Tuesday, May 21, 2013


#புத்தர் அமணர் ஒழிக என்று பாடிய சம்பந்தர் பாலி மொழியினர் ஒழிக என்று ஏன் பாடவில்லை?#

அவர்  சாக்கிய (மொழி பேசும்)  சமணர்  ஒழியணும்னு பாடி இருக்கார். 


அனா ஆவன்னா அம்பேத்காரை பாரன்னா இனா ஈயன்ன இவருக்கு இணை யாரன்னா? 

 

விடுதலை சிறுத்தைகள் யாருக்கும் தொங்கு சதையல்ல...
எங்களுக்கென்று ஒரு தலைவர் இருக்கிறார், எங்களுக்கென்று ஒரு தலைமை இருக்கிறது - வன்னி அரசு

மேதகு தமிழ் தேசிய தலைவரா? தமிழ் இனத்தலைவர் டாகடர் கலைஞர் கருணாநிதியா? 


#சிங்கப்பூரில் இருந்து நான்...
மலேசியாவில் இருந்து நான்...
துபாயில் இருந்து நான்...
ஜப்பானில் இருந்து நான்...
இப்பிடிலாம் சொல்லி போட்டோ அப்டேட் பண்றவங்க மேல கொலைவெறி வருதுங்க... சத்தியமா பக்கத்துல இருக்க பாண்டிச்சேரிக்கு கூட போகாம இருக்கேன்...#

அதுக்குத்தான் தம்பிகளா சொல்றோம். அண்ணன் வழியில் புலி தேசியம் ஈழம் பேசிட்டி இருக்காமல் அண்ணல் காட்டிய வழியில் நல்ல வழியை தேடிக்கொண்டால். நம்ம பட்டன் பூட்டன் அம்மா அப்பா பட்ட கஷ்டத்தை நாம படாம வாழலாம். நாம பட்டாலும் பரவாயில்லை நம்ம பிள்ளைகள் இப்படி படக்கூடாது என்று சிந்தியுங்கள். நாங்க கூட கூலி தொழிலாளிக்கு சேரியில்தான் பிறந்தோம். ஆனால் இன்னைக்கு இப்படி புலம்பும் நிலையில் இல்லை. நினைத்தால் நாளைக்கே உலகத்தில் உள்ள எந்த பகுதிக்கும் போக முடியும் எனும் நிலையில் உள்ளோம். காரு பங்களா என்று வாழ்ந்தாலும் அண்ணல் போட்ட பிச்சை என்பதை மறக்காமல் உள்ளோம். 


#மேதகு வே.பிரபாகரன் எங்கள் தேசிய தலைவர் தான்.# நாம் தமிழர்களும் சிறுத்தைகளும் தொப்புள் கோடி உறவுகள்? சொந்தங்கள்? உடன் பிறப்புகள். தெரியும் தெரியும்.



###பொருளாதார ரீதியாக உயர்ந்துவிட்ட பள்ளர்களை தேவேந்திர குல வேளாளர் என்றும் பறையர்களை வள்ளுவ வேளாளர் என்றும் மிகவும் பிற்படுதோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்....!
ஒரு பறையர் டாக்டருடைய மகனுக்கும் ஒரு பிணம் சுடும் பறையருடைய மகனுக்கும் ஒரே இடஒதுக்கீடு என்பது ஏற்புடையதன்று...!##

அது சரிதான் அதுக்காக எங்களை எதுக்கு பிற்ப்படுத்தவர் பட்டியலில் சேர்த்து அண்ணல் எங்களுக்கு கொடுத்த அடையாளத்தை ஒழிக்க நினைக்கிறீர்கள் புலி தேசிய வாதிகளே. 

பெயர் என்பது வேற அடையாளம் என்பது வேறு. நான் சொல்லுவது பெயர் மற்றம் இல்லை. அடையாள மாற்றம். எங்களை கொண்டு போய் எதுக்கு அந்த கூ முட்டை சூத்திர கூட்டத்தோடு இணைக்க சொகிரீர்கள் என்று கேட்டேன். 


#தாழ்த்தபட்டோர் அல்லது பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீடு என்பதை ""வளரும் சாதியினருக்கான இடஒதுக்கீடு"" எனப்பெயர் மாற்றம் செய்யபட வேண்டும்....!#

நாங்க ஜாதியே இல்லை என்கிறோம். எங்களுக்கு எதுக்கு வளரும் "ஜாதி"யினர் என்று புது பெயர்.  


நான் கானாவில் மூழ்கி இருக்கிறேன். ரிலாக்ஸ் ப்ளீஸ்! 

நம்ம சேரி கானாவுள கிடைக்கும் கிக்கு தமிழ் இயல் இசை நாடகத்துல கிடைக்குமா?  

No comments:

Post a Comment