Thursday, June 6, 2013

ஜாதி ஒழிப்பு கலப்பு திருமணம் என்று பேசிக்கொண்டு  அலைபவர்கள் திராவிட கூடமும் தமிழ் தேசிய கூட்டமும்தான் இதில் பாதிக்கப்படுவது தலித்  மக்களும் தலித் அமைப்புக்களும் தான். ஜாதி ஒழிப்பு கலப்பு திருமணம் என்று அரசியல் பண்ணாம நட்டு நிலையாளர்கள் மூடிக்குனு இருந்தா தலித் மக்கள் தலித்  அமைப்புக்கள் தங்கள் சமூக நலனுக்கு என்ன அவசியமோ அதை செய்துகிட்டு இருப்போம். வி சி க தலித் அமைப்பா? தமிழ் அமைப்பா? திராவிட அமைப்பான்னு அவர்களே குழப்பத்தில் உள்ளனர். அதனால அவர்கள் செய்யும் ஜாதி ஒழிப்பு திருமண அரசியலுக்கு தலித் இயக்கங்களை வம்புக்கு இழுக்க வேண்டாம். சேரியை வளப்படுத்த ஆயிரம் வேலைகள்  எங்களுக்கு இருக்கு. ஜாதிய ஒழிச்சி தமிழ் சமூகத்தை கட்டி காக்கும் பணியை எல்லாம் எங்களால் செய்ய முடியாது. 

#நம்ம பொசகெட்ட பயலுக திருந்தமாட்டானுங்க....#

நல்லா நாக்க புடிங்கிட்டு சாகர மாதிரி திட்ரீங்கலேமா. உங்க கிட்டதான் கத்துக்கணும். பேஷ் பேஷ்!! பொசகெட்ட பசங்க. 

புரியாத மாதிரி எழுதுனா அதுக்கு பேரு செய்யுள் கவிதை உரைநடை காப்பியம். புரியற மாதிரி பேசுனா எழுதுனா சொற்பிழை எழுத்து பிழை சந்தபிழை பொருள் பிழை என்று நக்கல் அடிக்குறது இவர்களுக்கு  பெயர்தான் தமிழ் எழத்தாளர்கள் தமிழ் புலவர்கள் தமிழ் கவிஞர்கள். நல்ல வேலை நான் அந்த கூட்டத்துக்கு எல்லாம் போவது இல்லை. நான் என் மக்களுக்கு புரியற பாஷையில் எழுதுர அளவுக்கு நாலு வார்த்தைய கத்துக்கிட்டு கத்திட்டு இருக்கேன். உங்க தமிழ் இலக்கிய திறமைகளை என்கிட்டே எதுக்கு காட்டுறீங்க.  

No comments:

Post a Comment