Wednesday, May 29, 2013

பறையர்ணா சாதியாமே. ஆதி குடிகள் ஜாதியா இல்லையான்னு யார் முடிவு பண்ணறது. கொஞ்ச நாளைக்கு முன்ன பழங்குடி மக்களை எல்லாம் இந்துக்களாக மாற்ற இந்து அமைப்புக்கள் ஒரு பூஜை நடத்தினார்கள். அப்படி ஏதாவது பூஜை நடத்தி எங்களை யார் இந்துக்களா ஜாதியா மாத்தியது. நாங்கள் சூத்திரர்களா? ஷத்திரியர்களா? எங்களை ஜாதி என்று சொல்லும் திராவிட சிகாமணிகள் என்ன தனியா சங்கர மடம் வைத்து நடத்துராங்களா? இல்லை ஆரிய சாமாஜம் மாதிரி திராவிட சமாஜம் வைத்து நடத்துராங்களா?

சமூக அடையலம்னா? சமூக அடையாளம் அப்புறம் எதுக்கு அதுக்கு ஜாதின்னு  பேரு வைக்கிறீங்க ஜாதிகள் உருவாகும் முன்னரே பறையர் எனும் சமூகம் இருந்தது வரலாறு. ஆதி குடி சமூகம் / பழங்குடி சமூகம்.   

 #பூர்வகுடி தமிழர்கள் என்று சொல்லியே தமிழன் என்ற இனவுணர்வோட இருக்கலாமே....#

எதுக்கு எனக்கு தமிழன் எனும் இன உணர்வு. ஆண்டைகள்  செத்தா பறை அடிக்கவா குழி வெட்டவா பிணம் எரிக்கவா? எதுக்கு எனக்கு தமிழன் எனும் இன உணர்வு. 

பறையர் பூர்வ குடிதான் அதில் எந்த கேள்வியும் இல்லை. அது வரலாறு. தமிழன் பூர்வ குடியா? அப்புறம் எதுக்கு எனக்கு தமிழன் பட்டம். 

No comments:

Post a Comment