Thursday, May 23, 2013

புத்தம் சரணம் கச்சாமி!
தம்மம் சரணம் கச்சாமி!!
சங்கம் சரணம் கச்சாமி!!!

புத்தம் நமாமி!
தம்மம் நமாமி!!
சங்கம் நமாமி!!!

அண்ணலின் வழியில் அன்புவழியான புத்த தம்மம் ஏற்ப்போம்! 
நமது வாழ்வில் ஒழி ஏற்றுவோம். அகவிருள் நீக்கி அறிவொளி பெறுவோம்!


நமது விடுதலைக்கான ஒரே  வழி அண்ணல் கட்டிய அன்பு வழி.

சாதியத்தால் வீழ்ந்தோம் சாக்கியத்தால் வெல்வோம். 

புத்த தம்மத்தை தழுவியபோது அண்ணல் சொன்ன வார்த்தைகள், "நான் நோ லாங்கர் இந்து நோ லாங்கர் தீண்டத்தகாதவன் நான் விடுதலை பெற்ற மனிதன்" அண்ணல் வழியை ஏற்ப்போம் விடுதலை பெற்ற மனிதனாக நம்மை பிரகடனம் செய்வோம். 




ஓம் மணி பத்மேயும்! ஓம் மணி பத்மேயும்!! ஓம் மணி பத்மேயும் !!!
தாமரையை போல விழித்திருங்கள்!!!!!

உலக உயிர்களுக்கு எல்லாம் துன்பத்தை தீர்க்கும் வழி அறிந்து அளித்த புத்தர் தாள் பணிவோம்.  


நமது பூர்வீக சாக்கிய தம்ம கலாச்சாரத்தை மீட்டு எடுப்போம்! நமது வருங்கால சந்ததிக்கு சொல்வோம் நமது சாக்கிய புத்த பாரம்பரியம் என்பது உலகளாவிய  உன்னதமான பாரம்பரியம் என்று.



நாம தமிழ் தேசியத்துக்கு போகத்தேவை இல்லை. தமிழ் தேசியத்துக்கு ஜாலரா அடிக்கும் கூட்டம்தான் சாக்கியத்தை நோக்கி வரணும். 

அதை பாத்து ஜாதி தமிழர்கள் வயிறு எரிஞ்சா பரவாயில்லை. நம்ம ஜாலரா தமிழனும் இல்லை வயிறு எறிகிறான். 


#அமைதியை போதித்த புத்தரை வணங்குபவர்கள்  கொலை வெறி பிடித்து அலைகிறார்கள்.#

உண்மைதான் உலகத்துக்கே அன்பையும் சமதானத்தை போதிக்கும் புத்தரின் வழியில் வந்த  இலங்கை சிங்கள பவுத்தர்களது பெயரை கெடுக்கும் வகையில் ஒரு சில சிங்கள இனவெறியர்கள் இருப்பது உண்மைதான். அது அந்த சமூகத்துக்கு மிகப்பெரிய கெட்ட பெயரை கொண்டு வந்து கொடுக்கிறது. தமிழர்கள் அப்படி இல்லை. அவர்கள் கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே வாளோடு முன் தோன்றிய மூத்த குடிகள். மனித ரத்தத்தை எடுக்கும் வாளையும் கத்தியையும் கோடாரியையும்  வைத்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் வெட்டிக்கொண்டு சாகும் பாரம்பரியத்தில் வந்தவர்கள் அதை அவர்கள் விட்டு விட்டு தம்மத்தை ஏற்றால் அது அவர்கள் பாரம்பரியத்துக்கு இழுக்கு. வீர பரம்பரை கொலை வெறி பிடித்து அலைவது தான் அவர்களுக்கு பெருமை. 

No comments:

Post a Comment