Wednesday, May 29, 2013

சாக்கிய பறையனார் என்று கலப்பரையர் கால செங்கம் கல் வெட்டில் உள்ளது. அது பற்றி ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலை கழகங்களில் ஆய்வு நடக்குது. நாங்க சோம்பேறிகள் இல்லை நைனா நாங்க சோம்பேறிகளா இருந்தா தமிழ் மட்டுமே என்று சேரிகளில் உக்காந்து இருப்போம். நாங்க சோம்பேறி இல்லை என்பதால் தான் இங்கிலீசு இந்தி மராத்தி பாலி ன்னு எங்கள் கலை அகல விரிக்கிறோம். 

#ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் சாதி சாதி என்று சொல்லப்பட்ட ஒன்று இன்று சாதியே இல்லை என்றளவில் மாறி விட்டதென்றால் வாழ்க பெரியார்!#

ஹாஹாஹா. என்ன திடீர்னு பெரியார். ஆயிரம் ஆண்டுகள் பறையர் ஜாதின்னு யார் சொன்னது. இந்து மத சாஸ்திரம் கூட எங்களை ஜாதிக்கு வெளியே என்றுதான் சொல்கிறது. மனு கூட அவர் சாஸ்திரத்தில் எங்களை வர்ணம் (ஜாதி) அற்றவர்கள் என்றே சொல்கிறார். நீங்களும் உங்கள் ராமசாமி கூட்டமும்தான் பறையன்னு சொல்லாதே பறையன் என்றால் ஜாதின்னு சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள். 


இந்து இல்லாத எனக்கு இந்து பட்டம் கட்டுவது ஜாதி இல்லாத எனக்கு ஜாதி பட்டம் கட்டுவது சூத்திரன் இல்லாத   எனக்கு சூத்திர பட்டம் கட்டுவது இதெல்லாம் யார் என்றால் சூத்திர ராமசாமி கூட்டம். நீ இந்து இல்லை நீ சூத்திரன் இல்லை உனக்கு ஜாதி இல்லை வருணம் இல்லை என் கோயிலுக்கு உள்ளே வரதே என்கிறான் பார்ப்பணிய இந்து. அவனும் இந்துதான் அவனை கோயிலுக்கு உள்ளே விடு என்கிறான் நாத்திக ராமசாமி இந்து. அந்த நாத்தம் பிடிச்ச இந்து கோயிலுக்கு உள்ளே போகணும்னு நான்கேட்டேனா? உனக்குத்தான் கடவுள்  நம்பிக்கையே இல்லை.  மதமே வேண்டாம்னு சொல்றே  அதுக்கு அப்புறம் என்னை எதுக்கு கொண்டு போய் இந்து சாக்கடையில் தள்ளுகிறாய். எனக்கு எதுக்கு இந்து பட்டம் சூத்திர பட்டம் ஜாதி பட்டம் கட்டுகிறாய்.  


களப்பிரர் இல்லை களபரியார் (களபறையர்) 

No comments:

Post a Comment