Thursday, January 31, 2013

அண்ணன் கமல் நாட்டை விட்டே போயிடுவேன்னு சொல்லிட்டாராம்பா. நாடே துக்கத்துல இருக்கு. இதுல கோபப்படாதீங்க துக்கமா இருங்கன்னு வேற வேண்டுகோள் விடுகிறார். அவர் வீடு விற்பனைக்கு போயிட்டா என்ன பண்ணுவாருன்னு ஹோம்லெஸ் இந்தியன் எல்லாம் ஒரே துக்கமா இருக்காங்க. அவரை நினைத்தால் எனக்கே ஒரே துக்கமா இருக்கு. அவர் அமெரிக்கவுல போய் செட்டில் ஆயி பிச்சை எடுப்பாரோ? செய்தி வாசிக்கிற பொண்ணுங்க அவர் கிட்ட கேள்வி கேக்குற பொன்னுங்களுக்கு  எல்லாம்  அவர் மீது எவ்வளவு அக்கறை இரக்கம். நமக்கு எதுனா ஒண்ணுன்னா இப்படி இரக்கப்பட ஒருத்தரும் இல்லையே சாமி. என்ன அப்படி இவர் பெரிய தேசிய தொண்டு செய்துட்டாரு?  அப்படி என்ன சமூக சிந்தனை வெடிச்சி புரட்சி வருமாறு படம் எடுத்துட்டாரு? ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே. ஒன்னு புரிகிறது இந்துக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். ரொம்ப காலமா அவர் சொல்லிட்டு இருந்த பொய்யை உண்மை என்று நம்பி வெறுத்த சில இந்துக்கள் கூட அவர் இந்து உணர்வுள்ள ஒரு உண்மையான தேசிய வாதி என்று ஒத்துக்கொள்ள வைத்து விட்டார். ஜெய் ஹிந்த் கமல்.

No comments:

Post a Comment