கொல்லாமையும் ஊன் உண்ணாமையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ளது. பவுத்தர்கள் ஊன் உண்ணுவதை நியாய படுத்த முடியாது. பஞ்சசிலம் பரவ பரவ அது விலகும். அன்பும் கருணையும் பெருக பெருக மக்கள் யோசிக்க ஆரம்பிப்பார்கள். மூச்சி விடும்போது கூட நிறையா நுன்னுயிரிகள் இறக்கின்றன. அது கூட யோசிக்க வேண்டிய விஷயம்தான். மெல்லமா போவோம். புத்த தம்மத்தை பரப்பும்போது நிதானம் தேவை. கொல்லாமை புலால் உண்ணாமை என்று மக்கள் மீது திணிப்பது புத்தம் அல்ல மக்களின் அறியாமையை அகற்றுவது. அறியாமை அகல அகல கருணை பெருகும். எல்லா உயிர்கள் மீதும் அன்பு கருணை (மெத்தா) பெருகும். மக்கள் தாங்களாகவே கொல்லாமை கடைபிடிப்பதுட கொல்லுதற்கு காரணமான புலால் உண்ணுதலை தவிர்ப்பார்கள். முதலில் புத்தத்தை பவுத்தர்களிடம் கொண்டு செல்லும் பணி ஒவ்வொரு பவுத்தருக்கும் உண்டு.
No comments:
Post a Comment