Wednesday, June 5, 2013

#தோழர் இன்று, ஆதிக்கசாதி வெறியர்கள் எல்லாம் அண்ணன் திருமா, அவர்களை பார்த்து, பயப்பட காரணம், என்ன சிந்தியுங்கள். இன்று தலித் மக்கள் பாதிக்கபட்டால் ஜனநாயக சக்திகள் அதிகப்படியாக உருவாக காரணம் என்ன?#

அண்ணன் திருமாவை மட்டும் அல்ல அனைத்து தலித்துக்களை பார்த்து ஆதிக்க ஜாதிகள் பயப்பட ஆரம்பித்தது உள்ளனர். தமிழ் நாட்டு சூத்திரர்களை விட வட நாட்டு பார்ப்பன பனியாக்கள் அதிகம் பயப்படுகிறார்க்கள். அதுக்கு காரணம் உலகம் முழுக்க தலித் அலை தலித் எழுச்சி அந்த தலித் எழுச்சியை பயன்படுத்தித்தான் அண்ணன்  எழுச்சி தமிழராக தமிழ் தேசிய விளையாட்டு விளையாடிக்கொண்டு  இருக்கிறார். நாங்க பாராளுமன்றத்தில் தனியார்  துறையில் தலித் உரிமை வேண்டும் என்று போராடுவோம். அண்ணன் அங்க வந்து ஈழ உரிமைக்கு காந்தி சிலைக்கு  முன்னால்  அட்டை பிடிப்பார். நாங்க ஜெனீவா போயி தலித் மனித உரிமை பேசுவோம். அங்க அவரு வந்து ஜாதி இந்துக்களுக்கு கொட்டு அடிப்பார். நாங்க ஈழத்திலும் தலித்துக்கள் உள்ளனர் அவர்கள் உரிமையும் மறுக்கபடுகிறது என்று பேசுவோம், அங்க வந்து புலிகள் ஈழத்தில் ஜாதியை ஒழித்து விட்டார்கள் என்பார்.  தமிழ் நாட்ல மட்டும் அல்ல உலகம் முழுக்க இன்னைக்கு தலித்துக்கள் தலை நிமிர்ந்து   இருக்க கரணம்  தலித்  அரசியல் தலித் எழுச்சி. அந்த எழுச்சியில் குளிர் காய்ந்து கொண்டு தமிழ் சொந்தங்களே தமிழ் தேசி இன உணர்வு தமிழ் இன ஒருமை விளக்கெண்ணை வெங்காயம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். எந்த தமிழ் தேசியத்தாலும் புலி தேசியத்தாலும் அண்ணலின் பிள்ளைகளை பின்னுக்கு தள்ள முடியாது. தலித் எழுச்சியை விலைக்கு வாங்க முடியாது. தமிழ் தேசிய ஏஜெண்டுகள் சிக்கிரம் ரெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கும். 2009 இல் நடந்த சாவையே காட்டி 2019 வரை டுமில் தேசியம் பேச முடியாது. அரசியல் வியுகத்தை மாற்றி தலித் அரசியல் நடத்தினால் அவர் தலித் அரசியல் வரலாற்றில் இருப்பார் இல்லை எனில் சீக்கிரம் மூட்டை கட்ட வேண்டி இருக்கும். 

No comments:

Post a Comment