Tuesday, May 21, 2013

#போர் என்றால் கொலை, அழிப்பு, கற்பழிப்பு, களவு, ஆட்கள் மாயமாக மறைதல் என்பவைகள்தான். இந்தநிலையில், ராஜுவ் காந்தியும், இந்தியப்படைகளும் இவற்றைச் செய்யவில்லை என்பது வெறும் பொய்யான பேச்சாகும். # 

போர் என்றால் கொலை, அழிப்பு, கற்பழிப்பு, களவு, ஆட்கள் மாயமாக மறைதல் என்பவைகள்தான். இந்தநிலையில், பிரபாகரனும் புலிப்படைகளும் இவற்றைச் செய்யவில்லை என்பது வெறும் பொய்யான பேச்சாகும். 

#மாறாகத் தூயத் தமிழ் சொற்கள் தொல் தமிழரிடம்(தலித்துகள்) வழங்கப் படுகின்றன. ஆதலால் இவர்கள் மூத்தத் தமிழ்க் குடியினர் என்பதில் ஐயமில்லை.#

தமிழர்களுக்கு முந்தையவர்கள். திராவிடர்களுக்கு முந்தையவர்கள் அதனால் மூத்தகுடி எனவே நாங்கள தொல்குடியினர் என்று பண்டிதரும் தாத்தாவும் சொன்னார்கள். ஆனால் அது என்ன மூத்த தமிழ் குடியினர். மூத்த தமிழ் குடியினருக்கும் மத்த தமிழ் குடியினருக்கும் என்ன வித்தியாசம். 

#மாறாகத் தூயத் தமிழ் சொற்கள் தொல் தமிழரிடம்(தலித்துகள்) வழங்கப் படுகின்றன. ஆதலால் இவர்கள் மூத்தத் தமிழ்க் குடியினர் என்பதில் ஐயமில்லை.#

தமிழ் மொழியில் பிற மொழிகளே கலக்கவில்லை என்கிறீர்கள். அப்புறம் மத்தவன் பேசுறது எல்லாம் கலப்பட தமிழ் மொழி நாங்க பேசுறது மட்டும் தூய தமிழ் என்கிறீர்கள். என்ன ஐயா உங்க பித்தலாட்டம்.


#மாறாகத் தூயத் தமிழ் சொற்கள் தொல் தமிழரிடம்(தலித்துகள்) வழங்கப் படுகின்றன. ஆதலால் இவர்கள் மூத்தத் தமிழ்க் குடியினர் என்பதில் ஐயமில்லை.#
 
நாங்க பேசுறது சேரி பாஷை பேச்சு மொழின்னு அதை இரண்டாந்தரமா ஆக்கிட்டு சைவ பிள்ளைகள் தமிழை சுந்தர தமிழா அக்கி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆதிக்கம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். கேட்டா நாங்க பேசுவது தூய தமிழா? 


#மாறாகத் தூயத் தமிழ் சொற்கள் தொல் தமிழரிடம்(தலித்துகள்) வழங்கப் படுகின்றன. ஆதலால் இவர்கள் மூத்தத் தமிழ்க் குடியினர் என்பதில் ஐயமில்லை.#

பண்டிதர் நூறு வருஷத்துக்கு முன்னர் எழுதிய தமிழ் இன்று கொடுந்தமிழாக போயிட்டது. அதை இன்னைக்கு உள்ள புள்ளைகள் கிட்ட கொடுத்து படிக்க சொன்னா ஒண்ணுமே புரிய மாட்டேங்குது என்கின்றனர். அதே நூறு வருஷத்துக்கு முன்னர் சைவ வேளாளர்கள் எழுதிய உரைநடை தமிழ் இன்னைக்கு எல்லோருக்கும் புரியும் தமிழாக உள்ளது. என்ன புருடா உடுறீங்க. 


#மாறாகத் தூயத் தமிழ் சொற்கள் தொல் தமிழரிடம்(தலித்துகள்) வழங்கப் படுகின்றன. ஆதலால் இவர்கள் மூத்தத் தமிழ்க் குடியினர் என்பதில் ஐயமில்லை.#

நான் பறையன்தான் சேரிக்கரந்தான். என் பேச்சு சேரி பேச்சு என்று சொல்லி எத்தனை முறை ஜாதி தமிழ் நாய்கள் என் பேச்சை இழுவு படுத்தி உள்ளன தெரியுமா? சரியா தமிழ் பேச தெரியம் எழுத தெரியம் எத்தனை கொட்டு வாங்கி இருக்கேன் தெரியுமா? இந்த ல இல்ல அந்த ள அந்த ள இல்லை இந்த ழ என்று ஜாதி வெறி பிடித்த சூத்திர தமிழ் வாத்தியானுங்க  பண்ண கலாட்டா இருக்கே அது தாங்க முடியாது. 

No comments:

Post a Comment