Sunday, May 26, 2013

#தமிழா, பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய்,ராவுதனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா - தமிழா தமிழனாய் வாழ்வோம்.#

தமிழ்ன்னா யாரு அவுங்க என்ன என்ன ஜாதியை சேர்ந்து இருக்க வேண்டும் என்று இவர் வரையறை தருகிறார் பாருங்கள். இந்த ஜாதிகளை சேராமல் வேறு ஜாதியில் இருந்தால் அவர்கள் தமிழர்கள் இல்லையா? இது வரைக்கும் இவர்கள் "பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய்,ராவுதனாய், குயவனாய்......" தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறர்கள். இப்பத்தான் இவர் அழைப்பு கொடுக்கிறார். வாங்க நாம் தமிழராய் இணைவோம் என்று. 

##பறையர் என்று அழைத்துக் கொள்வதே சிறந்தது.....பறையன் என்ற சொல்லுக்குத்தான் போராட்டக்குனமும், எதிர்ப்புக்குனமும் அதிகம்.......#

இதில் மாற்றுக்கருத்து இல்லை. தலித் எனும் அடையலாம் மாறிக்கொண்டு வரும் அடையலாம். தற்போது அது இந்தியா முழுக்க உள்ள சேரி வாழ் பறையர்களை இணைக்கும் அடையாள சொல்லாக பயன்படுகிறது. தலித் என்பது அடையாளத்தை மறைத்து ஓடி ஒளிந்து கொள்ளும் சொல் அல்ல, அது நமது மக்களை அடையாளப்ப்படுத்தும் அடையாள சொல்.  என்னுடைய சேரியில் பேசும்போது எனக்கு பறையன் எனும் வார்த்தை தேவைப்படுகிறது. அங்கு பறையன் என்று பேசும்போது இந்தியா முழுக்க உள்ள நமது சமூக மக்களின் சொல்லாகவே அது பயன்படுகிறது. அது போல உலக அரங்கில் எமது மக்களுக்காக குரல் கொடுக்கும்போது தலித் என்ற சொல் பயன்படுகிறது. மேலும் தற்போது இந்தியா முழுக்க உள்ள பறையர் சமூக மக்கள் சாக்கியத்தை ஏற்று சாக்கியர் எனும் அடையாளத்துக்குள் போய்க்கொண்டு இருக்கிறர்கள். நமது அடையாளத்துக்கு என்ன பெயர் பெயர் என்பது முக்கியம் அதை விட முக்கியம் நாம் எந்த அடையாளலத்துக்குள் இருக்கிறோம் என்பது. தலித் என்பது மாறும் சாக்கியர் எனும் நமது பூர்வீக அடையலாம் மீண்டு வரும்.  சங்ககால தமிழில் "ஐ" எனும் எழுத்து கிடையாது எனவே நாம் ஆதியில் பறையர் என்று இருந்தோம் என்று சொல்வது கேள்விக்கு உரியதே. ஆனால் இன்று நான் பறையன் என்று சொன்னால் ஜாதி தமிழனின் காத்து ஜவ்வு கிழிகிறது. எனவே பறையன் என்பது எனக்கு புரட்சிக்கான அடையாளம். நாம் யார் என்பதே இங்கு முக்கியம். காலத்துக்கு ஏற்றவாறு நமது பெயர்கள் மாரும். மாற்றத்தை ஏற்று விடுதலைக்கு வழி அமைப்போம். நாம் தமிழன் நாம் திராவிடன் என்று ஆண்டைகளுக்கு அடிபணிந்து கிடக்கும் சாக்கடைகள் அல்ல நாம் நமது அடையாளங்களை மார் தட்டி சொல்லும் வீர மறையர்கள். 



#சிறை கட்டியதே நம் இனத்துக்கு தாண்டா - சீமான் #

தெரியுமே! இதைதான் நாங்கள் எமது மக்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அந்த இனம் கொலை கொள்ளை கடத்தல் வீடு கொளுத்துதல் கழுத்தை அறுத்தல் பாலியல் பலாத்காரம் இதில் பெயர் போனது ஜெயிலில் இருக்க வேண்டிய குற்றப்பரம்பரை தான் ஆண்ட பரம்பரையாக புலி வேசம் போட்டுக்கொண்டு திரிகிறது. ஜாக்கிரதையாக இருங்கள். 

No comments:

Post a Comment