Monday, January 7, 2013

ஆரியன் வந்தான் திராவிடன் வந்தான் சிங்களவன் வந்தான்னு சொல்லி திசை திருப்பிட்டு இருப்பதுதான் தமிழ் தேசியம். பரமக்குடி  தருமபுரி சம்பவம் நடந்து இத்தனை மாதங்கள் ஆகிறது. ஜெயா அது பற்றி எதுவுமே நடக்காதது போல எப்புடி அமுக்கிட்டு  உக்காந்துட்டு இருக்காங்க பாருங்க. யாராவது அந்த அம்மையாரை கொஞ்சமாவது அசைக்கமுடியுதா. அப்படியே புடிச்சு வச்ச புள்ளையாரு மாதிரி. இங்கே இருந்து போயி ராஜபக்ஷேவுக்கு கையில் விளங்கு மாட்டி கோர்டுக்கு கூப்பிட ஆசைபடும் அருமை "தமிழ்" தேசியருங்களே. கொஞ்சம் போயஸ்கார்டான்   பக்கம் போயி ஜெயாவை தட்டி எழுப்பினா நல்லா இருக்கும். சமூக நல்லிணக்கம் என்று சமூகங்கள் கூடி பேசிக்கொண்டு இருக்கு. அரசு மந்திரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலக்டர்கள் எல்லாம் நல்லா சாப்பிட்டுட்டு  தூங்கி கொண்டு இருக்கிறார்கள்.  தமிழ் நாடு அரசு என்ன பண்ணுது, ஆட்சிதுறை என்ன பண்ணுது. அதெல்லாம் இல்லை. இலங்கையில் இருந்து ஒரு சின்ன நியுஸ் வந்தா போதும் குய்யோ முய்யோன்னு கத்துறது. இன்னமோ ராஜபக்ஷே தான் இந்திய பிரதம மந்திரி மாதிரியும் முதல் மந்திரி மாதிரியும் ஆனா வூனா அவரை போய்  திருத்துவது. நல்ல தமிழ் தேசியம்டா உங்க தமிழ் தேசியம்.   

No comments:

Post a Comment