Monday, June 10, 2013

#Khathiravan Mayavan மகிழ்னன் நீங்கள் உண்மையிலேயே சமுக மாற்றத்தை விரும்புவராக இருந்தால் ..ஆதிக்கம் செய்பவர்களிடமிருந்து தற்காத்து கொள்ள தலித் மக்களுக்கு வன்கொடுமை சட்டம் இருபது போல் .. அருந்ததியர் மக்கள் மிது ஆதிக்கம் செலுத்தும் பறையர்களிடம் இருந்து தற்காத்து கொள்ள அதே போல் ஒரு வன்கொடுமை சட்டம் வேண்டும் என்று எந்த தலித் அமைப்புகள் அல்லது தனி நபர்கள் சொல்லி இருக்கிறார்கள் ..இது சுய ஜாதி அரசியல்.#

இதுல என்ன சுய ஜாதி அரசியல். எங்களை (அருந்ததியர் உட்பட்ட தலித் மக்களை) உங்கள் சூத்திர கூட்டத்திடம் இருந்து  காத்துக்கொள்ள வணகொடுமை தடுப்பு சட்டம் பெற்றுள்ளோம். வன்கொடுமை தடுப்பு சட்டம் என்பது பறையர்களுக்கனது மட்டும் அல்ல அது சக்கிலிய மக்களையும் சூத்திர கூட்டத்திடம் இருந்து காக்கிறது. நீங்கள் சொல்வது போல சக்கிலியர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களை தொடர்ந்து பறையர்கள் வன்கொடுமை செய்கிரறார்கள் எனபது உண்மை எனில் அருந்ததியர்  வணகொடுமை தடுப்பு சட்டம் கேட்க வேண்டியது எங்களிடம் இல்லை அரசிடம். தமிழ் நாட்டில் நடக்கும் வண்கொடுமைகளை ஆய்வு செய்த அறிக்கைகள் பல உள்ளன அதில் பெரும்பாலான அறிக்கைகள் வன்கொடுமைகளால் பறையர் இனமக்களே அதிகம் பாதிக்கின்றனர் என்று சொல்கிறது. அதுக்காக அருந்தியர் பாதுகாப்பு அவசியம் இல்லை என்று சொல்லவில்லை பறையர்களை பாதுகாக்கவே வழியில்லாம அவதிப்படும் எங்களை அருந்ததியரை பாதுக்கக்க வாருங்கள் என்றால் எப்படி. உங்களை போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் அந்த முயற்சியை செய்து அருந்ததியரை காத்தால் நன்றாக இருக்கும். அதை விட்டு விட்டு சூத்திர ஜாதி வெறியாட்டத்தை மறைக்க அருந்ததிய மக்களை பகடை காயாக பயன்படுத்தி  உங்கள் திராவிட  சூத்திர அரசியல் செய்ய வேண்டாம். 


நம் சமூகத்தில் பிறந்த ஒட்டு பொறுக்கிகள். தமிழ் தேசியம் எனும் தமிழ் சமூக ஒற்றுமை எனும் பெயரில் நமது அரசியல் உரிமைகளை எல்லாம் ஏலம் போட்டு விற்று விடுவார்கள் போல. அட வெண்ணைகளா நாங்கள் தமிழ் (பேசும் இந்து) சமூகத்தின் அங்கம் அல்ல இந்திய  அரசியலில் நாங்கள்  தனி சமூகம் என்று  எங்கள் பாட்டனும் முப்பாட்டனும் ஆபிரிக்கா அமெரிக்கா இங்கிலாந்து  வட்டமேஜை மாநாடெல்லாம் போய் காந்திக்கு பூந்தி கொடுத்து ராமசாமிக்கு நாமம் போட்டு வாங்கி கொடுத்த உரிமையடா. அதையெல்லாம் நாங்க அவ்வளவு எளிதா உங்க தமிழ் (பேசும் இந்து) சமூக ஒற்றுமைக்காக தாரை வாக்க முடியாது. நாங்க தமிழர் இல்லை தமிழ் சமூகம் இல்லை  உங்களில் இருந்து வேறுபட்டவர்கள்  என்பதற்குத்தான் இந்த அரசியல் உரிமைகள். தமிழ் தேசியத்துக்கும் திராவிடத்துக்கும் ஜால்ரா அடித்துக்கொண்டு இருக்கும் கூட்டத்துக்கு இதன் அருமையும் தெரியாது இந்த உரிமைகளை பெற என் சமூகம் பட்ட கஷ்டங்களும் தெரியாது. கடற்கரைக்கு காத்து வாங்க போயி அங்கு யாரோ சொல்லி தெரிஞ்சிக்கிட்ட ஈழ பிரச்சனை இல்லை எமது பிரச்சனை நான் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சனை என் சமூகத்தை வாழ வைக்க முடியாவிட்டாலும்  பரவயில்லை உங்கள் தமிழ் தேசிய அரசியல் வியாபரத்துக்காக எமது சமூகத்தை சாகடிக்கதீர்கள். 

No comments:

Post a Comment