட்டு சாராய கடைக்கு போ என்பது ராமசாமியிசம். மனிதனாக வேண்டுமா நல்ல மதத்தை பின்பற்று என்பது அண்ணல் அம்பேத்கர் தத்துவம். 





அன்பையும் கருணையையும் போதிக்காத எவையும் மதம் இல்லை. அன்பையும் கருணையையும் போதிக்க மதம் தேவை. புத்தரின் மதம் அன்பையும் கருணையையும் போதிகிறது என்கிறார் அண்ணல். 

அவன் சண்டே காலைல சர்ச்சுக்கு போனா உனக்கு என்ன? உன்ன சாராய கடையில் வியாபாரம் சரியா போகலியா? 


மதம் மனிதனுக்கு அவசியம் முக்கியமா ஏழை மனிதனுக்கு அவசியம் என்கிறார் அண்ணல். ஏசு பிரான் தனது மதத்தை போதித்த போது அவரிடம் சென்றவர்கள் எல்லாம் செல்வந்தர்கள் கிடையாது ஏழை எளிய மக்களே என்கிறார் அண்ணல். பணம் பதவி ஆடம்பரம் கொடுக்க முடியாத ஒன்றை மதம் கொடுக்கிறது என்கிறார். அதை எதுக்குடா கெடுத்து அவனை மீண்டும் சாராய கடைக்கு அனுப்ப பார்க்கிறீர்கள். 





புத்த காப்பியமான மணிமேகலையில் பகுத்தறிவு அற்ற கருத்துக்கள் உள்ளதாம் நாத்தீக ராமசாமி சொல்றார். என்னடா பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்து அது? கத்தி எடுத்து கொலை செய்யுன்னு சொல்லுதா? பாலியல் பலாத்காரம் பண்ண சொல்லுதா? திருட சொல்லுதா? மது அருந்த சொல்லுதா? பொய் கோபம் வெறுப்பு பழி வாங்கும் உணர்வு வேற்றுமை உணர்வு எதையாவது சொல்லுதான்னு கேட்டா இல்லையாம். அது இவர்களால் நம்ப முடியாத விஷயங்களை எல்லாம் பேசுதாம். கடவுள் நம்பிக்கை மறு பிறப்பு பற்றி எல்லாம் பேசுதாம். அதனால் அது ஆரிய நூலாம் பார்ப்பனிய நூலாம். இந்த மடையர்கள் பகுத்தறிவுவாதிகளாம். 

No comments:

Post a Comment