Tuesday, June 4, 2013

எழுச்சி தமிழர் என்று போட்டுக்கொண்டு தமிழ் சமூகம் தமிழ் உறவுகள் தமிழ் தேசிய இனம்னு பேசிட்டு இருப்பவர் மனித நேயம் மிக்கவராம். அவர் பிரிவினை பற்றி பேசுவது இல்லையாம். எல்லா மக்களையும் ஒண்ணாவே பாக்குறாராம். பறையன்னு நாம பேரு வச்சிருப்பது பறையர் சங்கம் கட்டுவது பறையர் கூட்டமைப்பு ஏற்ப்படுத்துவது தப்பாம். அது மனிதர்களை வேற்றுமை படுத்துகிறதாம். நாம் பறையர் ஜாதி வெறியர்கலாம் ஜாதி உணர்வாலர்கலாம். என்ன லஜிக்குடா உங்க தமிழ் தேசிய லாஜிக்கு.  பறையன்னு சொல்லி நாங்க எங்க மக்களோடு  கூடினா ஜாதி வாதிகள். தமிழன்னு சொல்லி நீங்க ஆண்டைகளுடன் கூடி கூவி கூவி  கும்மி அடிச்சா பொது நலவாதிகளா? 


#நான் ஜாதி, இனம், மொழி, மதம் அனைத்தையும் கடந்து மனிதர்களாக ஒன்று சேர்வதையே விரும்புகிறேன்.. என் வீடு, என் செல்வம், என் மனைவி,என் குடும்பம், என் ஜாதி, என் இனம், என் மொழி, என் மதம் என்று நினைப்பவனுக்கு நல்ல கதியே இல்லை..அடுத்த பிறவியில் இது என் எலும்பு துண்டு என்று குறைத்து கொண்டு சண்டை போடும் நாயாக பிறக்க நேரிடும்..#

அப்படின்னா மாசம் மாசம் வாங்குற சம்பளத்த பேங்கில் போட மாட்டீங்க.  பெத்த புள்ளைக்கு சோறு போட மாட்டீங்க பிச்ச காரனுக்கு கொடுத்துட்டு மாசம் புல்லா பிச்சை எடுத்து சாப்பிடுவீங்க. நீங்க உண்மையிலேயே மிகப்பெரிய மகான். முற்றும் துறந்த முனிவர்தான். 

No comments:

Post a Comment