இவுங்க கருத்துரிமை பேசிட்டிருக்கும் அந்த புத்தகத்துல
அண்ணல் அம்பேட்கர் பூலேவை சூதிரர்களின் ஒப்பற்ற தலைவர் என்று எழுதியுள்ளார். பார்பனர்களை பார்ப்பனர் என்று சொல்லுபோது சூதிரர்களை சூத்திரர் என்றுதானே சொல்ல முடியும்.
இந்தியன் (தி பிப்பில் ஆப் இந்தியா) என்பது பிறப்பு கிடையாது. யார் வேண்டும் என்றாலும் இந்திய பிரஜை ஆகி இந்தியன் ஆகலாம். அது ஒரு நில பரப்பில் வாழும் அரசியல் அடையாளம். அது மொழி மத சார்பற்ற அடையாளம். பாகிஸ்தானி, அமெரிக்கன் என்பது போன்ற பொது அடையாளம். இந்திர்களை ஹிந்துஸ்தானி என்று சொல்லும்போது அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என்று சொல்லுவது அதை இந்தியா முழுக்க உள்ள இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் சாக்கியர்களும் எதிர்க்கிறார்கள். அது போலவே உ பி யை ஹிந்திஸ்தானி என்று சொன்னால் உருது பேசும் இஸ்லாமியர்கள் எதிக்கிறார்கள். ஹிந்திக்கு சமமா உருது வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். ஓரு நில பரப்பு என்பது ஒரு மொழி பேசும் ஓரு மதத்தை பின்பற்றுபவர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை. இன்னைக்கு தமிழக முதல்வரா இருக்கும் ஜெயலலிதா எப்போது நான் தமிழர்களின் முதல்வர் என்று தன்னை சொல்லிக்கொள்வது இல்லை தமிழ் நாட்டு மக்களின் முதல்வர் என்றே சொல்லிக்கொள்கிறார். என் அடையாளம் இந்துவோ, ஹிந்துஸ்தானியோ, திராவிடனோ, தமிழனோ இல்லை. நான் பறையன் தலித் பவுத்தன் பாலியன் சாக்கியன். ஆனால் நான் "தமிழ்" நாடு என்று சொல்லப்படும் இந்த மாநிலத்தின் பிரஜை. திராவிடன் தமிழன் இந்து என்று சொல்லிக்கொள்ளும் பெரும்பான்மை சமூகத்துக்கு உள்ள அனைத்து உரிமைகளும் எனக்கும் உண்டு. என் உரிமைகளை பாது காக்க என் மொழியை என் மதத்தை என் அடியாளத்தை பாது காக்கும் உரிமை எனக்கு உண்டு. என்னை போலவே இங்கு மத மொழி சிருபான்மையினராக உள்ள உருது பேசும் இஸ்லாமியர், சீக்கியர் (பஞ்சாபி), ஜைனர், தெலுகு பேசும் கிறிஸ்துவர்கள் மொழி சிறுபான்மையினராக உள்ள மலையாளி, குஜராத்தி எல்லோருக்கும் இந்த மண்ணில் சம உரிமை உண்டு. அவர்கள் மீது தமிழ் மொழியை இந்து மதத்தை திணிப்பது என்பது ஆதிக்க அரசியல். அதை எதிர்ப்பதே தலித் அரசியல்.
அம்பேத்கரியம் பத்தி ஒரு சூத்திர ஜால்ரா பகுஜன் சாமி பாடம் எடுக்கிறார். இந்த பதிவு அவரை போன்ற சூத்திர ஜால்ராக்களுக்கு:
"இன்று இந்துக்களின் (பார்பனர் முதல் சூத்திரர் வரை) அரசியல் வாழ்க்கைத் தீண்டாதோரின் சமூக பொருளாதார நலன்களுக்கு நேரெதிரான சமூக பொருளாதார நலன்களின் அடிப்படையில் அமைந்து உள்ளது. எனவே இத்தகைய நிலைமையில் தீண்டத்தகாத மக்களின் அரசியல் அதிகாரம் பரந்ததாக விரிந்ததாக இருந்தாலும் அவர்கள் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு இந்துக்களை சார்ந்து இருக்க வேண்டி இருந்தால் அவர்கள் ஆதரவை நம்பியிருக்க வேண்டியிருந்தால் அந்த அதிகாரத்தால் எந்த பயனும் இருக்காது என்பதை தீண்டத்தகாத மக்கள் அவசியம் நினைவில் கொள்ளவேண்டும்." அண்ணல் அம்பேத்கர்
சூதிரர்களை சூத்திரர் என்றுதானே சொல்ல முடியும்.
அவுங்களை எப்படியாவது ஆண்ட பரம்பரையா ஆக்கிடனும்னு சூத்திர ஜால்ராக்கள் கங்கணம் கட்டிகிட்டு திரியுதுங்க. அப்புறம் இவுங்க சூத்திர போஸ்டிங்குக்கு போயிடுவாங்க இல்லையா?
அண்ணலை ஜாதி ஒழிப்பு இந்துமத சீர்திருத்தவாதின்னு நினச்சீங்களா?
எவனோ நாலு பள்ளன் ஆண்டான் என்றால் ஒட்டு மொத்த பள்ளரும் ஆண்ட பரம்பரையா? எவனோ நாலு பறையன் பறை அடித்தான் என்றால் ஒட்டு மொத்த பறையரும் பறை அடிக்கிற பரம்பரையா என்னய்யா பாண்டிய வரலாறு கருத்துரிமை பேசிட்டு இருக்கீங்க.
#“பறையர் வரம்பு மீறிப் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள்..” (பக்.219)#
இது கருத்து சுதந்திரமாம் அந்த புக்கை தடை செய்ய கூடாதாம். மிருகபுத்திரன் சொல்லுது.
No comments:
Post a Comment