Friday, May 31, 2013

பறையரும் சக்கிளியரும் ஜாதி இல்லை. சேரிக்குள் ஜாதி இல்லை. புதுசா நாமம் போட்டுக்கிட்டு பட்டை போட்டுக்கொண்டு "பறையன் என்பது ஜாதி" "நாங்க உயர்ந்த ஜாதி" :சக்கிலியர் தாழ்ந்த ஜாதி"ன்னு ஒரு சிலர் சொல்லிட்டு திரிவதும் புதுசா திராவிட வேஷம் புலி வேஷம் போட்டுக்கொண்டு "பறையன் என்பது ஜாதி" "நாங்க திராவிடர்  நாங்க தமிழர்" என்று திரிவதும் எங்களை ஜாதி ஆக்காது. பறையர்கள் ஜாதியை எதிர்த்ததால்தான் அவர்கள் சேரியில் வாழ்கிறார்கள். அவர்கள் ஆரிய ஆதிக்கத்தையும் திராவிட ஆதிக்கத்தையும் எதிர்த்ததால்தான் ஆரிய-திராவிட இந்துக்களின் கண்களுக்கு தீண்டத்தகாதவர்களாக உள்ளனர். கலப்பு திருமணம் ஜாதி ஒழிப்பு திருமணம் எல்லாம் ஊர் தெருவில் உள்ள சூத்திர திராவிடர்களுக்கு தேவை. அதை எதுக்கு எங்களுக்கு சொல்லிக்கொடுக்கிரீர்கள். உங்களுக்கு சூத்திர பட்டம் போகணும்னா அதுக்கு "திராவிட பட்டம்" "தமிழர் பட்டம்" தேவை அதுக்கு ஜாதிகள் ஒழியனும். பறையர் சக்கிலியர்  என்பது ஜாதி இல்லை. பறையர்கள் சக்கிலியர்கள் என்பது பழங்குடி மக்களின் அடையாளங்கள்.  நாங்கள் பறைய்ரகளாக சக்கிலியர்களாக இருப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சனை. பறையர்களும் சக்கிளியர்களும் பூர்வீக குடிகள். ஆதி குடி மக்கள் பூர்வீக பவுத்தர்கள். எங்கள் அடையாளமும் எங்கள் எங்கள் சமூக உரிமைகளும் எங்களுக்கு முக்கியியம். ஜாதி ஒழிப்பு வெங்காயம் விளக்கெண்ணை எனும் பெயரில் எங்கள் அடையாளங்களை அழிக்க நினைப்பதே ஆதிக்க திரரவிட அரசியல்தான். யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை எங்களுக்கு யாரும் அடுமை இல்லை என்று கொண்டாட வேண்டிய சமூகம் எங்கள் சமூகம் அதுக்கு ஜாதி என்று முத்திரை குத்தி சூத்திர பட்டதை சுமத்த நினைப்பதற்கு பெயர்தான் திராவிட அரசியல்.  

No comments:

Post a Comment