Wednesday, May 1, 2013

#தமிழ்நாட்டிலே பெரும் பணக்காரர்கள் தெலுங்கர்கள் ஆயிற்றே. அப்படியானால் இதற்கெல்லாம் காரணம் அவர்கள் தானோ.#

இங்கு வர்க்கம் பேசவில்லை ஜாதியை பேசிக்கொண்டு இருக்கிறோம். பிச்சை எடுக்கும் பார்ப்பான் கூட இங்கு ஆதிக்க வெறி பிடத்த பார்ப்பானாகத்தான் இருக்கிறான். சூத்திர கூட்டத்துக்கு சொல்லவே தேவை இல்லை. தமிழ் நாட்டில் உள்ள பண்ணையார்கள் / முதலாளிகள் எல்லாம் தெலுங்கர்கள் என்றால். தமிழர்களை தமிழ் தேசியம் பேசுவதை நிறுத்த சொல்லிவிட்டு வர்க்கம் பற்றி பேச சொல்லுங்கள். பணம் படைத்த பண்ணை முதளிகளுக்கு எதிராக பேச சொல்லுங்கள். அபப்டி வர்க்கம் பற்றி பேசினால் கட்சி நடத்த கூட்டம்  மே 17 மே 18 மே 19 எல்லாம் நடத்த யாரு காசு கொடுப்பா. தெரு தெருவுக்கு பிச்சை எடுக்க வேண்டியதுதான். அதுக்குதான் கம்யுனிஸ்ட்டு முதல் ராம்சமியிஸ்ட்டு வரை எல்லா யிஸ்ட்டுகளும் தமிழ் தேசியம் பேசுறான். தமிழ் தேசிய கூட்டங்களுக்கு பணம் கொடுக்கும் பண்ணையார்கள் முதலிகள் நாடு கடந்த அகதிகள் எல்லோரும் பிச்சைகாரர்களா? இல்லை தெலுங்கு பேசும் நாயுடு, நாயக்கர், செட்டி தமிழர்களா? 


#நான் பறையன்... நான் பல்லன்... நான் சக்கிலியன்... "நான் தாழ்ந்த சாதியான்"... அவர்களை ( ஆளும் வர்க்கம் ) காணும்போது எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் தோன்றுவதில்லை. காரணம் என்னுள் சாதிமறந்த இனவுணர்வு மேலோங்கி உள்ளது... தமிழன் என்ற பெருமைமிகு அடையாளத்தை என் இதையம் சுமக்கிறது.....#

நாங்க  தாழ்ந்த ஜாதியும் இல்லை தாழ்த்தப்பட்ட ஜாதியும் இல்லை. நான் பறையன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல தைரியம் இல்லாத கோழைகள்தான் நான் தமிழன் நான் திராவிடன் எனும் பொய் முகங்களுக்குள் அடைந்து கிடப்பான். பறையன் என்பது ஜாதியும் இல்லை அது தாழ்ந்த ஜாதியும் இல்லை. சூத்திர ஜாதிகள் வேண்டும் என்றால் தாழ்ந்த ஜாதிகளாக இருப்பார்கள். அவர்கள் வேண்டும் என்றால் தன்கள் ஜாதியை மறைத்து அவர்களின் சூத்திர தலைவர்கள் பாதையில் திராவிடன் தமிழன் என்று சொல்லிக்கொண்டு திரியலாம். எங்களுக்கு அந்த அவசியம்இல்லை. பறையர் என்போர் ஆதி குடிகள் பூர்வீக பவுத்தர்கள். இந்த மண்ணில் ஜாதியும் பார்ப்பனியமும் தோன்றிய காலத்தில் இருந்தே அதை எதிர்த்த புரட்சியாளர்கள். நாங்கள் ஆண்ட பரம்பரையும் (பார்ப்பான / ஷத்திரிய) இல்லை அவர்களுக்கு அடிமையான பேன்ட (சூத்திர) பரம்பரையும் இல்லை. அவர்களை எதிர்த்து ஆயிரம் ஆண்டுகள் போரிட்ட பரம்பரை. நாம் தமிழர் நாம் திராவிடர் என்று முகமுடி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நெஞ்சை நிமிர்த்தி தொலை உயர்த்தி சொல்லுவோம் புத்தன் வழியில் வள்ளுவர் வழியில் பண்டிதர் வழியில் போதிசத்துவர் வழியில் சூத்திர  ஜாதி திமிரையும் பார்ப்பன திமிரையும்  எதிர்த்த பரம்பரை எங்கள் சாக்கிய பறையர் பரம்பரை என்று. 


மரக்காணம் வந்து எதையாவது செய்யுங்களேன். 

அதான் புலி தேசிய கஞ்சா கோஷ்ட்டி தேசிய தலைவர் உங்கள் டைம் லைனில் இருக்காரே,  அவரை கூப்பிட்டுட்டு வந்து எதையாவது புடுங்கி நட சொல்லுங்களேன். 

No comments:

Post a Comment