Thursday, May 9, 2013

#மாற்றரசியல் ஒன்றை உருவாக்கும் மனோதிடமற்ற சாக்கிய பறையனாரே!# 

#தலித் அரசியலை பொது அரசியலாக்கும் அபாரத்திறமையும் அறிவும் உங்களிடம் நிறையவே இருக்கிறது#

எப்படி நீங்களே கண்ரடிக்ட் பண்றீங்க பாருங்க. நாங்க புல்லை புடிங்கி போட்டோமா? இல்லை இலையை கிள்ளி போட்டோமா என்று வரலாறு சொல்லும். இன்னைக்கு உங்களை போன்றவர்கள் புத்தம் தம்மம் போதுசத்துவர் என்று பேசுவதெல்லாம் எங்களை போன்றவர்கள் தொடர்ந்து போதிசத்துவரின் தேரை முன்னோக்கி நகர்த்துவதால்தான். தேர் மெதுவாகத்தான் நகரும். நாங்கள் முன்னோக்கி தேரை பத்து அடி நகர்த்தினால் திருமா போன்ற திராவிட தமிழ் தேசிய ஜால்ராக்கள் நூறு அடி பின்னோக்கி இழுக்கிறார்கள். அரசியல் என்பது கட்ட பஞ்சாயத்து பண்ணி கஞ்சா பணம் வாங்கி பெரிய பெரிய கட் அவுட் வைப்பது இல்லை. நாங்கள் செய்வதும் அரசியல்தான். ஜாதி இந்துக்களின் கண்ணில் மட்டும் அல்ல அவர்களுக்கு ஜால்ரா தட்டு திருமா போன்ற வர்களின் கண்களிலும் விரலை விட்டு ஆட்டுவதும் அரசியல்தான். திருமா கட்டமைத்ததாக நினைக்கும் தமிழ் தேசிய அரசியல் புலி தேசிய அரசியல் திருப்பி அடி திருப்பி கடி எனும் வன்முறை அரசியல் எல்லாம் நீண்ட காலம் நிற்காது. அது காலத்தின் சுழற்ச்சியில் கறைந்து போகும். ராமதாஸ் மூப்பனார் கருணாநிதி வீரமணி சு ப வி என்று அடுத்தவர்களை அண்டி பிழைக்கும் அரசியல் எமக்கு விடியலை தராது. சுயமாக நிற்கும் எம் இன மக்களே எமக்கு விடுதலை தருவார்கள். பணம் ஆடம்பரம் போஸ்டர் என்று மினு மினுக்கும் திருமாவின் தமிழ் தேசியத்தை பார்க்கும் உங்களால் தமிழ் நாட்டில் பெருகி வரும் சாக்கிய அரசியலை பார்க்க முடியவில் என்று நினைக்கிறேன். அதை பார்க்க வேண்டும் என்றால் தலித்திய சிந்தனை அவசியம். நாங்கள் அலை அலையாய் கோஷம் போடும் கூட்டத்தை கொண்டு வந்து காட்டி அரசியல் வியாபாரம் பன்னதேவை இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் மாற்று அரசியலை விதைத்துக்கொண்டு இருக்கிறோம். அதன் பலனை எம்மக்கள் அனுபவிப்பார்கள். எங்கள் ஆதங்கம் எல்லாம் உங்களை போன்ற சிந்திக்கும் ஒரு சிலர் திருமா எனும் தமிழ் தேசிய வலைக்குள் சிக்கி எம்மக்களை மாற்று அரசியல் எனும் பெயரில் புலி கூட்டத்துக்கு ஏலம் விட்டுக்கொண்டு இருப்பதுதான். அண்ணலை புத்தரை பண்டிதரை தம்மத்தை சுமக்க வேண்டிய எமது மக்களின் முதுகுகள் புலி கொடியையும் பிரபாகரனையும் சுமந்து கொண்டு இருப்பதுதான் எமக்கு வேதனையாக உள்ளது.  



# இரு பெண்களிடம் சரிசமமான அன்போடு இருக்க முடியுமா?#

அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ். ஆமாம் நீங்க அன்புன்னு எதை சொல்றீங்க. 

என்னை தமிழன் திராவிடன் என்று சொல்லி சாக்கடைகளுடன் இணைப்பதை விட சாக்கடையில் கிடக்கும் மக்களை பிரித்து கொண்டு வந்து சாக்கியத்தில் இணைப்பதே பறையர் (தலித்) அரசியல். 



No comments:

Post a Comment