Thursday, May 16, 2013

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? இங்க ஒரு கூட்டம் அப்படித்தான் சொல்லிட்டு திரியுது. குல்லா போட்டுக்கினே அல்லா சாமி கும்பிட்டுக்கினே அம்மாவாசை ரா பூஜை நடத்துதுங்க. ராமசாமி பக்தர்களாக இருந்து கொண்டே அண்ணல் அம்பேத்கரை பின்பற்றும் அம்பேத்கர் வாதிகளைத்தான் சொல்கிறேன். அது எப்படி மதம் இல்லை என்று சொல்லும் ராமசாமியை  பின்பற்றிக்கொண்டே மதம் மனிதனை நல் வழி படுத்தும் மதம் மனிதனுக்கு அவசியம் என்று அண்ணல் வழியில் புத்தத்தை பின்பற்றுவார்களோ? வந்தாணம் சொல்வது எல்லாம் மூடநம்பிக்கை என்று ராமசாமிக்கு ஜால்ரா தட்டிக்கொண்டே அண்ணல் எழுதி கொடுத்த புத்த வந்தனத்தை   காலையிலும் மாலையிலும் மந்திரம் மாதிரி சொல்வார்களா? ராமசாமிக்கு சிலை வழிபாடு முட்டாள் தனம். அண்ணலுக்கு புத்தரின் சிலை முன்னாள் விழுந்து வணங்குவது பகுத்தறிவு. இந்த கூ முட்டைகள் அண்ணலின் வழியை பின்பற்றுமா இல்லை அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் ஆப் பாயிலா போகுமா?

No comments:

Post a Comment