Monday, January 21, 2013


தமிழ் தேசியம் எனும் அகவிருள் அகன்று சாக்கியா எனும்  அறிவொளி பரவிக்கொண்டு கொண்டு இருக்கிறது. ஜாதி மத இன வெறி அகலும் அண்ணல் காட்டிய  சாக்கியம் எனும் மானுடம் வெல்லும். அரசியலிலும் சமூகத்திலும் சாக்கியம் நாம்மை உயர்ந்த நிலையில் தூக்கி  நிற்க வைக்கும். இனியும் நமக்கு தமிழ் தேசிய ஆதிக்க அரசியலும், பிரபாகரனின் வன்முறை அரசியலும், ராமசாமின் இன வெறி திராவிட அரசியலும் தேவை இல்லை. புத்தரும் பண்டிதரும் அண்ணலும் கட்டிய வழியில் சாக்கிய அரசியலை கையில் எடுப்போம் இழந்த உரிமைகளை மீட்டு எடுப்போம்.   

"இந்த ஒடுக்கப்பட்ட சமூகம் பவுத்ததை பின்பற்றி வந்த  சமூகம் பவுத்த நெறிகளை பின்பற்றி வந்த சமூகம் பொய் சொல்ல கூடாது பிற உயிர்களுக்கு தீங்கு இழைக்க கூடாது கொலை செய்ய கூடாது திருட கூடாது என்றெல்லாம் பவுத்தம் சொல்லி சொல்லி அதை உள் வாங்கி உள் வாங்கி நாடி நரம்புகளில் இரத்த நாளங்களிலே அது  ஊறி போனதால் திருமாவளவனின் இரத்த அணுக்களிலும் அந்த உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது ஆகவே நாங்கள் எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்க கூடியவர்கள் அல்ல பொய் சொல்ல கூடியவர்கள் அல்ல. அப்படிப்பட்ட வளர்ப்பு முறை. வாரிசுகள். இந்த காஞ்சி புறம் மாவட்டம் என்பது பவுத்தத்தின் தலை நகரமாக இருந்தது தென் இந்திய பகுதிகளிலே. அவ்வளவு பெரிய புகழ் பெற்ற மாநகரம் இது. காஞ்சி காமாட்சி கோயிலே புத்த கோயில் என்றுதான் வல்லுனர்கள் சொல்லுகிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயிலே புத்த விகார் என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்." தொல். திருமாவளவன் 

"வட இந்திய பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான புத்த பிக்குகள் வந்து தங்கி இருந்த மாநகரம்தான் இந்த காஞ்சிபுரம். கோபால் செட்டியார் எழுதி இருக்கிற ஆதி திராவிடர் சரித்திரம் என்கிற நூலில்  இந்த காஞ்சிபுரம் பற்றி சொல்கிறார். இந்த காஞ்சி புரத்துக்கு இப்போதுதான் இந்த பெயர் வந்தது அதற்க்கு முன்னர் இது   பரவர் புறம் என்றுதான் சொல்லப்பட்தது பரவர் புறம் என்பது பறையர் புறம் என்பதில் இருந்துதான் வந்திருக்க முடியும் என்று எழுதுகிறார். அன்று பறையர் என்ற சொல் பெருமைக்கு உரிய சொல்லாக இருந்தது. பறையர் என்று சொன்னால் ஐயர் ஐயங்கார் என்று இப்போது சொல்லுவது எப்படி பெருமைக்கு உரிய சொல்லாக கருதுகிறார்களோ அது போல பெருமைக்கு உரிய சொல்லாக இருந்தது. ஆகவே இந்த ஊருக்கு அதுதான் பெயர் என்று நான் சொல்ல வில்லை கோபால் செட்டியார் சொல்கிறார் அது இன்னும் புத்தகமாக இருக்கிறது. பதிப்புரை இருக்கிறது. யாரவது ஜாதி வெறியர்கள் இங்கு வந்து நின்று கேட்டுக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள். திருமாவளவன் ஒருபோதும் ஜாதி வெறியன் அல்ல. ஜாதி வெறியை தூண்டியது இல்லை. அப்படி பேசுவதற்கு என்ன பெரிய பயிற்சி எடுத்துக்கொண்டா வர வேண்டும். அவரை பார்த்து அவரை போல் நாம் என் பேச கூடாது என்று. ஒருமையில் பேசுவதற்கு தெரியாதா? அவன் இவன் என்று பேசுவதற்கு. அண்ட புளுகுகளை ஆகாச புளுகுகளை நமக்கு சுட்டு போட்டாலும் வராது. ஏன் என்றால், என் பரம்பரை என் பாரம்பரியம் பவுத்த பாரம்பரியம். என் வளர்ப்பு முறை பவுத்த வளர்ப்பு முறை. என் தந்தை பவுத்தனாக இல்லாமல் இருந்து இருக்கலாம் என் பாட்டன் பவுத்தனாக இல்லாமல் இருந்து இருக்கலாம். ஆனால் என் பாட்டனின் வந்த இரத்த அணுக்கள் என் பட்டனின் வழியில் வந்த என் தந்தையின் இரத்த அணுக்களும் என் தந்தையின் வழியில் வந்த என்னுடைய  இரத்த அணுக்களும் பவுத்த நெறியில் ஊறி வந்த இரத்த அணுக்கள் என்பதை மறந்து விட கூடாது. ஆகவேதான் எல்லோருக்கும் நாம் மதிப்பு கொடுக்கிறோம் குற்றவாளிகளை கூட சமூக விரோதிகளை கூட நாம் மண்ணிக்கிறோம்." தொல். திருமாவளவன் 

"என்னை ஒருவர் கேட்டார் மீண்டு அவருக்கு விருது கொடுப்பீர்களா என்று நான் சொன்னேன் மறுபடியும் அவர் மனம் திருந்தி இந்த மக்களுக்கு பாடுபட்டால் விருது கொடுப்பேன் என்று சொன்னேன். நல்லது செய்கிறபோது பாராட்டுவதுதான் நல்லவனின் கடமை. அதற்காக நீ அப்படி செய்தாயே இப்படி செய்தாயே  என்று உள்ளுக்குள் வஞ்சத்தை வைத்து இருந்து பழி வாங்குவது நல்லவர்களின் செயலாக இருக்க முடியாது. அது பவுத்த வழி வந்தவர்களின் செயலாக இருக்க முடியாது. நான் அடிக்கடி யோசித்து பார்ப்பேன்  எனக்கு இந்த பண்பு எங்கு இருந்து வந்தது எனக்கு இதை யார் கற்று கொடுத்தது என் தந்தை எனக்கு பாடம் எடுத்தாரா? என் தாய் எனக்கு சொல்லி கொடுட்டரா? எங்காவது பவுட்ட மடத்தில் உட்கார்ந்து உபதேசம் கேட்டோமா? எந்த பவுத்த பிக்குவாவது நமக்கு சொல்லி கொடுத்தாரா? யாருமே சொல்லி தரவில்லையே. பிறகு எப்படி இந்த உயர்ந்த பண்புகள் மற்றவர்களை மதிக்க வேண்டும் என்கிற பண்புகள் அணைவரையும் நேசிக்க வேண்டும் என்கிற பண்புகள் குற்றம் செய்கிறவனையும் மாணிக்க வேண்டும் என்கிற உயர்ந்த பண்புகள் எப்படி வந்தது என்று நான் எண்ணி எண்ணி பார்க்கிறேன். நான் பவுத்த வழி வந்தவன் என்கிற ஒரே ஒரு அடிப்படைதான் அதற்கு  காரணம்தான்." தொல். திருமாவளவன்   

3 comments:

  1. முட்டாள் பரவர் பரதவர் பரதா் ஒரே இனம் பறைய௫க்கும் பரவ௫க்கும் சம்மந்தம் கிடையாது முட்டாள்தனமாக பதிவிட வேண்டாம்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. குலத்துக்கு்ம்....சாதிக்கும்....வித்தியாசம் என்ன ? Sakya muni

      Delete