Wednesday, May 29, 2013

#அண்ணன் வணக்கம் நீங்கதான் பறையர் என்ற வார்த்தைக்கு பாரியார் என்ற வார்த்தையிலிருந்து வந்ததுன்னு சொல்லிடிங்க.பறையர் என்ற வார்த்தையோ தமிழை தழுவி இருக்கும் ஒரு வார்த்தை அதனால் அதை எதற்காக நீங்கள் தஊக்கிபிடிக்கிரீர்கள்.உங்களுக்குத்தான் தமிழை பிடிக்காதே.தாழ்மயுடன் கேட்பது பறையர் என்ற தமிழ் வார்த்தையை தூக்கிபிடிப்பது எதற்காக அண்ணன்.#

பறையர் என்பது தமிழ் வார்த்தை என்று யார் சொன்னது. தமிழில் "ஐ" :ற" என்பதெல்லாம் பின்னால் சேர்க்கப்பட்ட எழுத்துக்கள். அது எப்படி தமிழ் ஆகும். பறையர் எனும் பறையர்களின் வார்த்தை ப அய்யா (பரி அய்யா/ உன்னதமானவர்கள் / புனிதமானவர்கள் / உயர்ந்தவர்கள் / தம்மத்தை பின்பற்றுபவர்கள்) எனும் பாலி வர்தையில் இருந்து வந்தது. பாலி வார்த்தையில் இருந்து வந்த வார்த்தை பாலி வார்தையாகத்தானே இருக்கும். அது எப்படி தமிழ் வார்த்தை ஆனது.

நாம ஒன்னு சொன்னா ஆயிரம் கேள்வி கேப்பாங்க? நாம ஒன்னு எழுதுனா ஆயிரம் ஆதாரம் கேப்பாங்க. இந்த லெமூரியா, சங்க காலம் இதுக்கு எல்லாம் எதவது ஆதாரம் இருக்குதன்னா/ மூச்சு விட மாட்டாங்க. 

மத்திய இந்தியாவில் உள்ள முண்டா இன மக்களை பற்றியும் அவர்களது மொழி பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள செய்யப்பட்டு உள்ளன. அது போல மௌரியர் பற்றியும் மவ்ரியர் எனும் வார்த்தையின் மூலம் பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் நடந்து உள்ளன. அவற்றை படித்து நான் சொன்னதின் விளக்கங்களை தெரிந்து கொள்ளவும். 

No comments:

Post a Comment