Monday, January 7, 2013
அண்மையில் தலித் மக்களால் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஐ ஏ எஸ் கிறிஸ்துதாஸ் காந்தி அவர்களுக்கு நடத்தப்பட்ட கூட்டத்தில் தலித் அல்லாத தமிழ் இன தலைவர் ஒருவரும் கலந்து கொண்டாராம். அவருக்கு நம் மீது ரொம்ப கருணை, இரக்கம் அவுங்க "அண்ணன்" தமிழ் தேசிய "தலைவர்" "மேதகு" பிரபாகரன் "அவர்கள்" அவர் கையை பிடிச்சி "தொட்டு" தமிழ் நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை எல்லாம் எப்படியாவது கரை சேர்த்து விடுங்கள் என்று கேட்டு கொண்டாராம். பிரபாகரன் பேருக்கு முன்னாலேயும் பின்னாலேயும் அந்த காலத்துல அரசர்களுக்கு வந்தனம் சொல்லுவது போல வீர தீர பராக்கிரம ராஜ குல திலக எல்லாம் சொல்லிட்டுதான் சொல்லனுமாம். இல்லைன்னா பழைய மாதிரி நம்மை கழுவில் ஏத்தி விடுவார்களாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment