Thursday, June 20, 2013

#நான் மாயவதி அவர்களை குறைத்து நான் பேச வில்லை, ஆட்சி அதிகாரத்தில் உள்ள அம்மையாரால் கூட இரட்டை வாக்குரிமை பற்றி ஏதும் செய்ய முடியவில்லை என்பது தான் என் வருத்தம்.#

மாயாவதி அம்மையார் இரட்டை வாக்கு வாங்க வில்லை. ஆனால் அவர்கள் யு பி யில் நடத்தி காட்டிய சாதனைகளை லிஸ்ட் போட்டு கான்பக்கிட்டுமா? கூடிய விரைவில் இரட்டை வாக்குரிமையும் வாங்கி தருவாங்க. வாங்கி அனுபவச்சிக்கிட்டே டுமில் தேசியம் திராவிஷ நாடு எல்லாம் பேசுங்க. 

#திருமாவளவன் சாதி ஹிந்துக்களுக்கு ஜால்ரா என்று சொல்லுகின்றார்கள். அம்மா மாயாவதி பாரதிய ஜனதவோடு கூட்டணி வைத்தது இல்லையா ??#

மாயாவதி அம்மையார் ப ஜ க வுடன் கூட்டணி வைத்தார். ஆமாம் வைத்தார் அதில் என்னப்பா தப்பு. சூத்திர கூட்டத்துக்கு ஜால்ரா அடிக்கலைன்னு வருத்தமா? எங்களுக்கு காங்கிரஸ், திராவிட கட்சிகள், ப ஜ க, கம்யுனிஸ்ட் எனும் எல்லா இந்து திருட்டு கட்சிகளும் ஓன்னுதான்.

#அதே போல இட ஒதுக்கீடு தொடர்பாக நான் எதையும் விமர்சிக்கவில்லை ( உயர் சாதி பிராமணர்களுக்கு ) கொடுத்ததை பற்றி கொஞ்சம் நீங்க சொல்லுங்க ?? நான் தெளிவு பெற்று கொள்கின்றேன்.#

பார்ப்பன பணியாக்களுக்கும் இட ஒதிக்கீடு. அதில் என்ன தப்பு. மொத்தமா பார்ப்பண பணியா  கூட்டத்தில் உள்ள பணம் படைத்தவர்கள் மட்டுமே அனுபவிக்கும் பகுதியில் இருந்து ஒரு பங்கை பிரித்து அவங்க சமூகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கொடுப்பது தவறா? அவர் என்ன நமக்கு கொடுத்த பங்கையா பிச்சி அவுங்களுக்கு கொடுத்தார். சாக்கியர்களுக்கு எப்போதுமே கருணை அதிகம் என்று காட்டியவர் மாயாவதி அம்மையார். எதிரிகளிடத்திலும் அன்பு காட்டு எனும் அண்ணலின் வழி நடப்பவர். 

தம்பி நோ கம்பாரிசன் அம்மா சாதித்ததில் ஒரு இம்மி கூட அண்ணனால் சாதிக்க முடியாது. சாதிக்கனும்னா அவர் முதலில் அவருக்கு உள்ளே  இருக்கும் தலித் சக்தியை அவர் உணரனும். ஜாதி இந்துக்களுக்கு ஜால்ரா அடிப்பதை நிறுத்தனும். இவர் யாரு எங்களுக்கு பிரபாகரனை தமிழ் தேசியத்தை காட்ட அதுக்குத்தான் அண்ணன் சீமான் இருக்கிறாரே. அண்ணன் சீமானும் பாத்தாலே தீட்டு எனும் ஒடுக்கப்ட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்தான் அவர் வழியில் நாங்கள் தமிழ் தேசியம் படைங்க அவர் வழியில் பிரபாகரன் எனும் கள்ளக்கடத்தல் காரனை மேதகு தமிழ் தேசிய தலைவர் ஆக்கி தனி நாடு வாங்கி கொள்ளை கூட்டத்திடம் கொடுங்க. அண்ணனை உருப்புடர வழியை பாக்க சொல்லுங்க. நாடார்களுக்கு பிரபாகரன் தேவைப்படலாம் தமிழ் தேசியம் தேவைப்படலாம். காமராஜர்  மூலம் நிறையை சம்பாதித்து வைத்து இருக்கிறாக்கள். இன்னைக்கு நாடர்கள் தமிழ் நாட்டின் பனியாக்கள். பறையர்களுக்கு பிரபாகரன் தமிழ் தேசியம் தேவை இல்லை. பறையர்கள் அனாதைகள் அல்ல அவர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்களுக்கு கொள்ளை கூட்ட தலைவன் தேவை இல்லை. எங்களுக்கு இல்லாத தலைவர்களா? நினைக்க நினைக்க வயிறு பத்திக்கிட்டு எரிகிறது. அண்ணலுக்கு சமமா அயோக்கியன், இந்த பாவத்துக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அண்ணன் படுவார் வேதனை. 


#இரட்டை வாக்குரிமை , அம்மா மாயாவதி வாய் திறந்து பேசியது கூட கிடையாது.#

அட அட அட. என்னா வரலாறு? அம்மா பேசியது இல்லையா. அண்ணனை போல தி மு கா வுக்கு வாள்  பிடித்து விட்டு. ஈழத்துக்கு எழவு எடுத்து விட்டு தலித் அரசியலுக்கு அம்மா வரல. அம்மாவை மாண்வர் கான்ஷிராம் முதல் முதலில் சந்தித்த போது அம்மா மேடையில் பேசிக்கொண்டு இருந்த டபிக்கே இரட்டை வாக்கு உரிமைதான். என்னத்த சொல்ல. 

தமிழகத்தில் பி எஸ் பி இப்பத்தான் வருகிறது. வந்த பின்ன பாருங்க. 


# அம்மா இரட்டை வாக்கு உரிமைக்காக நடத்திய போராட்டம் ஆட்சியில் இருந்த போது ??#

அது சட்டசபையில் முடியாது. பிரதம் ஆன பிறகு பாராளு மன்றத்தில் செய்து காட்டுவாங்க. 


25 வருசமா இருக்கு ஆனா இல்லை. இப்பத்தான் உண்மையா வந்துகிட்டு இருக்கு. அண்ணனுக்கு ஆட்டம் காண ஆரம்பித்து உள்ளது. சேரிகளில் உள்ள புலி கோடி இரங்கி யானை கோடி ஏறிக்கொண்டு இருக்கிறது. 


# இத்தனை வருடம் திருமாவால் ஆட்சி பிடிக்க முடிந்ததா#

ஆட்சிய பிடிப்பது இருக்கட்டும். முதல சுயமா கட்சிய நடத்தட்டும். 


#தமிழ்நாட்டில் திருமா பிடிக்கவில்லை ஆட்சி சரி ! மற்ற மாநிலங்களில் ஏன் உ.பி . தவிர்த்து வேறு எந்த தலித் கட்சியும் ஆட்சி பிடிக்க முடியவில்லை !!#

தமிழ் நாட்டு தலித் இயக்கம் என்பது எல்லா மாநிலத்துக்கும் முதன்மையானது. யு பி யில ஆட்சிய பிடிக்கிறதுக்கு முன்ன நாம ஆட்சிய பிடிச்சி இருக்கணும். ஆனா நாமத்தான் திராவிடமும் ஈழ இழவும் பேசிட்டு இருக்கோமே. 

அதையெலாம் தாண்டி இப்ப சர்வஜன அரசியல் பேசிட்டு இருக்கோம். என்ன பேசினாலும் அடிப்படை அண்ணல் அம்பேத்கர்தான். அதை அம்மையார் எங்குமே எப்போதுமே விட்டது இல்லை. அண்ணலுக்கு இணையாக அங்கு யாரும் இல்லை. 

நிறைய தலித்துக்கள் தலித்துக்களை கடந்து காந்தி நேரு அண்ணா எம்ஜி ஆர் என்று சித்தித்து ஜால்ரா அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையான தலித் உண்மையான தலித் இயக்கம் உண்மையான் தலித் கட்சி தலித்துக்களை மையமாக வைத்து எல்லா பிரச்சனைகளையும் அணுகனும். 

ஈழம் பேச வேண்டாம் என்று சொல்லவில்லை ஈழத்தில் உள்ள தலித் அரசியலை மையப்படுத்தி ஈழம் பேசுவதே தலித் அரசியல்.

ஹி ஹி ....படிக்காம போய் ஜாதி தமிழ் பண்ணையார் வீட்டில் பறை அடிக்க சொல்றீங்களா?

#எழுதி வைத்து கொள்ளுங்கள் திருமாவளவன் காலத்தில் அவர் தலைமை ஏற்று அரசியல் அதிகாரம் வெல்ல முடியாமல் போனால் 
வேறு யார் வந்தாலும் தமிழகத்தில் ஒரு கல்லையும் நகர்த்த முடியாது.#

எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழ் நாட்டில் திருமா இல்லாத வேறு ஒரு தலித் தலைவர் முதலவர் ஆவார். அது ஒரு தலித்  பெண்ணாகவும்  இருக்கலாம். 

#உங்களை தனியா இயக்கம் ஆரம்பிச்சி ...திரும்வை விட நல்லது செய்ய சொல்றேன் .முடியுமா ??#

எதுக்கு தனியா ஆரம்பிக்கணும். அதான் யானை வந்து கொண்டு இருக்குதே. 

#தமிழ் நாட்டில் திருமா இல்லாத வேறு ஒரு தலித் தலைவர் முதலவர் ஆவார். அது ஒரு தலித் பெண்ணாகவும் இருக்கலாம்.// வாழ்த்துக்கள் ! அது பெணணாக இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி ஆனால் , சிறுத்தைகளை எதிரியாக்கி , சிறுத்தைகளை இழிவு படுத்தி அதை செய்ய முடியாது என்பது தான் உண்மை.#

தமிழ் தேசியத்தை திராவிடத்தை அதுக்கு  ஜால்ரா அடிக்கும் சிறுத்தைகளை முறியடிக்காமல் தமிழ் நாட்டில் தலித் மக்கள் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியாது. 

திட்ட வேண்டாம். என்ன புளுகுன்னு சொல்லிட்டு போங்க. உண்மைய நாங்களும் தெரிஞ்சிக்கிறோம். 

#தமிழ் தேசியத்தை திராவிடத்தை அதுக்கு ஜால்ரா அடிக்கும் சிறுத்தைகளை முறியடிக்காமல் தமிழ் நாட்டில் தலித் மக்கள் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியாது. //  ஹ்ம்ம்ம்ம் ...... முயற்சி செய்யுங்க என் வாழ்த்துக்கள் !!#

அந்த முயற்ச்சிதான் நடந்துட்டு இருக்கு. நன்றி. கூடிய விரைவில் நீங்க கூட பி எஸ் பி யில் சேர வாய்ப்புக்கள் உள்ளது. 



#திருமா மீது எனக்கு மேலும் 100000000000000000 % பற்று கொள்வதற்கு இது போன்ற விவதாங்கள் உதவுகின்றது ஒரு தனி மனிதன் - பொறுப்பற்ற சமுகம் - விமர்சனைகள்.........#

பற்றுக பற்றற்றான்  தாள். திருமா மீது பற்று அதிகமான சமூகம் உருப்படாது. பற்ற்ற நிலையில் எது நல்லது எது கேட்டது என்று சிந்தித்து மாறும் நாள் வரும். நான் சொல்லுறதை எழுதி வச்சுக்குங்க நீங்க ஒரு நாளைக்கு  பி எஸ் பி க்கு போவீங்க. உங்க அரசியல் ஆர்வம் எனக்கு தெரியும். பி எஸ் பி மட்டுமே தமிழ் நாட்டில் தலித் அரசியலை வென்று எடுக்கும். 

#நான் என் வாழ் நாளில் BSP யில் சேர மாட்டேன் . ஆனால் ஆதரிப்பேன் !#

நிலையாமை என்பது உலக தத்துவம் இது மாறும். ஒரு வேலை திருமாவே பி எஸ் பி யில் சேர்ந்தாலும் சேரலாம். 



#நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது காரணம் பெரியார் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பெரியாரின் கருத்துக்கள் எனக்கு பிடிக்கும் , ஈழம் தொடர்பாக சில முரண்கள் இருந்தாலும் , ஈழம் வேண்டும் என்பது என் நிலைப்பாடு , இசுலாமியர்களோடு இணைத்து செயல்பட வேண்டும் என்பது என் விருப்பம் ....இதற்கு BSP தயாரகும் என்றால் நான் அந்த கட்சிக்கு ஆதரவு தருவேன் . ஆதரித்து பேசுவேன் .. ஆனால் ஒரு போதும் இணையமாட்டேன்.....#

உங்களை மாதிரி ஆட்கள் பி எஸ் பி க்கு வராமல் இருந்தால்தான் அந்த கட்சி உருப்படும். நீங்க சிறுத்தைகள் எனும் பெயரில் தொடர்ந்து தி மு க  தொண்டர் அணியாக இருக்கத்தான் தகுதி. தலித் உணர்வோடு இருக்கும் எம் மக்கள் கூடிய விரைவில் அந்த திராவிட முகாமில் இருந்து வெளியேறி உண்மையான தலித் இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொள்வார்கள். 



#அப்புறம் இன்னொரு செய்தி இவ்ளோ பேசுறா நான் சத்தியமா சிறுத்தை கட்சிக்காரன் கிடையாது ...ஆதரவாளர் மட்டுமே !#


#இலங்கையைப் புறக்கணிப்போம்.#

 எழவெடுத்த அந்த ஈழம் இலங்கையில் தானே இருக்கு. 


அண்ணல் அம்பேத்கரை ஏற்ருக்கொல்கிரர்கள்

#மனுஷ்ய புத்திரனுக்கு எதிரா இத்தனை பதிவு போடும் நீங்க ஏன் கிஷோருக்கு எதிரா ஒன்னு கூட போடல ? உங்களைப்போன்றே கிஷோரும் அம்மாவின் விசுவாசி என்பதாலா ?#

கிஷோர் கெட்டவன்  ஜாதி வெறி பிடித்தவன் என்பது என் மக்களுக்கு நல்லா தெரியும். ஆனா இந்த மிருக புத்திரன் நலவரா கெட்டவரான்னு என் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். 


அதான் அவருக்கு ஜால்ரா தட்டிட்டு இருக்கங்களே. அவருக்கு வக்கீல் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே.

No comments:

Post a Comment